வெள்ளி, ஜூன் 10, 2011

Thank You, Chief Minister!

"ஈழத் தமிழினத்தை இனப்படுகொலை செய்த இலங்கை அரசையும், அதன் ஆட்சியாளர்ளையும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் தங்கள் இனத்திற்கு அரசியல் உரிமையை பெற்றுதரும் கொழுக்கொம்பு என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறீதரன் கூறினார்."

"சென்னை வந்த சிறீதரன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியபோது, தமிழினத்திற்கு விடிவுத் தேடித் தரும் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்."

"இலங்கை ஆட்சியாளர்களை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற இத்தீர்மானம்தான் எங்களுக்குக் கிடைத்த கொழுக்கொம்பாக உள்ளது. இதைக் கொண்டுதான் எமது மக்களின் உரிமைக்கும், உயர்வுக்கும் வழிவகுக்க வேண்டும் என்று சிறீதரன் கூறினார்."

"தமிழர்களின் பாரம்பரிய பூமியான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னரும் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பதை சிறீதரன் விரிவாக எடுத்துக் கூறினார்."

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1106/10/1110610049_1.htm

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

Nallathai udane paaraatuvathaal melum nanmai kidaikka vazhikal undu. thanks for sharing sivakkumaar.

மா சிவகுமார் சொன்னது…

//Nallathai udane paaraatuvathaal melum nanmai kidaikka vazhikal undu.//

உண்மை அம்மா. முன் முடிவுகளோடு ஒருவரது செயல்பாடுகளைப் பார்க்காமல், செய்கையின் தன்மையைப் பொறுத்து பாராட்ட வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்