புதன், டிசம்பர் 23, 2009

அவ்வையாரின் மூதுரை

நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம்.

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' என்ற வரி நினைவுக்கு வந்தது. முழுப்பாடலையும் இணையத்தில் தேடிய போது கிடைத்தது
http://kuralamutham.blogspot.com/2009/08/80.html

பள்ளியில் படித்ததில் கருத்து மட்டும் நினைவிலிருந்திருக்கிறது. கருத்தைச் சொல்ல வந்த புலவர் அதற்கு உவமானமாக சொன்னவை மனதைச் சிலிர்க்க வைக்கின்றன.

'நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்கிறது' என்று திகட்டும் அளவிலான சிறப்பையும்
'முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்' என்று முகத்தில் அறையும் ஏளனமும், அம்மம்மா!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணவில்லை!

வெள்ளி, டிசம்பர் 18, 2009

நல்லது செய்தவர்க்கு நல்லது நடக்கும்

நன்றி ஒருவற்கு செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரை
தலையாலே தான் தருதலால்