வெள்ளி, ஏப்ரல் 15, 2011

கற்றதும் பெற்றதும் - வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு முன்னனி

மின்னஞ்சலில் அனுப்பியவர் சென்னையில் வசிக்கும், வேலூர் பரப்புரையில் பொறுப்பேற்று பணியாற்றிய திரு கண்ணன்

காங்கிரசு எதிர்ப்பு முன்னணி

நடந்து முடிந்த 2011 தேர்தலில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 20 வருடமாக சட்டமன்ற காங்கிரசு வேட்பாளராக இருந்த "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரன் 5 வது முறையாக போட்டியிடும் வேலூர் சட்டமன்ற தொகுதியில் "காங்கிரசு எதிர்ப்பு முன்னனி" என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டதில் "சர்வதேச தமிழர் கழகம்",  "சேவ் தமிழ் இயக்கம்",  "தமிழ் தேசிய மாணவர் இயக்கம்" மற்றும் "தமிழக இளைஞர் எழுச்சி பாசறை" போன்ற அமைப்புகளின் பங்கு முக்கியமானதாகும்.

கடந்த 2ஆம் தேதியில் "உலக தமிழனத்தின் எதிரி" ஞானசேகரனுக்கு எதிராக குறிப்பாக நாங்கள் பரப்புரையை தொடங்கிய காரணத்தை நாங்கள் சொல்லதேவையில்லை. இந்த கடும் பரப்புரை தொடங்க எங்களுக்கு உறுதுணையாகவும் எல்லா உதவிகளையும் செய்து கொடுத்த சுயேச்சை வேட்பாளர் மற்றும் தேர்தலை புறக்கணித்த அரசியல் கட்சியின் அமைப்பை சார்ந்தவர்களுக்கும்"கருஞ்சட்டைகாரர்" அமைப்பை சார்ந்தவர்க்கும், தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளார்க்கும் நாங்கள் எங்களுடைய வணக்கத்தையும் நன்றியினையும் கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளோம். மேலும் எங்களுக்கு தங்க இடம் கொடுத்த "மெளன புரட்சியாளர்" பேராசிரியர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

முதல் நாள் சத்துவாச்சாரியில் குட்டி யானையில் ஒற்றை ஒலி பெருக்கி மற்றும் துண்டறிக்கையுடன் தொடங்கிய பரப்புரை மெதுவாக சூடுபிடித்ததற்கு காரணம் மக்கள் ஆதரவுதான்.

"விரட்டி அடிப்போம்!, விரட்டி அடிப்போம்!
தமிழின விரோத காங்கிரசு கட்சியை
விரட்டி அடிப்போம்!",

தோற்கடிப்போம்!, தோற்கடிப்போம்!
தமிழின விரோதி ஞானசேகரனை
தோற்கடிப்போம்!",

"கொத்து கொத்தாய் மக்களைய் கொன்ற
இன அழிப்பு நடத்திய
ஆயுதம் கொடுத்து உதவி செய்த
சிங்களவனின் கூட்டாளி!
தமிழர்களின் பகையாளி!
காங்கிரசை தோற்கடிப்போம்!",

"கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
தமிழ்த்தேசிய வளங்களேல்லாம்!
கொள்ளை போகுதே!, கொள்ளை போகுதே!
ஓட்டு போட்டு கோட்டைக்கு அனுப்பினோம்
20 வருடமாய் கோட்டைக்கு அனுப்பினோம்
ஞானசேகரனை கோட்டைக்கு அனுப்பினோம்
கேட்டதுண்டா! கேட்டதுண்டா!
ஞானசேகரன் கேட்டதுண்டா!
கேட்கவில்லை!, கேட்கவில்லை!
ஞானசேகரன் கேட்கவில்லை!
பாலாற்று தண்ணியை கேட்கவில்லை!
பென்னையாற்று மணற் கொள்ளையை கேட்கவில்லை!
காவிரி நீரை கேட்கவில்லை!
தமிழக மின்சாரத்தை கேட்கவில்லை!
நரிமண எண்ணெய்யை கேட்கவில்லை!
நெய்வேலி நிலக்கரியை கேட்கவில்லை!
அவன் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்!
தமிழ் மக்களின் உயிர் மட்டுமே!
ஈழத்தமிழர்களின் உயிர் மட்டுமே"!!!

என்ற முழக்கங்களோடு வேலூர் விதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் துண்டறிக்கைகளுடன் பரப்புரையை தொடங்கினோம்.

இரண்டாவது நாள் வாகனத்தின் இருபக்கங்களிலும்(வலது,இடது) பாதகைகள் கட்டப்பட்டன. ஒரு பக்கத்தில் ஞானசேகரனையும் மறுபக்கத்தில் காங்கிரசை எதிர்த்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதேவாகனத்தில் கூடுதலாக இன்னொரு ஒலிவாங்கியும், ஒலி பெருக்கியும் சேர்க்கப்பட்டன.

'நாங்கள் உங்களிடம் ஒட்டு கேட்டு வரவில்லை, இந்த கட்சிக்கு போடுங்கள், இந்த சின்னத்திற்கு போடுங்கள் என்று கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள் இங்கே பாலாறும், தேனாறும் ஓடும்எனச்சொல்லவில்லை.'

'1 1/2 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத்திலே 2 லட்சம் மக்களை கொன்ற காங்கிரசு கட்சியை துரத்தியடியுங்கள்.'

'20 வருடமாய் ஞானசேகரனை கோட்டைக்குஅனுப்பினீர்கள். அவர் இந்த வேலூர் மக்களுக்கு செய்ததுதான் என்ன?'

'பாலாற்றிலே தண்ணீர் வர போராடினாரா? ஆனால் உண்ணாவிரதம் இருந்து நம்மையெல்லாம் ஏமாற்றினார். ஆந்திராவிலே காங்கிரசுதான் ஆள்கிறது, ஞானசேகரனும் காங்கிரசுதான், ஏன் இவர் அவர்களிடம் பேசி தண்ணீர் வர வைக்க முடியாதா?'

'பென்னை ஆற்றிலே மணற்கொள்ளை, என்றாவது அம்மணற்கொள்ளையை தடுக்க முயற்சி செய்திருக்கிறாரா? ஆனால் அந்த மணற்கொள்ளையில் உரிய பங்கை பெற்றுக்கொள்வதில் மட்டும் கவனமாகஇருந்துகொண்டிருக்கிறார்.'

'வேலூர் மக்கள் தினம் தினம் சந்தித்து கொண்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனையை தீர்க்க முயற்சித்ததுண்டா?'

'அறிவு நூற்பாலையை புதிப்பித்திருந்தால் பல்லாயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்குமே? செய்தாரா இந்த ஞானசேகரன்!!!'

'காகிதப்பட்டறையில் உள்ள டான்சி நிறுவனத்தை நடத்த ஏதாவது முயற்சி செய்ததுண்டா? ஆனால் பஞ்சமி நிலங்களை தகாத முறையில் அடைந்து அதனை அவருடைய உறவினர்களுக்கு விற்றுவிட்டார்.'

'சத்துவாச்சாரி ஆர்.டி.ஒ அலுவலகச்சாலையில் வர இருந்த மேம்பாலத்தை, சுயபயன்பாட்டுக்காக அவர் வீட்டருகே போட்டுக்கொண்டவர்தானே இந்த ஞானசேகரன், அந்த மேம்பாலம் அங்கே இல்லாததால்இதுவரை 144 உயிர்கள் பலியாகியுள்ளனவே. '

'புது பொலிவுடன் அமைய இருந்த வேலூர் பேருந்து நிலையத்தை, அவருடைய சுயலாபத்திற்க்காக சிறிய அளவில் அமைத்து விட்டார்,'

'சுற்றுச்சுழலை கவனத்தில் கொள்ளாமல் பன்னாட்டுநிறுவனங்களிடம் கையுட்டு வாங்கி முறையான அனுமதி பெறாமல் தொழிற்சாலைகள் அமைந்திட காரணமாக இருந்தார்.'

'சாதாரண குடும்பத்தில் பிறந்த ஞானசேகரனின் சொத்துமதிப்பு இன்று 2000 கோடிக்கு மேல், எப்படி அவரால் இவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது. அவர் என்ன களை பறித்தாரா, நாத்து நாட்டாரா?நம்முடைய வரிப்பணத்தை கொள்ளையடித்து சம்பாறித்ததுதானே தமிழர்களே!!!'

'வேலூரில் அமைய இருந்த பல்கலைகழகங்களை கூட பணம் பெற்றுக்கொண்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்தவர்தானே, இந்த ஞானசேகரன்.'

'இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கிட ஐ.டி நிறுவனங்கள் அமைக்க முயற்சித்தாரா!!!'

'ஞானசேகரன் பகுதி பிரச்சனைகளையும் தீர்க்கவில்லை, பேசவில்லை. அப்படியென்றால் தமிழ்நாட்டு பிரச்சனையையாவது பேசியிருக்கிறாரா?'

'உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதித்து காவிரியில் தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசுக்கு எதிராக பேசியிருக்கிறாரா!!!'

'20 வருடமாய் வேலூரின் சட்டமன்ற வேட்பாளராய் இருந்த ஞானசேகரனை கஸ்பா பகுதி வாழ்மக்கள் பள்ளிகூடம் கட்டி தாராததால், அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து ஞானசே கரனை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பெண்கள் செருப்பு, முறம், விளக்குமாற்களை வைத்துக்கொண்டு எதிர்ப்புகளை பதிவுச்செய்தார்கள்.'

'சாவு விட்டிலே பிணமாகவும், திருமண விட்டிலே மாப்பிள்ளையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஞானசேகரனை தோற்கடிப்போம்.'

'இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? ஆனால் அவன் கூட குஜாராத் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டினார்கள் என சுட்டுக்கொன்றதிலையே, இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, அண்டை நாடு என கூறிக்கொள்கிறோம், அவன் தானே நம்முடைய தமிழக மீனவர்களை தினம் தினம் சுட்டுகொண்டிருக்கிறான் தமிழர்களே, '

'இதைப்பற்றி என்றைக்காவது ஞானசேகரன் கவலைபட்டதுண்டா?'

'ஈழத்து படுகொலையையும் பேசமறுக்கிறார், "மாவீரன்" முத்துக்குமரன் மற்றும் "மாவீரன்" சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்கின்றார். அப்படியென்றால்அவர் சட்டசபையிலே பேசியதெல்லாம் என்ன? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது, பயங்கரவாதம் பெருகிவிட்டது, தீவிரவாதம் வளர்ந்து விட்டது, ஈழதமிழர்களை கொன்றழிக்கவேண்டும் என்றல்லவா பேசினார்.'

"உலக தமிழர்களின் எதிரியான" ஞானசேகரனை தமிழர்களாகிய நாம் வீட்டுக்கு அனுப்பவேண்டும் தமிழர்களே வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

'வெள்ளைக்காரன் போனான், கொள்ளைக்காரன் வந்தான் என்பார்கள். வெள்ளைக்காரனாவது பள்ளி, மருத்துவமனை, தொழிற்நிறுவனங்கள் நிறுவினான். இந்த வெள்ளைக்காரனுக்கு பிறந்த இந்த கள்ளப்பிள்ள காங்கிரசு இந்தியாவையே பட்டாபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறான். முதலில் நேரு, இந்திரா, ராஜிவ் இப்பொழுது சோனியா நாளை ராகுல். இவர்களேன்ன மன்னர் ஆட்சி நடத்துகிறார்களா!!!'

'ஈழத்தில் மட்டும் தமிழர்களை இவர்கள் கொன்றழிக்கவில்லை, காசுமீரத்திலே 70000 மக்களை கொன்றழித்தது மட்டுமல்லாமல், அங்கே 500000 ராணுவத்துருப்புக்களையும் நிறுத்திவைத்துள்ளார்களே!!!' பஞ்சாபிலே சீக்கியர்களை கொன்றழித்தது இந்த காங்கிரசு. வட கிழக்கு பகுதிகளில் அப்பாவி பழங்குடி மக்களை "மாவோஸ்டுகள்" என்ற பெயரிலே பச்சைவேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது இந்தகாங்கிரசு.'

'தமிழக மீனவர்படுகொலைக்கு காரணமாக இருந்துக் கொண்டிருப்பது இந்த காங்கிரசு.'

'பாபர் மசூதி இடிப்பு மதவாத சக்திகளுடன் கைக்கோர்த்த காங்கிரசை தடைசெய்வோம். கொலைக்கார காங்கிரசை தடைச்செய்ய வேண்டும், பயங்கரவாத காங்கிரசை தடைச்செய்ய வேண்டும்'

என தோழர்களின் குரல்கள் மண்டி தெரு, பழையபேருந்து நிலையம், அலங்கா, கஸ்பா, திருவள்ளுவர்சிலை, காகிதப்பட்டறை, பெருமுகை, ரங்காபுரம், சி.எம்.சி மருத்துவமனை இன்னும் சில பகுதிகளில் 9ஆம் தேதி இரவு வரை ஒலித்துக்கொண்டே இருந்தது.

6 ஆம் தேதி நாங்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் அளித்தது. திணமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, இந்து, நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தமிழன், ஜெயா, சன் செய்தி நிறுவனங்களுக்கு காங்கிரசு எதிர்ப்பு கருத்துகளை வழங்கினோம்.

இம்மாபெரும் பணிக்கு உண்மையில் மக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்தது, குறிப்பாக துண்டறிக்கையை அனைவரும் படித்தனர், கீழே போட்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. பொதுமக்களே எங்களுக்கு குளிர்பானங்கள், தேநீர் மற்றும் திண்பண்டங்களை கொடுத்து மகிழ்ந்தார்கள்.

ஒர் அம்மா, 'நீங்க எத்தனை பேர் இருக்கிறீங்க'னு கேட்டாங்க.
'ஏம்மா கேட்கறீங்க'னு கேட்டோம்.
'அட சும்மா சொல்லுப்பா'னு கேட்டாங்க.
'நாங்க பத்துபேர் இருக்கிறோம்'னு சொன்னோம்.

உடனேஎல்லோருக்கும் குளிபானம் வாங்கி கொடுத்துட்டு,
'என்னல இதத்தான் செய்ய முடியும் தம்பி. நீங்க எல்லாம் செய்யறது பெரிய வேலை தம்பின்'னு சொல்லிட்டு போயிட்டாங்க.

பார்ப்பனர் ஒருவர் எங்கள் அருகே வந்து,
 'நீங்க நல்ல வேலை செய்றேல், ஆனா எங்களத்தான் சேர்த்துக்க மாட்றேல், நேக்கு சீமான் ரொம்ப பிடிக்கும். நீங்கதான் முதலியார், செட்டியார், வன்னியர்சொல்றேல். நாங்க மட்டும் தான் தமிழன்னு சொல்றோம்' என்றார்.

நாங்கள் அவரிடம் கூறினோம், 'அப்படின்னா எங்களோட வந்து துண்டறிக்கை கொடுங்களேன்'னு கேட்டோம்.

அவர் 'நாளை வர்ரேன்'னு சொன்னார். ஆனால் வரவில்லை.

இரண்டு பெரியவர்கள் 'நீங்கள் செய்யும் இந்த பணியினை பராட்டுகின்றோம், மேலும் இது போன்ற இளைஞர்களையெல்லாம் ஒன்று சேருங்கள்' என்றார்.

காக்கிசட்டைக்கூட எங்களுக்கு உதவி செய்தது, சில இடங்களில் எங்களுடன் தோழமையுடன் பழகினார்கள். சில இடங்களில் பொது மக்களே ஒலிவாங்கியை வாங்கி ஞானசேகரனையும் காங்கிரசையும் தாறுமாறாக விமர்சித்தார்கள்.

நாங்கள் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போது, எங்களுடைய வாகனம் அருகே பரப்புரை செய்துகொண்டு வந்த வேறுகட்சியை சேர்ந்த மற்றொரு வாகனத்தை பொதுமக்களே பேச்சை நிறுத்தும்படி தடுத்து நிறுத்தினார்கள்.

ஒரு சிலர் நன் கொடை கொடுக்க முன்வந்தார்கள். அச்சகம் மற்றும் பாதகை செய்யும் இடங்களிலும் கூட எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். எங்கள் வாகன ஒட்டிகளான சிறு பொடியன்கள், எந்த வித சலிப்பும் இல்லாமல் உற்சாகத்துடன் எங்களுடன் இணைந்துப் பணியாற்றினார்கள்.

மணி ஒசைவரும் முன்னே, யானை வரும் பின்னே என்பார்கள், அதே போல எங்களுடைய பறை இசை எல்லோரையும் உசுப்பி விட்டது.(எங்களில் யாருக்குமே முறையாக பறை இசைக்க தெரியாதுஎன்பதுதான் முக்கியமான ஒன்று)

ஞானசேகரன் எங்களை முடக்க பல வழிகளிள் தொல்லை கொடுக்க முயன்று கொண்டே இருந்தார். முதலில் எங்கள் வாகனத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றி முடக்க முயற்சித்தது. எங்களிடம் எல்லாஆவணங்களும் சரியாக இருந்ததால் உடனே வாகனத்தை மீட்டு வந்து விட்டோம்.

இரண்டாவது முறையாக பரப்புரை செய்யும் அனைத்து பகுதிகளையும், தெருக்களின் பெயர்களையும் மற்றும் நேரம் முதல் கொண்டு எழுதி கொடுக்க வேண்டும் என்று காவல்துறை எங்களுடைய பரப்புரையதடுக்க முயற்சித்தார்கள். நாங்கள் உடனே அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கு உடனே தகவல் கொடுத்தோம், வேலூர் தேர்தல் அதிகாரியிடமும் முறையிட்டோம். செய்தி அறிந்த உடன்பத்திக்கையாளர்களும் மற்றும் உள்ளூர் தோழமை அமைப்புகளும் உடனே பிரச்சனைக்கூரிய இடத்திற்கு வந்து காவல்துறையிடம் பேசிமுடித்தார்கள். அதன் பின்பு நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம்.

நடிகர் விஜய் ரசிகர்களும் எங்களுக்கு பேராதரவு தந்தார்கள், குறிப்பாக நடிகர் விஜய் நாகபட்டினத்தில் மீனவர்களுக்காக நடத்திய பொதுகூட்டம் இவர்களைமட்டுமல்ல பொதுமக்களையும்கவனிக்க வைத்துள்ளது.

இந்த பரப்புரையின் மூலம் நாங்கள் சில விடயங்களை உற்று கவனித்தோம், பல விடயங்களை மக்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். சென்னையில் இருந்து 150 கி.மி தொலைவில் உள்ள வேலூர்மக்களுக்கு ஈழப்பிரச்சனை முழுமையாக சென்றடையவில்லை என்பதே வருத்தமான ஒன்று.

ஒரு சிலர் 'ஈழம் எங்கிருக்கிறது, ஈழம் என்றால் என்ன? எப்போது 2 லட்சம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.'

வேறு சில இயக்கங்கள் ஈழப்போரின் புகைப்படங்களைப் போட்டு பரப்புரை செய்தார்கள், அந்த துண்டறிக்கைகள் பொதுமக்களை பெரிதும் பாதித்தது. துண்டறிக்கைகளை பார்த்த உடனே கீழே போட்டுவிட்டார்கள், ஒரு சிலர் 'இது என்ன விபத்தா' என்று கேட்டார்கள்.

பெரும்பான்மையான மக்கள் சீமானை அறிந்து வைத்துள்ளார்கள். எங்களைப் பார்த்து பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள், 'சீமான் கட்சிக்காரங்க வந்துட்டாங்க. நிறைய தொலைப்பேசி அழைப்புகள் சீமான் எப்ப வரார், சீமான் எத்தனை மணிக்கு வரார்.'

இதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது சீமானை மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள், சீமானும் மக்கள் நேசிக்கும் போராட்டங்களை கையில் எடுத்து விதியில் இறங்கி போராடினால், நிச்சயம் அதுமக்கள் இயக்கமாக மாறும்.

வேலூரில் நடைப்பெற்ற சீமான் பொதுகூட்டத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், சரியாக 9.15 காங்கிரசை எதிர்த்து இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள்என்ற உடனே கூட்டம் மள மளவென களைய ஆரம்பித்துவிட்டது. 9 ஆம் தேதியே (சனிக்கிழமை இரவோடு) நாங்களும் பரப்புரையை முடித்துக்கொண்டோம்.

வேலூர் பயணம் எங்களுக்கு பெரிய பாடம், நிறைய மக்களிடமிருந்தே நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த பரப்புரையில் வேலூர் பகுதியை சார்ந்த தோழர்களை விட மற்றப்பகுதி தோழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. நாங்கள் வெறும் ஈழப்பிரச்சனையே மட்டும் பேசியிருந்தால் நிச்சயம் எங்களுக்கு மக்களிடம் இந்த வரவேற்பு இருந்திருக்காது. நாங்கள் வேலூர்வாழ்மக்களின் பிரச்சனைகளை பேசியது மக்களுக்கும் எங்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைத்தது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் நிச்சயம் ஒரு இளைஞராவது மக்களுக்காக உழைக்கவும், மக்களுக்காக வீதியிலே இறங்கி போராடவும் தயாராக பாதைதெரியாமலும், சரியான தலைமையும் இல்லாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைய சமுதாயத்தை நாம் கண்டெத்தால், நிச்சயம் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

மக்கள் தலைவர்கள் தானாக உருவாகுவதில்லை, மக்கள்தான் தனக்கான தலைவர்களை உருவாக்குகிறார்கள்.

"மக்களிடம் செல்வோம்,
மக்களிடம் கற்றுக்கொள்வோம்,
மக்களை பயிற்றுவிப்போம்,
மக்களை அரசியல் படுத்துவோம்..."

பல்வேறு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் இந்த பரப்புரையில் கலந்துக்கொண்ட மறைமுக ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!!!!!




















11 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

நண்பர்களின் உழைப்பு வெற்றிக் கனியாக வர வேண்டும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காங்கிரஸ்க்கு 5 சீட் கிடைச்சாலே ஆச்சரியம் தான்.. வாஸ் அவுட் ஆனா இன்னும் நல்லாருக்கும்

வெண்தாடிதாசன் சொன்னது…

இந்த நல்ல முயற்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் நாளே நம் பொன்னாள்.

மா சிவகுமார் சொன்னது…

நண்பர்களே,

வெற்றிக்கனி என்பது எதைப் பொறுத்திருக்கிறது?

காங்கிரசின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைய ஆரம்பித்தால், 'காங்கிரசுடன் கூட்டு வைத்தால் நமது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்' என்று மற்ற கட்சிகள் நினைக்க ஆரம்பித்தால் மாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

காங்கிரசின் வாக்கு சதவீதம் குறைவதற்கு காரணம் தமிழர் எதிர்ப்பு போக்கு என்பதும் பேசப்பட வேண்டும். இன்று வரை ஊடகங்களில் இது பற்றி பேசப்படவே இல்லை.

காங்கிரசு எதிர்ப்பு இயக்கங்கள், 63 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்தி பிரச்சாரத்தின் தாக்கம் பற்றி அறிக்கை வெளியிட்டால் பலனுள்ளதாக இருக்கும்.

K.R.அதியமான் சொன்னது…

காங்கிரஸ் ‘மட்டும்’ தான் துரோகி / எதிரியா ? ஏன் அதன் long time partner ஆன தி.மு.க பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள் ?

காங்கிரஸ திட்டற அளவு கருணானிதிய திட்ட மாட்டேங்கிறீங்க. ஈழப்பிரச்சனையில் காங்கிரஸின் நிலை எதிர்ப்பார்த்ததுதான். பெரிய ஆச்சிர்யம் இல்லை. ஆனால் தி.மு.க ? மேலும் ஊழல்கள் பற்றி ?

// நம் இனத்தினை அழித்த காங்கிரசினை தோற்கடியுங்கள்./// காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் தோற்று, ஆனா தி.மு.க தான் போட்டியிடும் தொகுதிகளில் ஜெயித்தால் அப்ப ஓகே யா ?

காங்கிரஸ் அரசில் பல முக்கிய பதிவிகளை அனுபவிக்கும் தி.மு.க விற்க்கு ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசு எடுத்த நிலைபாட்டில் சம பொறுப்பு, moral and legal responsiblity இல்லையா என்ன ?

காங்கிரஸ்க்கு பதில் பி.ஜெ.பி அன்று ஆட்சியில் இருந்திருந்தாலும், இந்தியாவின் நிலைபாடு அதே போல் தான் இருந்திருக்கும். சிங்கள அரசுக்கு இன்னும் கூட அதிக உதவிகள் புரிந்திருப்பார்கள்.

anyway, it is a relief that LTTE was wiped out ; now there will be no more blood shed and war and human shields and forceful recruitment of children, etc

மா சிவகுமார் சொன்னது…

//காங்கிரஸ் ‘மட்டும்’ தான் துரோகி / எதிரியா ? ஏன் அதன் long time partner ஆன தி.மு.க பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள் ?//

முதலில் காங்கிரசைக் களை எடுப்போம். அதன் பிறகு மாநிலக் கட்சி பயிர் வளர்ப்போம் என்பது அணுகுமுறை.

//காங்கிரஸ்க்கு பதில் பி.ஜெ.பி அன்று ஆட்சியில் இருந்திருந்தாலும், இந்தியாவின் நிலைபாடு அதே போல் தான் இருந்திருக்கும். சிங்கள அரசுக்கு இன்னும் கூட அதிக உதவிகள் புரிந்திருப்பார்கள்.//

இருக்கலாம். காங்கிரசு எதிர்ப்பு என்றால் பி ஜெ பி ஆதரவு இல்லை. மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில். தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் தேவையில்லை என்பது நிலைப்பாடு.

//anyway, it is a relief that LTTE was wiped out ; now there will be no more blood shed and war and human shields and forceful recruitment of children, etc//

இது போல எளிமையான சமன்பாடுகளை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்.

தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இருந்ததால் இரத்தம் சிந்தியதா? சிங்கள பேரினவாத அரசின் கொள்கைகளினால் இரத்தம் சிந்தியதா?

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்பே இலங்கையில் இனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

K.R.அதியமான் சொன்னது…

//இது போல எளிமையான சமன்பாடுகளை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்.

தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் இருந்ததால் இரத்தம் சிந்தியதா? சிங்கள பேரினவாத அரசின் கொள்கைகளினால் இரத்தம் சிந்தியதா?

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்பே இலங்கையில் இனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.////

இல்லை மாசி. உண்மையை தான் பேசுகிறேன். ஒரு காலத்தில் கண்முடித்தனமாக புலிகளை ஆதரித்தவன் தான். ஆனால் disillusionment என்ற சொல்லுக்கு போக போக அர்த்தம் தெரிந்து கொண்டேன். அன்டன் பாலசிங்கம் பேச்ச பிரபாகரன் கேட்கவில்லை என்பதே பெரிய சோகம். போர் முடிந்தபின் இப்ப எறிகுண்டுகளுக்கு வேலை இல்லை. சாவுகள் இல்லை.
அய்ந்தாம் ஈழ போருக்கு அங்கு எந்த மடையனும் தயாரில்லை. இணையத்தில் மட்டும் தான் குரல்கள்.

ஈழ பிரச்சனையை 1983இல் இருந்து அவாதினித்து வருகிறேன். 80களில் பெரிய உதவிகளை செய்திருக்கிறோம். பல இதர போராளி குழு உறுப்பினர்களை சந்தித்திருக்கிறேன். மேலும் பல கோனங்கள்.

புலிகள் ஃபாசிசவாதிகளாக உருமாறு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவு அங்கு இப்ப சிங்கள் பேரினவாதம் இல்லை. புதிய தலைமுறை வந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் சிங்கள் பகுதிகளிலும் தொடர்ந்து அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். வன்னியில் இப்ப அவர்களின் முக்கிய பிரச்சனை : வேலை வாய்ப்புகள், வீடுகள், வாழ்வாதரங்கள் தாம். இன்னும் ஒரு 5 ஆண்டுகளில் முழுமையாக இயல்பு நிலை திரும்பிவிடும். சிங்கள ராணுவம் படிப்படியாக தனது முகாம்களை குறைக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் பஞ்சாப் பிரச்சனை காலங்களில் இருந்த நிலைக்கும், இன்றைய பஞ்சாபை ஓப்பிடலாம். அன்று இந்திய அரசு செய்த மீறல்கள் இப்ப பஞ்சாபில் இல்லை.

இறுதியாய : ராஜப்ஷே ஜெயவர்த்தனா போல் சிங்கள் பேரினவாதி என்று நான் கருதவில்லை. அவன் ஒரு கொலைகாரன், பொய்யன், வஞ்சகன், etc. ஆனால் பேரினவாதி எல்லாம் இல்லை. அவன் செய்தது போர் குற்றங்கள் தான். இன அழிப்பு அல்ல.
இன அழிப்பு தான் நோக்கம் என்றால் முகாம்களில் இருந்து தமிழர்கள் யாரும் உயிரோடு வெளியேறி இருக்க முடியாது. போஸ்னியாவில் செர்பியா செய்தது தான் இனப்படுகொலை. genocide, with systematic and cold blooded ethnic cleansing. ஆனால் வன்னியில் நடந்தது போர் குற்றங்கள். இடையில் சிக்கிய அப்பாவி பொது மக்களை பற்றி கவலை படாமல் தொடர்ந்து எறிகுண்டு தாக்குதல் நடத்திய கொடூரம். இரு தரப்பினரும் தான். கடைசி கட்டங்களில் தப்பி செல்ல முயன்ற மக்களை புலிகள் துப்பாக்கி முனையில் தடுத்து மனித கேடையங்களாக பயன் படுத்தினார்கள் தான். சிறார்களை இழுத்து சென்று தம் படைகளில் வலுக்கட்டாயமாக சேர்த்த கொடுமை கடைசி இரு ஆண்டுகளில் மிக மிக அதிகம். எனக்கு ஒரு ஈழத்தமிழர் சமீபத்தில் இட்ட பின்னூட்டம் :

///baleno said...

நான் இங்கே பின்னோட்டம் இடுவது லிபியா பற்றி வினவுவில் வந்த கட்டுரைக்கு உங்கள் சிறந்த பின்னோட்டங்களை பாராட்டி.

//ஈழப்போரில், 2009 சனவரிக்கு பிறகு, அமெரிக்க படைகள் இதே போல், தமிழர்களை காக்க, சிங்கள் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, வான்வழி தாக்குதல் நடத்தியிருந்தால், பலரும் ஆதரித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க செய்யவில்லை என்பது வேறு விசியம். முக்கிய காரணம் அங்கு எண்ணை இல்லை என்பதல்ல. புலிகளில் ஃபாசிசம் பற்றி அவர்களின் பார்வை. புலிகள் அழிந்தால் தான், அங்கு நிரந்தர அமைதி திரும்பும் என்று ஒரு கோணம். பலரும் இதே பார்வையை தான் கொண்டிருந்தனர். அது சரிதான் என்று தெரிந்துவிட்டது.//

///மிக சரியான புரிதல்.புலிகளுடைய போராட்டம் எனறு நடத்திய யுத்தத்தால் முழு இலங்கை மக்களுக்கும் துன்பம் ஏற்பட்டாலும், தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நாசமாக்கி அழித்தே விட்டது. கடைசி காலங்களில் (2007-2009)புலிகளின் யுத்த்திற்க்கு வலுகட்டாயமாக பிள்ளைகள் பிடிப்பது,கொடுமைகள், கப்பம் தாங்க முடியாத அளவிற்க்கு சென்று விட்டது.
March 26, 2011 4:08 PM

K.R.அதியமான் சொன்னது…

/////காங்கிரஸ் ‘மட்டும்’ தான் துரோகி / எதிரியா ? ஏன் அதன் long time partner ஆன தி.மு.க பற்றி பேச மாட்டேன் என்கிறீர்கள் ?//

முதலில் காங்கிரசைக் களை எடுப்போம். அதன் பிறகு மாநிலக் கட்சி பயிர் வளர்ப்போம் என்பது அணுகுமுறை.

//காங்கிரஸ்க்கு பதில் பி.ஜெ.பி அன்று ஆட்சியில் இருந்திருந்தாலும், இந்தியாவின் நிலைபாடு அதே போல் தான் இருந்திருக்கும். சிங்கள அரசுக்கு இன்னும் கூட அதிக உதவிகள் புரிந்திருப்பார்கள்.//

இருக்கலாம். காங்கிரசு எதிர்ப்பு என்றால் பி ஜெ பி ஆதரவு இல்லை. மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில். தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் தேவையில்லை என்பது நிலைப்பாடு.
////

மாசி மற்றும் நண்பர்களே,

suppose தி.மு.க இருக்கும் இடத்தில் அ.தி.மு.க இருந்திருந்தால், இதே பல்லவியை பாடுவீர்களா ? என்ன இருந்தாலும் கருணானிதி ‘நம்ம’ ஆளு. ஜெ ஒரு பார்பன ஃபாசிசவாதி என்ற ‘கருத்து’ இங்கு இல்லையா என்ன ? i don't buy your above logic.

பெயரில்லா சொன்னது…

கே.ஆர். அதியமானிடம் வாதாடுவதும் மொட்டைப் பாறையைத் தலையால் முட்டுவதும் ஒன்று. ரெண்டிலும் எந்த ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. எங்கேயாவது இவரே ஒரு ஐட்டத்தை எழுதி வைத்துவிட்டு உலக அறிஞர்கள் எழுதியது போல அதை வெட்டிக் கொண்டு வந்து உங்கள் ப்ளாகில் ஒட்டி விட்டுப் போவார்.

மா சிவகுமார் சொன்னது…

அதியமான்,
பொறுமையாகப் பேசினால், என் கருத்துக்களை நீங்களும் உங்களை நிலைப்பாட்டை நானும் புரிந்து கொள்ள முடியும். முயற்சிப்போம்.

அனானி,
எல்லோருமே கொஞ்சம் கூடுதல் அல்லது குறைவாக நமது நிலைப்பாடுகளில் உறுதியாகத்தானே இருக்கிறோம்.
வெட்டி ஒட்டாமல் புதிதாக எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் :-)

K.R.அதியமான் சொன்னது…

//வெட்டி ஒட்டாமல் புதிதாக எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் :-)///

மாசி, இந்த அனானி யார் என்று எனக்கு நண்றாக தெரியும். சமீபத்தில் ஞாநி வீட்டு கேணி கூட்டத்தின் நேரில் சந்தித்து வாக்குவாதம் செய்தோம். உ.த பற்றியும் கீழ்தரமாக ஃபேஸ்புக்கில் எழுதிய ’பண்பாளர்’.

இவரை போன்றவர்களை எல்லாம் ஈழபோரின் இறுது மாதங்களில், தமிழ்ரகள் சிக்கிகொண்டிருந்த பகுதியில் para drop செய்திருந்தால் நிதர்சனம் ’புரிந்திருக்கும்’ ; கடைசியாக அங்கிருந்து தப்பிய ஈழத்தமிழர்களின் வாக்குமூலங்கள் இன்னும் வெளி வரவில்லை. வரும்போது உண்மைகள் தெரியும்.

அது வரை நான் காப்பி பேஸ்ட் செய்த பின்னூட்டம் பொய்யாகத்தான் தெரியும்.