வெள்ளி, ஜூன் 10, 2011

Thank You, Chief Minister!

"ஈழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழுக்கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார்."

"சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்."

"இலங்கை ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற இத்தீர்மானம்தான் எங்களுக்குக் கிடைத்த கொழுக்கொம்பாக உள்ளது. இதைக் கொண்டுதான் எமது மக்களின் உரிமைக்கும், உயர்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்று சிறீதரன் கூறினார்."

"தமிழர்களின் பாரம்பரிய பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை சிறீதரன் விரிவாக எடுத்துக் கூறினார்."

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/10/1110610049_1.htm

காங்கிரசைத் தோற்கடித்த மக்களுக்கு வேலூரில் நன்றி தெரிவிப்பு (ஜூன் 4, 2011)

காங்கிரசு எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கு கண்ணனின் இப்படி ஒரு அறிவிப்புடன் புறப்பட்டது இளைஞர் படை இளைஞர் படை 


"நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் உலக "தமிழ்மக்களின் எதிரியான ஞானசேகரனை" தோல்வியடைய செய்த வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாகவும் மற்றும் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் ஈழதமிழர் படுகொலையும், தமிழக மீனவர் படுகொலையும் தான் முக்கியகாரணம் என்ற கருத்தினை தொடர்ந்து மக்களிடம் கொண்டுச்செல்லும் நோக்கத்துடன் வருகிற 5 ஆம் தேதி"காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து வேலூர் வீதிகளில் பரப்புரை செய்ய உள்ளோம்.

2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்த...
550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றழித்த...
கட்ச தீவினை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த...
அயோத்தி கரசேவகர்களுக்கு துணைபோன...
இந்தி எதிர்பாளர்களை கொன்றழித்த...
தமிழ் தேசிய வளங்களை கொல்லையடித்துக்கொண்டிருக்கும்...
காங்கிரசை தமிழ் மண்ணிலேருந்து விரட்டியடியுங்கள்! விரட்டியடியுங்கள்!


தமிழர்களுக்கு தீங்கு செய்ய முற்படும் எந்தகட்சியானலும், அவர்களுக்கு இதே நிலைதான் என தமிழர்கள் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தினையும் பரப்ப உள்ளோம்.
மக்களை சந்திக்கும் இந்த வாய்ப்பினில் தோழர்களும் தவறாமல் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!"



புகைப்படங்கள் :

 





































சனி, ஜூன் 04, 2011

மெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்!...





இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத்தினரோடு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம்.

ஒவ்வொரு கட்சியினரும் அமைப்பினரும் இனப்படுகொலைகளைக் கண்டித்து பல்வேறு பொதுக்கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருந்தாலும், பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை என்பதை அறிந்தோம். பொதுமக்களுக்கும் இதுபோன்ற ஒரு ஆதங்கம் இருப்பதையும் அறிய முடிந்தது. இந்தச் சூழலில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை சாதி, மத, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்ப்பட்டு ஏற்பாடு செய்யலாம் என்று தோன்றியது.

இது தொடர்பாக பல்வேறு அமைப்பினரோடும் ஆலோசனை செய்தோம். ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் என்றும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு, அதுவும் அனைத்து நண்பர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கான நாளாக ஜூன் 26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட நாளான ஜூன் 26 அன்று நமது அஞ்சலியை செலுத்துவோம்.

இந்த நிகழ்வினை பலவேறு தரப்பினரும் தாமே முன்வந்து முன்னெடுத்தால் பெருமளவிலான மக்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் இது நமது முன்னெடுப்பு என்று முன்வந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களோடு பேசி அவர்களையும் வரச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டினர், அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர், மற்ற நண்பர்கள் என்று அனைவரிடமும் பேசி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு அனைவரையும் வரச்செய்யுங்கள்.

இணையத்திலும் பல்வேறு கட்டங்களில் இதற்கான பணிகளை மேற்கொள்ளவேண்டும். Twitter Campaign எப்பொழுது தொடங்குவது என்பதை ஆலோசனை செய்து தொடங்குவோம். அதுவரை நீங்கள் அனுப்பும் ட்விட்டுகளில் #June26Candle என்னும் Hash Tag இணை சேர்த்துக்கொள்ளுங்கள்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: மெரினா கண்ணகி சிலை.

நன்றி : கும்மி 

வேண்டுகோள் : இந்தப்பதிவை பதிவர்கள் அனைவரும் தங்கள் தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .