நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.
'கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' என்ற வரி நினைவுக்கு வந்தது. முழுப்பாடலையும் இணையத்தில் தேடிய போது கிடைத்தது
http://kuralamutham.blogspot.com/2009/08/80.html
பள்ளியில் படித்ததில் கருத்து மட்டும் நினைவிலிருந்திருக்கிறது. கருத்தைச் சொல்ல வந்த புலவர் அதற்கு உவமானமாக சொன்னவை மனதைச் சிலிர்க்க வைக்கின்றன.
'நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்கிறது' என்று திகட்டும் அளவிலான சிறப்பையும்
'முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்' என்று முகத்தில் அறையும் ஏளனமும், அம்மம்மா!
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணவில்லை!
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
Wednesday, December 23, 2009
அவ்வையாரின் மூதுரை
இடுகையிட்டது
சிவகுமார் மா
நேரம்
Wednesday, December 23, 2009
10
கருத்துரைகள்
இந்த இடுகையின் இணைப்புகள்
| எதிர்வினைகள்: |
Friday, December 18, 2009
நல்லது செய்தவர்க்கு நல்லது நடக்கும்
நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருதலால்
என்று தருங்கொல் என வேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருதலால்
குறிச்சொற்கள்
மனிதர்,
முன்னேற்றம்
| எதிர்வினைகள்: |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)