வியாழன், செப்டம்பர் 27, 2007

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

ஊர்க் கோபுரத்தில் ஏறி உலகம் உய்ய மந்திரம் உரைத்த பெரியவர் போல கல்விக்கு விளக்காக பாட நூல்களை இணையத்தில் வெளியிட்ட தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்துக்கும், அதை எல்லோரும் அறியச் செய்த சிவபாலன் அவர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

சிவபாலன்: வாவ்! கலக்கும் தமிழகம்!!

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007

ஒரு லட்சம் கோடீஸ்வரர்கள்+83 கோடி பேருக்கு நாளுக்கு இருபது ரூபாய்கள்

மெர்ரில் லைஞ்ச்/கேப்ஜெமினியின் அறிக்கை ஒன்றின் படி இந்தியாவில் மில்லியன் அமெரிக்க டாலர்கள் (4 கோடி ரூபாய்கள்) சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாம்.

'இவர்கள் எல்லாம் வட்டி கட்டும் போது, வீடு கட்ட செலவழிக்கும் போது, வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் போது மீதி நூற்றுப் பத்து கோடி பேருக்கும் சுபிட்சம் கிடைத்து விடும்'. அந்த நம்பிக்கையில்தான் நிதி அமைச்சரும், பிரதம மந்திரியும் 9% வளர்ச்சியைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது?

(இந்தச் சுட்டி டெக்கான் குரோனிக்கிளின் செப்டம்பர் 23, 2007ன் பக்கத்தைச் சுட்டியது. நாள் மாற பக்கமும் மாறி விட்டது.)்).

யாஹூ
இந்தியன் எக்சுபிரசு
இந்து நாளிதழ்
இன்னொரு சுட்டி


83 கோடி இந்தியர்கள் ஒரு நாளைக்கு இருபது ரூபாய் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்களாம். முறை சாராத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 79 பேர், தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பினர்களில் நூற்றுக்கு 88 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் நூற்றுக்கு 80 பேர். நூற்றுக்கு 84 இசுலாமியர்கள் இவ்வளவு வருமானத்தில் தமது தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

'அது எப்படிங்க இருக்க முடியும். இருபது ரூபாய் வருமானத்தில் யார் வேலை பார்க்கிறாங்க?' இது ஒரு நண்பரின் கேள்வி.

மாதம் இரண்டாயிரம் ரூபாய்கள் வருமானம் வரும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய்கள் கூடத் தேறாது. அப்படி பல குடும்பங்கள் சென்னை நகரிலேயே இருக்கின்றன. கிராமங்களிலும். சிறு நகரங்களிலும் இன்னும் குறைந்த வருமானம் இருக்கலாம்.

1990களில் ஆரம்பித்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பணக்காரர்களின் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறது. ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கிறது. ஒழுகிப் போகும் வித்தை நடக்கவில்லை.

நம்மைச் சுற்றி நடப்பது மட்டும் உண்மை இல்லை. நகரங்களுக்கு வெளியேயும், மென்பொருள் துறைக்கு வெளியேயும் இந்தியா வாழ்கிறது. போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 07, 2007

தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களே - வாருங்கள்

இந்தியாவில் என்று தகவல் தொழில் நுட்பப் பொருட்கள் உருவாக்கி விற்கும் துறை தளைக்கும்?

"இந்தியர்கள் எப்போதும் வெளி நாடுகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைப் பயன்படுத்த மட்டும் செய்தால் போதாது. உள்ளூரிலேயே புதிய கருத்துக்கள் உருவாக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் இந்திய பொருளாதாரமும் தொழிலும் முன்னேற முடியும்.

India has to become a bigger investor in ideas, and that's research and development, creation of the next generation of ideas to move its economy, its industry forward. You can't continue to take ideas generated from other parts of the world and bring them to India. You have to start creating your own ideas. "

-- இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரேக் பெரட்.

'நம்ம ஊரில் அரசியல் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை. எல்லாம் சரியான பிறகு இங்கு வேலை பார்க்கிறோம். அது வரை, மேலை நாடுகளுக்குப் போய் எமது திறமைகளை, எமது சமூகம் அளித்த திறமைகளை அந்த சமூகங்களுக்கு பணி புரிய பயன்படுத்தி பொருள் ஈட்டுகிறோம். என்ன செய்து கடனைத் தீர்ப்பது என்று முடிந்த அளவு இந்தியாவில் இயங்கும் தன்னார்வலர் நிறுவனங்களுக்கு நன்கொடைகள் கொடுத்தும், உதவி செய்தும் தாகத்தைத் தணித்துக் கொள்கிறோம்.'

ஊர் கூடி.. 1 - காலக்கண்ணாடி
டாலர்கள் வேண்டாம், உங்கள் திறமை வேண்டும

திங்கள், செப்டம்பர் 03, 2007

தமிழ்ச் சாதியை என்செயக் கருவி யிருக்கின் றாயடா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.



நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ?

தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?

கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.

ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழச் சாதி தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும்
இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார்,
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்,
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்,

-- பாரதியார்

வேண்டுகோள்

  1. டோண்டு சார் வேண்டுமென்றே குத்திக் கிளறும் நோக்கத்தோடு எழுதும் இடுகைகளை நிறுத்தவும்
  2. போலிக் குழுவினர் தாம் இதுவரை போட்ட எல்லா ஆபாச இடுகைகளையும், பின்னூட்டங்களையும் நீக்கவும்
  3. செல்லா தமிழில் எழுதுவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொள்ளவும்

கேட்டுக் கொள்கிறேன்.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2007

நானாக இருப்பேன்!!

என் சுயத்தை வெளியில் தேடாமல் என்னுள்ளேயே வளர்த்துக் கொள்வேன்.

யாரும் என்னை அழ விட அனுமதிக்க மாட்டேன் (தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர)

பத்திரிகைகளின் அட்டையில் வரும் உருவங்கள் போல இருப்பதுதான் அழகு என்று இல்லை

யாரும் என்னைக் கடுப்படிக்க முடியாது.

"உன் வாழ்த்து அட்டைகளை நீயே வச்சுக்கோ!"

என்னை நான் காதலிக்கிறேன்.

குண்டான பெண்களுக்கான உள்ளாடைகள் விற்கும் கடைக்கான விளம்பரத்தில் ஒரு குண்டுப் பெண்ணின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்த வாசகங்களின் குத்துமதிப்பான தமிழாக்கம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - பெங்களூர் இணைப்பில் ஏப்ரல் 11, 2007 அன்று படித்தது.