வெள்ளி, ஜூன் 10, 2011

காங்கிரசைத் தோற்கடித்த மக்களுக்கு வேலூரில் நன்றி தெரிவிப்பு (ஜூன் 4, 2011)

காங்கிரசு எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கு கண்ணனின் இப்படி ஒரு அறிவிப்புடன் புறப்பட்டது இளைஞர் படை இளைஞர் படை 


"நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் உலக "தமிழ்மக்களின் எதிரியான ஞானசேகரனை" தோல்வியடைய செய்த வேலூர் வாழ் தமிழ்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாகவும் மற்றும் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் ஈழதமிழர் படுகொலையும், தமிழக மீனவர் படுகொலையும் தான் முக்கியகாரணம் என்ற கருத்தினை தொடர்ந்து மக்களிடம் கொண்டுச்செல்லும் நோக்கத்துடன் வருகிற 5 ஆம் தேதி"காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து வேலூர் வீதிகளில் பரப்புரை செய்ய உள்ளோம்.

2 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்த...
550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றழித்த...
கட்ச தீவினை சிங்களவனுக்கு தாரைவார்த்துக் கொடுத்த...
அயோத்தி கரசேவகர்களுக்கு துணைபோன...
இந்தி எதிர்பாளர்களை கொன்றழித்த...
தமிழ் தேசிய வளங்களை கொல்லையடித்துக்கொண்டிருக்கும்...
காங்கிரசை தமிழ் மண்ணிலேருந்து விரட்டியடியுங்கள்! விரட்டியடியுங்கள்!


தமிழர்களுக்கு தீங்கு செய்ய முற்படும் எந்தகட்சியானலும், அவர்களுக்கு இதே நிலைதான் என தமிழர்கள் கற்பிக்க வேண்டும் என்ற கருத்தினையும் பரப்ப உள்ளோம்.
மக்களை சந்திக்கும் இந்த வாய்ப்பினில் தோழர்களும் தவறாமல் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!"



புகைப்படங்கள் :

 





































கருத்துகள் இல்லை: