காந்தி ஏன் ஒத்துழையாமை இயக்கத்தை தேர்ந்தெடுத்தார் என்று நேரு தனது அலசலைச் சொல்கிறார். அதைக் குறித்து எழுதுவதற்கு காந்திதான் பொருத்தமானவர் என்று குறிப்பிடுகிறார்.
நேரு சொல்லிப் போகும் பறவைப்பார்வையில் காந்தி அதை அணுகவேவில்லை. நேருவைப் பொறுத்த வரை, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடும் மாற்று வழிகள் எல்லாம் பலன் தரும் நிலையில் இல்லாததால் ஒத்துழையாமை கவர்ச்சியாக தெரிகிறது. காந்திக்கு மாற்று வழிகள் பலன் தருவதாக இருந்தாலும் ஒத்துழையாமையும் அகிம்சையும், சத்தியாக்கிரகமும்தான் ஒரே வழி.
பிரச்சனைக்குத் தீர்வு பிரச்சனைக்குள்தான் இருக்கிறது. ஆனால் அந்த தீர்வைப் பார்க்க பிரச்சனையிலிருந்து வெளியில் வந்து பார்க்கும் வித்தை தெரிய வேண்டும். பிரச்சனைக்குத் தீர்வு என்று குறுகிய கண்ணோட்டத்தில் இல்லாமல் பிரச்சனையின் அடித்தளத்தையே அசைத்துப் போடும் நடவடிக்கைகளை எடுக்கிறார். கூடாரத்தைத் தகர்க்க வேண்டுமானால், பளபளக்கும் ஆயுதங்களுடன் வந்து கூடாரத்தை தாக்கலாம், அல்லது கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தோள்களை நகர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆங்கிலேயே ஆதிக்கத்தை முறியடிக்க அவர்களுடன் மோதுவதன் மூலம் பலன் கிடைக்கலாம். அதில் பெருமளவு உயிரிழப்பும் அழிவும் ஏற்படும். ஆதிக்க சக்தியிடம் இருக்கும் ஆயுதங்களும், சக்திகளும் அதனுடன் மோதுபவர்களைத்தான் அதிக இழப்புகளுக்கு உள்ளாக்கும். கடைசியில் ஆதிக்கம் உடைந்தாலும் மோதலில் செலவான ஆற்றல்கள் நம்மைப் பொறுத்த வரை வீண்தான்.
ஆங்கிலேயரின் ஆதிக்கம் அதை நாம் ஏற்றுக் கொள்வது வரைதான் இருக்கும். படையெடுத்து வந்த நெப்போலியனின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் மாஸ்கோ நகரத்தை விட்டுச் சென்று விட்ட மக்கள் கூட்டத்தைப் போல இந்தியர்கள் அனைவரும் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் அதிகார, வணிக, பொருளாதார அமைப்புகளை கைவிட்டுவிட்டால் எதன் மீது அவர்கள் அதிகாரம் செலுத்த முடியும். அத்தகைய போராட்டத்தின் வெற்றி தோல்வி ஆங்கிலேயர் கையில் இருக்காது. இந்தியர்களின் கையில் மாறியிருக்கும்.
எதிரி வரையறுத்த விதிகளின்படி போராட ஆரம்பித்த உடனேயே எதிரிக்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. போராட்டத்தின் களத்தை நாம் வரையறுத்துக் கொண்டு இறங்கினால் எதிரி என்னதான் செய்தாலும் அவனது தோல்விப் பயணம் ஆரம்பித்து விடுகிறது.
'இது எல்லா சூழலுக்கும் பொருந்தாது. எதிராளியின் நேர்மையையும் பெரியமனிதத்தன்மையையும் பொறுத்தது' என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. கொடூரக் குணமும் வஞ்சகமும் சிங்கள அரசுக்கோ இசுரேலிய ஆதிக்கவாதிகளுக்கோ எந்த விதத்திலும் குறைந்ததில்லை. காந்தியின் தலைமையில் நடந்த விடுதலைப் போராட்டத்தால் இந்தியத் தரப்பு மட்டுமில்லாமல், ஆங்கிலேயர்களும் உயர்வு பெற்றார்கள். அறவழியில் நடக்கும் போராட்டம் இரு தரப்பையும் மேம்படுத்தி விடுகிறது.
மனிதனின் உயர் குணங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் காந்தி காட்டிய வழியைப் பின்பற்றலாம். காந்தி காட்டிய வழி என்றால் உப்பு சத்தியாக்கிரகமும், ஒத்துழையாமை இயக்கமும், சட்ட மறுப்பு இயக்கமும் இல்லை. அவை அவரது தத்துவத்தை வெளிப்படுத்தும் வழிமுறைகள் மட்டுமே. போராட்டத்தில் வாழும் ஒருவர் காந்தீய தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் ஆதிக்கம் தேவைக்கு மேல் ஒரு நாள் கூட நிலைக்காமல் விரட்டி அடிக்கும் வழிமுறையைக் கண்டு கொள்ளலாம்.
அது என்ன தேவைக்கு மேல்? எது வரை ஆதிக்கம் தேவை? அறவழிப் போராட்டத்தில், காந்தியின் சத்தியாக்கிரகத்தில், சத்தியாக்கிரஹி தேடல் விளக்கை தன் மீதே திருப்பிக் கொள்கிறான். தம்முள் இருக்கும் குறைகளைக் கழைந்து இறுக்கிப் பிடித்த கை போல குத்து விடும் போது ஆதிக்கம் உதிர்ந்து தீர்வு மலரும்.
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜனவரி 14, 2009
புதன், ஜூலை 04, 2007
காந்தி - ஒரு கேள்வி
காந்தி, இந்திய விடுதலைக்காக காங்கிரசு பணியில் ஈடுபட்டது ஏன்?
சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்.?
'ஒரே ஒரு சத்தியாக்கிரகி உள்ளத் தூய்மையுடன் உறுதியாக இருக்கும் வரை வெற்றி கிடைத்து விடும்' என்று தென்னாப்பிரிக்காவில் இருந்த நம்பிக்கை எங்கே போனது? காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?
'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள வேண்டும்' என்று நம்பிய அவர் ஏன் புது தில்லியில் வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்?
ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே அவரது சத்தியம் நாடெங்கும் பரவி ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தி அனைவருக்கும் உறுதியும், வளமும், முன்னேற்றமும் பெற்றுத் தந்திருக்காதா?
சத்தியத்தில் உறுதியான நம்பிக்கை இருந்திருந்தால் தனி ஒரு மனிதராக கிராமங்களில் போய் தமது பணியை ஆரம்பித்திருக்கலாம். எதற்காக ஒரு இயக்கத்தில் சேர வேண்டும்.?
'ஒரே ஒரு சத்தியாக்கிரகி உள்ளத் தூய்மையுடன் உறுதியாக இருக்கும் வரை வெற்றி கிடைத்து விடும்' என்று தென்னாப்பிரிக்காவில் இருந்த நம்பிக்கை எங்கே போனது? காங்கிரசு என்று பூதத்தை வளர்த்து விட்டு நாட்டுக்கு தீங்கு விளைத்து விட்டாரா?
'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்ள வேண்டும்' என்று நம்பிய அவர் ஏன் புது தில்லியில் வைஸ்ராயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்?
ஒரு கிராமத்தில் குடியேறித் துறவியாக வாழ்ந்திருந்தாலே அவரது சத்தியம் நாடெங்கும் பரவி ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தி அனைவருக்கும் உறுதியும், வளமும், முன்னேற்றமும் பெற்றுத் தந்திருக்காதா?
ஞாயிறு, ஜூன் 24, 2007
காந்தி - சில கேள்விகள்
காந்தியின் கொள்கைகளை, சமூகக் கருத்துகளை, மத நம்பிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரை புறக்கணிக்க முடியவில்லை.
- மேற்கத்திய கல்வி கற்று சோவியத் புரட்சியால் கவரப்பட்டிருந்த நேருவுக்கு காந்தியின் பல கருத்துக்கள் முட்டாள்தனமாகப் பட்டாலும் அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஏன்? - 'இவர் வருணாசிரம தருமத்தைத் தாங்கிப் பிடிக்கத்தான் முயல்கிறார், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் அநியாயம் செய்கிறார்' என்று தனித்தலைமை உருவாக்கிய அம்பேத்கார் காந்தியின் மீது பெரு மதிப்பும், அவரது உடல் நலனில் அக்கறையும் வைத்திருந்தார்.
'கிழவன் செத்தால் சாகிறான்' என்று விட்டு விட்டுப் போக முடியவில்லை.
ஏன்? - 'இந்திய இளைஞர்களின் துடிப்பைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆங்கிலேயர்களின் அடிவருடியாக இருக்கிறார்' என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், காந்தி விரும்பவில்லை என்றதும் காங்கிரஸ் தலைமைப் பதவியைத் தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். காந்தியின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.
இளைஞர்களின் பெருவாரியான ஆதரவு இருந்தாலும் நேதாஜியின் முடிவு காந்திக்கு வழி விடுவதாகவே இருக்கிறது.
ஏன்? - 'முதலில் கோயிலுக்குள் வரணும் என்பாங்கள், அப்புறம் நம்ம வீட்டுக்கே வந்து விடுவார்கள்' என்று இறுக்கத்துடன் இருந்த வர்ணாசிரமவாதிகள் காந்தியின் உயிருக்குப் பயந்து கத்தியின்றி ரத்தமின்றி இந்துக்கள் அனைவருக்கும் கோயில்களைத் திறந்து விடச் சம்மதிக்கிறார்கள்.
ஏன்? - 'இந்தியாவில் முஸ்லீம்கள் மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ முடியாது' என்ற பாகிஸ்தான் உருவாக்கத்துக்குப் பிறகும் பல கோடி முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணில் இருந்து விடத் தீர்மானித்து மதச் சார்பற்ற இந்தியக் குடியரசை உருவாக்குவதில் பங்கேற்கின்றனர்.
ஏன்?
சனி, ஜூன் 23, 2007
காந்தி - சில புரிதல்கள்
காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் இணையத்தில் பிடிஃஎப் வடிவில் கிடைக்கின்றன. அவரது வாழ்வின் கடைசி மாதங்களில் நடந்து உரைகள், கடிதங்கள், கட்டுரைகள் என்று முதலில் இறக்கி வைத்திருக்கிறேன்.
அவரது சத்தியத் தெளிவயும், நடைமுறைக் கொள்கைகளும், வாய்மை, நேர்மை, மனித குல நன்மை, சேவை உணர்வு என்று இணைத்துப் பார்த்தால் மிக இயல்பாக தெரிகின்றன. புரியாமல் சேற்றை வாரி இறைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.
'பிரிவினை என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று எப்போது சொன்னார்' என்று தெரியவில்லை. தில்லியில் அதிகாரம் குவிந்த இந்தியா என்ற நாடு அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு சிறு பகுதியும் தமது பொது வேலைகளைக் கவனித்துக் கொண்டால் பிரிவினை என்று முஸ்லீம் லீக் கேட்பதற்கு தேவையே இல்லாமல் போயிருக்கும்.
நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இங்கிலாந்தைப் போல, சோவியத் யூனியனைப் போல, அமெரிக்காவைப் போல நவீன தேசிய அரசை உருவாக்கி தாம் அதை ஆள வேண்டும் என்று ஆசை. காந்தியின் கனவு சற்றே காலத்துக்கு முற்பட்டது. திறந்த மனதுடன் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முன்வந்திருந்தால் கிழக்கு மேற்குக்கு இன்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
காந்தியின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரது ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இந்துத்துவாவாதியான அரவிந்தன் கூட காந்தீயப் பொருளாதாரம் என்று தமக்கு சாதகமான ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் அவர் காத தூரம் ஓடி விடுவார், அல்லது இந்துத்துவா இயக்கங்களிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்வார்.
கதர் உடுத்துவது, தொப்பி வைப்பது, நூல் நூற்பது என்று அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து தனது கருத்துக்களை நீர்க்கச் செய்து விட்டார் என்று தோன்றுகிறது. கதர் என்பது அடுத்த மனிதனை/ நமது வாழ்வை சீரளிக்காமல் உருவாக்கும் பொருளைப் பாவிக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். கதரை மட்டும் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையான கொள்கையை விட்டு விட்டார்கள்.
இதே போலத்தான் இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டும் என்பது. இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாக இருப்பது அவமானம். இந்திய மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் அந்த நிலை வரும் முன்னால் எல்லா இந்திய மொழிகளுக்கும் மதிப்பும், சம மரியாதையும் கொடுக்கும் பண்பு மக்களிடையே வளர்ந்திருக்க வேண்டும்.
குஜராத்தில் பிறந்து வளர்ந்ததால் தென்னிந்திய அல்லது வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுத் தீவிரம் புரியாமல் போயிருக்கலாம். அதை உள்வாங்கிய நேருதான் சரிவர செயல்படுத்தினார். அந்த வகையில் நேரு காந்தியின் முதன்மையான சீடர் என்பதில் ஐயமில்லை. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதைத் தனது கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடிந்த தலைவர் அவர்.
படேலுடனான கடிதப் போக்குவரத்து, படேல் குறித்த கருத்துக்களும் தொகுக்கப்பட்ட காந்தியின் படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. படேல், சுபாஷ் சந்திர போஸ், போன்றோரிடம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் தனது கொள்கைகளைப் பிசகாமல் கடைப்பிடிப்பவர் நேரு மட்டும்தான் என்று கண்டு கொண்டிருக்கிறார்.
தனது குருவை வெளிப்படையாக விமரிசிக்கவும் நேரு தயங்கியதில்லை. தனக்கு சரி எனப் பட்டதை ஆதரித்து காந்தியுடன் சண்டை போடுவதும் பல முறை நடந்திருக்கிறது. மற்றவர்கள் போல காந்தியின் மக்கள் செல்வாக்குக்குப் பணிந்து நடக்காமல், எது சரியென்று பட்டதோ அதை மட்டும் ஏற்று நடந்த நேருவின் மீது காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
அவரது சத்தியத் தெளிவயும், நடைமுறைக் கொள்கைகளும், வாய்மை, நேர்மை, மனித குல நன்மை, சேவை உணர்வு என்று இணைத்துப் பார்த்தால் மிக இயல்பாக தெரிகின்றன. புரியாமல் சேற்றை வாரி இறைப்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள்.
'பிரிவினை என் பிணத்தின் மீதுதான் நடக்கும் என்று எப்போது சொன்னார்' என்று தெரியவில்லை. தில்லியில் அதிகாரம் குவிந்த இந்தியா என்ற நாடு அவருக்கு உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு சிறு பகுதியும் தமது பொது வேலைகளைக் கவனித்துக் கொண்டால் பிரிவினை என்று முஸ்லீம் லீக் கேட்பதற்கு தேவையே இல்லாமல் போயிருக்கும்.
நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இங்கிலாந்தைப் போல, சோவியத் யூனியனைப் போல, அமெரிக்காவைப் போல நவீன தேசிய அரசை உருவாக்கி தாம் அதை ஆள வேண்டும் என்று ஆசை. காந்தியின் கனவு சற்றே காலத்துக்கு முற்பட்டது. திறந்த மனதுடன் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முன்வந்திருந்தால் கிழக்கு மேற்குக்கு இன்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
காந்தியின் கொள்கைகளைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் அவரது ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இந்துத்துவாவாதியான அரவிந்தன் கூட காந்தீயப் பொருளாதாரம் என்று தமக்கு சாதகமான ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அந்தப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால் அவர் காத தூரம் ஓடி விடுவார், அல்லது இந்துத்துவா இயக்கங்களிலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொள்வார்.
கதர் உடுத்துவது, தொப்பி வைப்பது, நூல் நூற்பது என்று அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து தனது கருத்துக்களை நீர்க்கச் செய்து விட்டார் என்று தோன்றுகிறது. கதர் என்பது அடுத்த மனிதனை/ நமது வாழ்வை சீரளிக்காமல் உருவாக்கும் பொருளைப் பாவிக்க வேண்டும் என்பதற்கான அடையாளம். கதரை மட்டும் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையான கொள்கையை விட்டு விட்டார்கள்.
இதே போலத்தான் இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டும் என்பது. இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாக இருப்பது அவமானம். இந்திய மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமான கருத்து. ஆனால் அந்த நிலை வரும் முன்னால் எல்லா இந்திய மொழிகளுக்கும் மதிப்பும், சம மரியாதையும் கொடுக்கும் பண்பு மக்களிடையே வளர்ந்திருக்க வேண்டும்.
குஜராத்தில் பிறந்து வளர்ந்ததால் தென்னிந்திய அல்லது வடகிழக்கு மாநில மக்களின் உணர்வுத் தீவிரம் புரியாமல் போயிருக்கலாம். அதை உள்வாங்கிய நேருதான் சரிவர செயல்படுத்தினார். அந்த வகையில் நேரு காந்தியின் முதன்மையான சீடர் என்பதில் ஐயமில்லை. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதைத் தனது கருத்துக்களுடன் இணைத்து செயல்படுத்த முடிந்த தலைவர் அவர்.
படேலுடனான கடிதப் போக்குவரத்து, படேல் குறித்த கருத்துக்களும் தொகுக்கப்பட்ட காந்தியின் படைப்புகளில் விரவிக் கிடக்கின்றன. படேல், சுபாஷ் சந்திர போஸ், போன்றோரிடம் பெரு மதிப்பும் அன்பும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் தனது கொள்கைகளைப் பிசகாமல் கடைப்பிடிப்பவர் நேரு மட்டும்தான் என்று கண்டு கொண்டிருக்கிறார்.
தனது குருவை வெளிப்படையாக விமரிசிக்கவும் நேரு தயங்கியதில்லை. தனக்கு சரி எனப் பட்டதை ஆதரித்து காந்தியுடன் சண்டை போடுவதும் பல முறை நடந்திருக்கிறது. மற்றவர்கள் போல காந்தியின் மக்கள் செல்வாக்குக்குப் பணிந்து நடக்காமல், எது சரியென்று பட்டதோ அதை மட்டும் ஏற்று நடந்த நேருவின் மீது காந்திக்கு நம்பிக்கை ஏற்பட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
குறிச்சொற்கள்
அரசியல்,
காந்தி,
முன்னேற்றம்
ஞாயிறு, டிசம்பர் 17, 2006
காந்தி மீண்டும் வர வேண்டும் !!
வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகான் நீ வாழ்க வாழ்க!
சுப்பிரமணிய பாரதியார்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகான் நீ வாழ்க வாழ்க!
சுப்பிரமணிய பாரதியார்
வெள்ளி, ஜூன் 30, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன - 15
"ஒரு சமூக சேவகனின் முதல் எசமான் அவரது மனசாட்சிதான். நாட்டின் சமூகச் சட்டங்கள் மனசாட்சிக்கு் எதிராக இருக்குமானால், அவற்றை பின்பற்ற வேண்டியதில்லை. பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஒரு மனிதனின் மனமாற்றம் போதும். எவ்வளவோ துன்பங்கள், தண்டனைகள் கிண்டல்களைச் சந்தித்தாலும், தனது நம்பிக்கையில், சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் ஒருவனது முன்னால் எல்லாம் தூளாகி விடும்."
சிறுவர் மணத்தின் மூலம் தன்னை விட இரண்டு வயது மூத்த சிறுமிக்கு விபரம் தெரியாத வயதிலேயே பெற்றோரால் மணமுடிக்கப்பட்ட ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு "அந்த மணத்தைப் புறக்கணிக்குமாறும், அந்த ஆணும் பெண்ணும் தமது வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று காந்தி சொன்ன அறிவுரை சட்டத்துக்கு எதிரானது என்று எழுதுகிறார் ஒரு வழக்கறிஞர்.
'ஒரு இந்து ஆண் பல தார மணம் புரிந்து கொள்ளலாம், பெண்ணுக்கோ ஒரே திருமணம்தான் என்று இருப்பதால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்' என்றும் கேட்கிறார் அந்த வழக்குரைஞர்.
அந்த வழக்கறிஞருக்குப் பதிலாகத்தான் காந்தி மேற்சொன்னதை எழுதுகிறார்.
சிறுவர் மணத்தின் மூலம் தன்னை விட இரண்டு வயது மூத்த சிறுமிக்கு விபரம் தெரியாத வயதிலேயே பெற்றோரால் மணமுடிக்கப்பட்ட ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு "அந்த மணத்தைப் புறக்கணிக்குமாறும், அந்த ஆணும் பெண்ணும் தமது வாழ்க்கையை மீள அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று காந்தி சொன்ன அறிவுரை சட்டத்துக்கு எதிரானது என்று எழுதுகிறார் ஒரு வழக்கறிஞர்.
'ஒரு இந்து ஆண் பல தார மணம் புரிந்து கொள்ளலாம், பெண்ணுக்கோ ஒரே திருமணம்தான் என்று இருப்பதால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்' என்றும் கேட்கிறார் அந்த வழக்குரைஞர்.
அந்த வழக்கறிஞருக்குப் பதிலாகத்தான் காந்தி மேற்சொன்னதை எழுதுகிறார்.
வியாழன், ஜூன் 29, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 14
போனபெர்ட், காந்தி பற்றி எழுப்பிய வினாக்களுக்கான பதில்கள் இதில் அடங்கியுள்ளன என்று எண்ணுகிறேன்.
QUOTE
1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.
அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?
2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?
3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?
4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?
5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?
6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.
UNQUOTE
ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் அவனது எண்ணங்களையும் நடத்தையையும் பெரிதும் வழி நடத்துகின்றன.
காந்தி பிறப்பால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர், பிறந்த சாதியும் உயரந்தது என்று கருதப்பட்ட ் சாதி, தந்தையின் அலுவலின் மூலம் பலவிதமான உயர் நிலை தொடர்புகளும் குடும்பத்துக்கு இருந்தன. சிறுவயதில் வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதில் அவரது பெற்றோரும், சகோதரர்களும் மிகக் கட்டுப்பெட்டியாகவே இருந்து வந்துள்ளனர். விளையாட்டு வயதில் அதைக் கேலி செய்யும் போக்கைத் தவிர, எதிர்ப்புக்கான எந்த அறிகுறியும் காந்தியிடம் காணப்படவில்லை.
உள்ளூரில் சோடை போய்விடுவோம் என்ற பயத்தில் இலண்டனுக்குக் கப்பலேறிய இளைஞனின் முதல் நோக்கம் பாரிஸ்டர் பட்டம் பெற்று பெரிய வக்கீலாகி சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்தில் செய்த சோதனைகள் எல்லாம், செலவைக் கட்டுப்படுத்துவதையும், படிப்பை முடிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையே. இந்தியா வந்து வக்கீல் தொழிலிலும் எந்த விதமான எதிர்காலமும் காணப்படாத நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு மூட்டைக் கட்டிக் கொள்கிறார்.
தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.
இவை எல்லாமே காந்தியின் சுய சரிதத்தில் அவரே கூறியவை. இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.
உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.
சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே. காந்தியே சொன்னது மாதிரி, 'ஒரு விவாதத்தில் தன் கருத்தை நிலை நாட்டுமளவுக்கு பலம் இல்லாத தரப்புக்கு அதிக சாதகம் காட்ட வேண்டும்' என்ற முறையில் காந்தி பல இடங்களில் தனது நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தாலும், அம்பேத்காரின் திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே நம்புகிறேன்.
2. எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.
3. வன்முறையை எதிர்த்தாலும் ஒரு ஆட்சியின் கீழ் அது தரும் பலன்களை அனுபவித்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு அந்த ஆட்சிக்கு ஆபத்து வரும்ப் போது அதைக் காக்க ஆயுதம் எடுக்கும் கடமை உண்டு என்ற நம்பிக்கையில் அவர் ஆங்கிலேயர்களின் தரப்பில் சண்டை ஆதரவு திரட்டினார். ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்த போது, நாஜிக்களுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்காமல் அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முதிர்ச்சிக்கு (சிலர் சிரிக்கலாம்) போயிருந்தார்.
'காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி' என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது.
ஒரு வாதத்துக்கு நேரம் வந்ததும் இந்தியாவை ஆள் முடியாமல் ஊருக்கு ஓடி விட்டார்கள் ஆங்கிலேயர்கள் என்று வைத்துக் கொண்டாலும், காந்தியின் அரசியலால், இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாமல் சுதந்திர இந்தியா சிதறிப் போயிருக்கலாம்.
4. 'என்ன செய்தாவது, ஹிட்லரையும், சப்பானிய ஏகாதிபத்தியத்தையும் துணைக் கொண்டாவது நமது குறிக்கோளை அடைந்து விட வேண்டும்' என்பது நேதாஜியின் கொள்கை. 'நம் இலக்கை அடைந்த பிறகு நமது வழிகளை மக்களாட்சியாக தனிமனித உரிமையாக மாற்றிக் கொள்ளலாம்' என்பது அவரது எண்ணம். 'நாய் விற்றக் காசு குரைக்காது' என்ற நடைமுறைத் தத்துவம் அவரது.
'எப்படி நம் குறிக்கோளை அடைகிறோமோ அதைப் பொறுத்துதான் பலன்கள் இருக்கும்' என்பது காந்தியின் நம்பிக்கை. 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், வன்முறை மூலம் சுதந்திரம் அடைந்தால் நாம் அமைதியான நாட்டை உருவாக்க முடியாது' என்பது அவரது கொள்கை. 'அன்பால் எதிரியையும் வென்று விட வேண்டும், ஆங்கிலேயரை வெல்ல உதவிக்காக நாசிக்களையும், சப்பானியர்களையும் உதவிக்கு அழைப்பதை விட அடிமைகளாக இருப்பதே மேல்' என்பது காந்தியின் எண்ணம்.
இதனால்தான் நேதாஜி காங்கிரசை வழி நடத்த இரண்டாம் முறை முயன்ற முறை காந்தி தனது எதிர்ப்பினால் அவருக்கு வாய்ப்பை மறுத்தார். நேதாஜி ஒரு ஆண்டு காங்கிரசு தலைவராக இருந்தார் என்பதும், அப்போதும் காந்தி எதிர்த்திருந்தால் தலையாட்டிப் பொம்மையான கட்சி காந்தி சொல்வதையே கேட்டிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
QUOTE
1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.
அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?
2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?
3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?
4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?
5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?
6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.
UNQUOTE
ஒரு மனிதனின் பிறப்பும், வளர்ப்பும் அவனது எண்ணங்களையும் நடத்தையையும் பெரிதும் வழி நடத்துகின்றன.
காந்தி பிறப்பால் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர், பிறந்த சாதியும் உயரந்தது என்று கருதப்பட்ட ் சாதி, தந்தையின் அலுவலின் மூலம் பலவிதமான உயர் நிலை தொடர்புகளும் குடும்பத்துக்கு இருந்தன. சிறுவயதில் வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதில் அவரது பெற்றோரும், சகோதரர்களும் மிகக் கட்டுப்பெட்டியாகவே இருந்து வந்துள்ளனர். விளையாட்டு வயதில் அதைக் கேலி செய்யும் போக்கைத் தவிர, எதிர்ப்புக்கான எந்த அறிகுறியும் காந்தியிடம் காணப்படவில்லை.
உள்ளூரில் சோடை போய்விடுவோம் என்ற பயத்தில் இலண்டனுக்குக் கப்பலேறிய இளைஞனின் முதல் நோக்கம் பாரிஸ்டர் பட்டம் பெற்று பெரிய வக்கீலாகி சம்பாதித்து விட வேண்டும் என்பதுதான். இங்கிலாந்தில் செய்த சோதனைகள் எல்லாம், செலவைக் கட்டுப்படுத்துவதையும், படிப்பை முடிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையே. இந்தியா வந்து வக்கீல் தொழிலிலும் எந்த விதமான எதிர்காலமும் காணப்படாத நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு மூட்டைக் கட்டிக் கொள்கிறார்.
தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.
இவை எல்லாமே காந்தியின் சுய சரிதத்தில் அவரே கூறியவை. இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித் தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.
உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.
சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே. காந்தியே சொன்னது மாதிரி, 'ஒரு விவாதத்தில் தன் கருத்தை நிலை நாட்டுமளவுக்கு பலம் இல்லாத தரப்புக்கு அதிக சாதகம் காட்ட வேண்டும்' என்ற முறையில் காந்தி பல இடங்களில் தனது நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தாலும், அம்பேத்காரின் திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றே நம்புகிறேன்.
2. எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.
3. வன்முறையை எதிர்த்தாலும் ஒரு ஆட்சியின் கீழ் அது தரும் பலன்களை அனுபவித்துக் கொண்டு வாழும் ஒருவருக்கு அந்த ஆட்சிக்கு ஆபத்து வரும்ப் போது அதைக் காக்க ஆயுதம் எடுக்கும் கடமை உண்டு என்ற நம்பிக்கையில் அவர் ஆங்கிலேயர்களின் தரப்பில் சண்டை ஆதரவு திரட்டினார். ஆனால் இரண்டாம் உலகப் போர் வந்த போது, நாஜிக்களுக்கு எதிராகக் கூட ஆயுதம் எடுக்காமல் அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முதிர்ச்சிக்கு (சிலர் சிரிக்கலாம்) போயிருந்தார்.
'காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி' என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது.
ஒரு வாதத்துக்கு நேரம் வந்ததும் இந்தியாவை ஆள் முடியாமல் ஊருக்கு ஓடி விட்டார்கள் ஆங்கிலேயர்கள் என்று வைத்துக் கொண்டாலும், காந்தியின் அரசியலால், இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாமல் சுதந்திர இந்தியா சிதறிப் போயிருக்கலாம்.
4. 'என்ன செய்தாவது, ஹிட்லரையும், சப்பானிய ஏகாதிபத்தியத்தையும் துணைக் கொண்டாவது நமது குறிக்கோளை அடைந்து விட வேண்டும்' என்பது நேதாஜியின் கொள்கை. 'நம் இலக்கை அடைந்த பிறகு நமது வழிகளை மக்களாட்சியாக தனிமனித உரிமையாக மாற்றிக் கொள்ளலாம்' என்பது அவரது எண்ணம். 'நாய் விற்றக் காசு குரைக்காது' என்ற நடைமுறைத் தத்துவம் அவரது.
'எப்படி நம் குறிக்கோளை அடைகிறோமோ அதைப் பொறுத்துதான் பலன்கள் இருக்கும்' என்பது காந்தியின் நம்பிக்கை. 'கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான், வன்முறை மூலம் சுதந்திரம் அடைந்தால் நாம் அமைதியான நாட்டை உருவாக்க முடியாது' என்பது அவரது கொள்கை. 'அன்பால் எதிரியையும் வென்று விட வேண்டும், ஆங்கிலேயரை வெல்ல உதவிக்காக நாசிக்களையும், சப்பானியர்களையும் உதவிக்கு அழைப்பதை விட அடிமைகளாக இருப்பதே மேல்' என்பது காந்தியின் எண்ணம்.
இதனால்தான் நேதாஜி காங்கிரசை வழி நடத்த இரண்டாம் முறை முயன்ற முறை காந்தி தனது எதிர்ப்பினால் அவருக்கு வாய்ப்பை மறுத்தார். நேதாஜி ஒரு ஆண்டு காங்கிரசு தலைவராக இருந்தார் என்பதும், அப்போதும் காந்தி எதிர்த்திருந்தால் தலையாட்டிப் பொம்மையான கட்சி காந்தி சொல்வதையே கேட்டிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 13
காந்தியும் தீண்டாமையும் தாழ்த்தப்பட்ட மக்களும்
காந்தி பிறப்பால் உயர்ந்தது என்று கருதப்படும் சாதியைச் சேர்ந்தவர். அவர் என்னதான்
தாழ்த்தப்பட்ட இனங்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வரும் கொடுமைகளை படித்துப் பார்த்து மட்டுமே புரிந்து கொண்டவர். அதனால்தான், அவ்வளவு புரிந்து கொண்டும், இந்து மதத்தின் வர்ணாசிரம தருமத்தை எதிர்க்காமல், 'சாதிகளினிடையே ஏற்றத்தாழ்வு மறைந்தால் மட்டும் போதும், சாதி முறையையே அழிக்க வேண்டாம்' என்று எழுதியும் சொல்லியும் வந்தார்.
சாதி முறையின் கொடுமுகத்தை நேரில் கண்ட தலித் தலைவர்களுக்கு அதில் கண்டிப்பாக உடன்பாடு இருக்க முடியாது. ஏதாவது செய்து தங்களை ஏமாற்றி, சாதி முறையை நீடிக்கச் செய்து தம்மை அடக்கி வைத்திருப்பதே காந்தியின் குறிக்கோள் என்று அவர்கள் நினைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.
காந்தி ஒரு போராளியாக இருந்தாலும், இருக்கும் அமைப்புகளை அப்படியேத் தூக்கி எறிந்து விட்டு புதிய உலகம் காண வேண்டும் என்ற கனவு காணும் போராளி இல்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விட, உள்ளே இருந்து கொண்டே ஆங்கிலேயர்களின் மனதை மாற்றி இந்தியாவுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் முதலில் முயன்றார். எல்லாக் கதவுகளும் அடைபட்ட பிறகுதான், வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி முழக்கமிட ஆரம்பித்தார்.
அதே போல, சாதி முறையை ஒரேயடியாக ஒழித்து விடுவோம் என்று முயலாமல், அந்த முறையினுள்ளேயே நடக்கும் அநீதிகளைக் களைவோம் என்று முயல்வோம். அதன் பிறகும்் வேலை ஆகவில்லை என்றால் சாதியை ஒழிப்பது பற்றி சிந்திக்கலாம் என்பது காந்தியின் அணுகுமுறை.
காந்தி பிறப்பால் உயர்ந்தது என்று கருதப்படும் சாதியைச் சேர்ந்தவர். அவர் என்னதான்
- தன் வீட்டுக் கழிப்பறையைத் தானே செய்தாலும்,
- உயர் சாதியினர் செய்யக் கூடாது என்று கருதப்பட்ட இழிந்தவை என்று ஒதுக்கப்பட்ட தோட்டி வேலை பிறருக்காகப் பார்த்தாலும்,
- ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சமமாக மதித்து ஏற்றுக் கொண்டாலும்,
- அந்தக் குடும்பத்தின் குழந்தையை தன் வளர்ப்பு மகளாக எடுத்துக் கொண்டாலும்,
- ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்திருந்தால்தான் தான் அந்த திருமணத்தை ஆசிர்வதிப்பதாகச் சொன்னாலும்,
- தாழ்த்தப்பட்டோருக்கு அரிசனங்கள் என்று பெயர் கொடுத்தாலும்,
தாழ்த்தப்பட்ட இனங்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வரும் கொடுமைகளை படித்துப் பார்த்து மட்டுமே புரிந்து கொண்டவர். அதனால்தான், அவ்வளவு புரிந்து கொண்டும், இந்து மதத்தின் வர்ணாசிரம தருமத்தை எதிர்க்காமல், 'சாதிகளினிடையே ஏற்றத்தாழ்வு மறைந்தால் மட்டும் போதும், சாதி முறையையே அழிக்க வேண்டாம்' என்று எழுதியும் சொல்லியும் வந்தார்.
சாதி முறையின் கொடுமுகத்தை நேரில் கண்ட தலித் தலைவர்களுக்கு அதில் கண்டிப்பாக உடன்பாடு இருக்க முடியாது. ஏதாவது செய்து தங்களை ஏமாற்றி, சாதி முறையை நீடிக்கச் செய்து தம்மை அடக்கி வைத்திருப்பதே காந்தியின் குறிக்கோள் என்று அவர்கள் நினைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.
காந்தி ஒரு போராளியாக இருந்தாலும், இருக்கும் அமைப்புகளை அப்படியேத் தூக்கி எறிந்து விட்டு புதிய உலகம் காண வேண்டும் என்ற கனவு காணும் போராளி இல்லை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை விட, உள்ளே இருந்து கொண்டே ஆங்கிலேயர்களின் மனதை மாற்றி இந்தியாவுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் முதலில் முயன்றார். எல்லாக் கதவுகளும் அடைபட்ட பிறகுதான், வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி முழக்கமிட ஆரம்பித்தார்.
அதே போல, சாதி முறையை ஒரேயடியாக ஒழித்து விடுவோம் என்று முயலாமல், அந்த முறையினுள்ளேயே நடக்கும் அநீதிகளைக் களைவோம் என்று முயல்வோம். அதன் பிறகும்் வேலை ஆகவில்லை என்றால் சாதியை ஒழிப்பது பற்றி சிந்திக்கலாம் என்பது காந்தியின் அணுகுமுறை.
புதன், ஜூன் 28, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 12
காந்தியின் உண்ணாநோன்புகள் மிகப் பேர் பெற்றவை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம், சாக்கு. பெரும்பாலும் அவை தனிப்பட்ட காரணங்கள், பல முறை பொது நலனுக்காக.
உண்ணாநோன்பு காந்தியின் "சர்வரோகநிவாரணி"
1. மலச்சிக்கல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
2. ரத்தசோகை இருந்தால் உண்ணாமலிருங்கள்.
3. காய்ச்சல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
4. செரிமானம் சரியில்லையென்றால் உண்ணாமலிருங்கள்.
5. தலைவலி வந்தால் உண்ணாமலிருங்கள்.
6. மூட்டுவலி இருந்தால் உண்ணாநோன்பு மேற்கொள்ளுங்கள்.
7. சோகமாக இருந்தால் சாப்பிடாதீர்கள்.
8. படபடப்பாக இருக்கும்போது விரதமிருங்கள்.
9. பெருமகிழ்ச்சி வந்தால் உணவைத் தள்ளிப் போடுங்கள்.
10. உடல் பருத்தால் உணவு உண்ணாதீர்கள்.
இப்படி, ஏதாவது சாக்குச் சொல்லி உணவைக் குறையுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். உணவுக்குத் தேவையான அளவு உழைத்த பிறகே சாப்பிடுங்கள். மருத்துவருக்கும், மருந்துகளுக்கும் கொடுக்கும் பணத்தை முற்றிலும் மிச்சப்படுத்தி விடலாம்.
இந்தியாவில் பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு காந்தி மேற்கொண்ட உண்ணாநோன்புகள் பரவலாக அவதானிக்கப்பட்டன.
1. அத்தகைய முதல் நோன்பு, அகமதாபாது ஆலைத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் வலுவிழந்து போகக் கூடாது என்று தொழிலாளிகளை வலியுறுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது. அது எதிராளிகளும், காந்தியின் நண்பர்களுமான ஆலை முதலாளிகளின் மீதும் சங்கடத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை நல்ல முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தது.
2. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக 1924ல் மேற்கொள்ளப்பட 21 நாள் உண்ணாநோன்பு எதிர்பார்த்த பலன்களை ஈட்டாமல் போனது.
3. அரிஜனங்களுக்கு தனி வேட்பாளர் முறைக்குப் பதிலாக மாற்று இட ஒதுக்கீட்டு முறை வேண்டி 1935ல் அவர் மேற்கொண்ட நோன்பு ஆறு நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் இந்தியாவில் தீண்டாமை என்று கொடுமைக்கு இருந்த பெருமை அழிந்தது. கோயில்கள் ஆண்டவனின் சந்நிதிகளாயின. தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் அதற்கு அவமானப்பட வேண்டும் என்ற சமூக நிலை உருவாகியது.
4. கடைசியாக இந்து - முஸ்லீம் கலவரங்களுக்கு எதிராக கொல்கத்தாவிலும், புதுதில்லியிலும் 1947, 48ல் அவரது விரதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றின.
உண்ணாநோன்பு காந்தியின் "சர்வரோகநிவாரணி"
1. மலச்சிக்கல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
2. ரத்தசோகை இருந்தால் உண்ணாமலிருங்கள்.
3. காய்ச்சல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
4. செரிமானம் சரியில்லையென்றால் உண்ணாமலிருங்கள்.
5. தலைவலி வந்தால் உண்ணாமலிருங்கள்.
6. மூட்டுவலி இருந்தால் உண்ணாநோன்பு மேற்கொள்ளுங்கள்.
7. சோகமாக இருந்தால் சாப்பிடாதீர்கள்.
8. படபடப்பாக இருக்கும்போது விரதமிருங்கள்.
9. பெருமகிழ்ச்சி வந்தால் உணவைத் தள்ளிப் போடுங்கள்.
10. உடல் பருத்தால் உணவு உண்ணாதீர்கள்.
இப்படி, ஏதாவது சாக்குச் சொல்லி உணவைக் குறையுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். உணவுக்குத் தேவையான அளவு உழைத்த பிறகே சாப்பிடுங்கள். மருத்துவருக்கும், மருந்துகளுக்கும் கொடுக்கும் பணத்தை முற்றிலும் மிச்சப்படுத்தி விடலாம்.
இந்தியாவில் பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு காந்தி மேற்கொண்ட உண்ணாநோன்புகள் பரவலாக அவதானிக்கப்பட்டன.
1. அத்தகைய முதல் நோன்பு, அகமதாபாது ஆலைத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் வலுவிழந்து போகக் கூடாது என்று தொழிலாளிகளை வலியுறுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது. அது எதிராளிகளும், காந்தியின் நண்பர்களுமான ஆலை முதலாளிகளின் மீதும் சங்கடத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை நல்ல முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தது.
2. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக 1924ல் மேற்கொள்ளப்பட 21 நாள் உண்ணாநோன்பு எதிர்பார்த்த பலன்களை ஈட்டாமல் போனது.
3. அரிஜனங்களுக்கு தனி வேட்பாளர் முறைக்குப் பதிலாக மாற்று இட ஒதுக்கீட்டு முறை வேண்டி 1935ல் அவர் மேற்கொண்ட நோன்பு ஆறு நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் இந்தியாவில் தீண்டாமை என்று கொடுமைக்கு இருந்த பெருமை அழிந்தது. கோயில்கள் ஆண்டவனின் சந்நிதிகளாயின. தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் அதற்கு அவமானப்பட வேண்டும் என்ற சமூக நிலை உருவாகியது.
4. கடைசியாக இந்து - முஸ்லீம் கலவரங்களுக்கு எதிராக கொல்கத்தாவிலும், புதுதில்லியிலும் 1947, 48ல் அவரது விரதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றின.
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 11
காந்தி தன் வாழ்வில் இரண்டு முறை வன்முறை கூட்டங்களினால் அடித்துத் துவைக்கப்பட்டிருக்கிறார்.
முதல்முறை, தென் ஆப்பிரிக்காவில் போராடி வரும் நேரத்தில் இந்தியா திரும்பி விட்டு மனைவி மக்களுடன் திரும்ப தென் ஆப்பிரிக்க போன சமயம். அவர் சென்ற எஸ் எஸ் கூர்லாந்து என்ற கப்பலுடன் நாதேரி என்ற இன்னொரு கப்பலும் அதே நேரத்தில் மும்பையில் இருந்து நேட்டால் துறைமுகத்தை நோக்கிச் சென்றன. இரண்டு கப்பல்களும் ஒன்றாக துறைமுகத்தை அடைந்தன.
காந்தி இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பிரச்சாரம் செய்தார், இப்போது இந்தியர்களை குடியேற்றி தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களை அச்சுறுத்தும் வண்ணம் இரண்டு கப்பல் நிறைய பிணைக்கப்படாத சுயேச்சை இந்தியர்களைக் கூட்டி வந்துள்ளார் என்று வெள்ளை அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து மக்களைக் கோபப்படுத்தியிருந்தனர்.
கப்பல்களை கரைசேர விடாமல் திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெற்றன. அரசில் உயர் பதவியில் இருந்தவர்களு கூட இந்தியர்களுக்கு எதிரான இந்த முயற்சிகளை தூண்டி விட்டனர். 23 நாட்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் கப்பல்களை கரைக்கு வரவும், பயணிகளை கரையிறங்கவும் அதிகாரிகள் அனுமதித்தனர்.
தனது மனைவியையும் குழந்தைகளையும் முன் கூட்டியே வண்டியில் அனுப்பி விட்டு, காந்தி லாட்டன் என்ற வெள்ளை நண்பர் ஒருவருடன் கால்நடையாக போவது என்று முடிவு செய்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் அவரை அடையாளம் கண்டு கூச்சல் இடவே, ஒரு கலவரக் கூட்டம் கூடி விட்டது.
தன் நண்பரிடமிருந்து பிரிக்கப்பட்ட காந்தி கூட்டத்தின் கையில் தர்ம அடி வாங்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் வெளிப்புற அளியைப் பிடித்துக் கொண்ட காந்தியின் மீது அடிகளும், உதைகளும் சரமாரியாக விழுந்தன. அந்த சமயம் அங்கு தற்செயலாக வந்த காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டரின் மனைவியின் தலையீட்டால் அவர் உயிரோடு தப்பினார். அதற்குள் வெள்ளையர்கள் காந்தியின் முகத்திலும், உடலிலும் குத்துகளைப் பொழிந்து விட்டிருந்தனர். அவரது தலைப்பாகைப் பிடுங்கப்பட்டிருந்தது. அவர் வெள்ளையர்களால் காலால் உதைக்கப்பட்டிருந்தார்.
"அவருக்கு நடந்ததற்கு காந்தி தன் வாழ்நாள் முழுவதும் எல்லா வெள்ளை முகங்களையும் வெறுத்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் எட்வர்டு தாம்ஸன். ஆனால் காந்தி, தன்னைத் தாக்கியவர்களை சட்டத்தின் மீது தண்டிக்க முனைய மறுத்து விட்டார். அவர்கள் செய்ததற்கு பொறுப்பாளிகள், அவர்களைத் தூண்டி விட்ட தலைவர்கள்தான், அந்தத் தலைவர்களும் தான் குற்றமற்றவன் என்று தெரிந்தால் கண்டிப்பாக மனம் மாறுவார்கள் என்று கூறி வெள்ளைச் சமூகத்தின் அத்தகைய தலைவர்களில் ஒருவரான அரசு வழக்குரைஞர் எஸ்கோம்பிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டார்.
இதற்குப் பிறகு அவர் குற்றுயிராகத் தாக்கப்பட்டது பதான் இனத்தைச் சேர்ந்த முரட்டு தேசியவாதிகளால். இந்தியர்கள் அடையாள அட்டை வாங்குவதை கட்டாயப்படுத்தும், இந்தியர்களை அடையாள அட்டைக் கேட்டுத் தேடும் உரிமையை காவல் துறைக்கு வழங்கும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி காந்தி உட்பட பல இந்தியர்கள் சிறைக்குப் போனார்கள். சிறையிலிருந்து நேராக ஜெனரல் ஸ்மட்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்பட்ட காந்தி இந்தியர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து கொண்டால், கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற சமரசத்தை ஏற்றுக் கொண்டார்.
காந்தி பதினைந்தாயிரம் பவுண்டுகள் வாங்கிக் கொண்டு இந்தியர் நலன்களை விற்று விட்டார் என்று மீர் ஆலம் என்ற முரட்டு பதான் குற்றம் சாட்டினார். பதிவு செய்யச் செல்லும் எந்த இந்தியனையும் தான் கொல்லப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
அப்படியே முதல்முதலில் பதிவு செய்யப் போன காந்தியை ஒரு குழுவாகச் சேர்ந்து நையப் புடைத்து விட்டனர்.
தன்னைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட காந்தி அவர்களை விடுதலை செய்து விடுமாறும், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடரப் போவதில்லை என்றும் சொல்லி விட்டார்.
அதன் பின்பு, கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படாமல் சத்யாகிரகம் மீண்டும் ஆரம்பித்தது.
(லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த சம்பவங்கள்)
நாம், ஒருவர் ஒரு சுடுசொல் சொல்லி விட்டார் என்று வாழ்நாள் முழுவதும் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டோம் என்று இருக்கிறோம். நம்மைப் படைத்துக் காக்கும் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு விடிவே இல்லை என்று உணர்ந்தால் எந்த சக மனிதன் மீதும் கசப்பையும் வெறுப்பையும் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.
முதல்முறை, தென் ஆப்பிரிக்காவில் போராடி வரும் நேரத்தில் இந்தியா திரும்பி விட்டு மனைவி மக்களுடன் திரும்ப தென் ஆப்பிரிக்க போன சமயம். அவர் சென்ற எஸ் எஸ் கூர்லாந்து என்ற கப்பலுடன் நாதேரி என்ற இன்னொரு கப்பலும் அதே நேரத்தில் மும்பையில் இருந்து நேட்டால் துறைமுகத்தை நோக்கிச் சென்றன. இரண்டு கப்பல்களும் ஒன்றாக துறைமுகத்தை அடைந்தன.
காந்தி இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் பிரச்சாரம் செய்தார், இப்போது இந்தியர்களை குடியேற்றி தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களை அச்சுறுத்தும் வண்ணம் இரண்டு கப்பல் நிறைய பிணைக்கப்படாத சுயேச்சை இந்தியர்களைக் கூட்டி வந்துள்ளார் என்று வெள்ளை அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் பிரச்சாரம் செய்து மக்களைக் கோபப்படுத்தியிருந்தனர்.
கப்பல்களை கரைசேர விடாமல் திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெற்றன. அரசில் உயர் பதவியில் இருந்தவர்களு கூட இந்தியர்களுக்கு எதிரான இந்த முயற்சிகளை தூண்டி விட்டனர். 23 நாட்களுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் கப்பல்களை கரைக்கு வரவும், பயணிகளை கரையிறங்கவும் அதிகாரிகள் அனுமதித்தனர்.
தனது மனைவியையும் குழந்தைகளையும் முன் கூட்டியே வண்டியில் அனுப்பி விட்டு, காந்தி லாட்டன் என்ற வெள்ளை நண்பர் ஒருவருடன் கால்நடையாக போவது என்று முடிவு செய்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் அவரை அடையாளம் கண்டு கூச்சல் இடவே, ஒரு கலவரக் கூட்டம் கூடி விட்டது.
தன் நண்பரிடமிருந்து பிரிக்கப்பட்ட காந்தி கூட்டத்தின் கையில் தர்ம அடி வாங்க ஆரம்பித்தார். ஒரு வீட்டின் வெளிப்புற அளியைப் பிடித்துக் கொண்ட காந்தியின் மீது அடிகளும், உதைகளும் சரமாரியாக விழுந்தன. அந்த சமயம் அங்கு தற்செயலாக வந்த காவல்துறை உயர் அதிகாரி அலெக்ஸாண்டரின் மனைவியின் தலையீட்டால் அவர் உயிரோடு தப்பினார். அதற்குள் வெள்ளையர்கள் காந்தியின் முகத்திலும், உடலிலும் குத்துகளைப் பொழிந்து விட்டிருந்தனர். அவரது தலைப்பாகைப் பிடுங்கப்பட்டிருந்தது. அவர் வெள்ளையர்களால் காலால் உதைக்கப்பட்டிருந்தார்.
"அவருக்கு நடந்ததற்கு காந்தி தன் வாழ்நாள் முழுவதும் எல்லா வெள்ளை முகங்களையும் வெறுத்திருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் எட்வர்டு தாம்ஸன். ஆனால் காந்தி, தன்னைத் தாக்கியவர்களை சட்டத்தின் மீது தண்டிக்க முனைய மறுத்து விட்டார். அவர்கள் செய்ததற்கு பொறுப்பாளிகள், அவர்களைத் தூண்டி விட்ட தலைவர்கள்தான், அந்தத் தலைவர்களும் தான் குற்றமற்றவன் என்று தெரிந்தால் கண்டிப்பாக மனம் மாறுவார்கள் என்று கூறி வெள்ளைச் சமூகத்தின் அத்தகைய தலைவர்களில் ஒருவரான அரசு வழக்குரைஞர் எஸ்கோம்பிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டார்.
இதற்குப் பிறகு அவர் குற்றுயிராகத் தாக்கப்பட்டது பதான் இனத்தைச் சேர்ந்த முரட்டு தேசியவாதிகளால். இந்தியர்கள் அடையாள அட்டை வாங்குவதை கட்டாயப்படுத்தும், இந்தியர்களை அடையாள அட்டைக் கேட்டுத் தேடும் உரிமையை காவல் துறைக்கு வழங்கும் கறுப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி காந்தி உட்பட பல இந்தியர்கள் சிறைக்குப் போனார்கள். சிறையிலிருந்து நேராக ஜெனரல் ஸ்மட்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்த அழைக்கப்பட்ட காந்தி இந்தியர்கள் தாமாக முன்வந்து பதிவு செய்து கொண்டால், கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற சமரசத்தை ஏற்றுக் கொண்டார்.
காந்தி பதினைந்தாயிரம் பவுண்டுகள் வாங்கிக் கொண்டு இந்தியர் நலன்களை விற்று விட்டார் என்று மீர் ஆலம் என்ற முரட்டு பதான் குற்றம் சாட்டினார். பதிவு செய்யச் செல்லும் எந்த இந்தியனையும் தான் கொல்லப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
அப்படியே முதல்முதலில் பதிவு செய்யப் போன காந்தியை ஒரு குழுவாகச் சேர்ந்து நையப் புடைத்து விட்டனர்.
தன்னைத் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட காந்தி அவர்களை விடுதலை செய்து விடுமாறும், அவர்கள் மீது எந்த வழக்கையும் தொடரப் போவதில்லை என்றும் சொல்லி விட்டார்.
அதன் பின்பு, கறுப்புச் சட்டம் திரும்பப் பெறப்படாமல் சத்யாகிரகம் மீண்டும் ஆரம்பித்தது.
(லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கைக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவை இந்த சம்பவங்கள்)
நாம், ஒருவர் ஒரு சுடுசொல் சொல்லி விட்டார் என்று வாழ்நாள் முழுவதும் அவர் முகத்திலேயே விழிக்க மாட்டோம் என்று இருக்கிறோம். நம்மைப் படைத்துக் காக்கும் இறைவன் நம் தவறுகளுக்காக நம்மைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால் நமக்கு விடிவே இல்லை என்று உணர்ந்தால் எந்த சக மனிதன் மீதும் கசப்பையும் வெறுப்பையும் வைத்துக் கொள்ளவே மாட்டோம்.
செவ்வாய், மே 16, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 10
காந்தியின் இறப்புக்கு இரங்கல் செய்தி அனுப்பாத ஒரே பெரிய நாடு சோவியத் யூனியனாம். தன்னுடைய வாழ்க்கைக்கு ரஷ்யாவின பெருமையான் கவுன்ட் டால்ஸ்டாயை ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்ட காந்தி, கடவுளை மறுக்கும் கம்யூனிஸத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததே "தோழர்களின்" கோபத்துக்குக் காரணம்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்ந்த காந்தி, மனதில் துர் எண்ணங்களை ஒழித்து நல்ல சிந்தனைகளை வளர்த்திட இறைபக்தியே ஒரே வழி என்று கண்டார். கடவுளை மறுக்கும் ஒரு கோட்பாடு உண்மையை எப்படி அறிந்திருக்க முடியும் என்ற வெறுப்புதான் கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்டுகளையும் வலுவாக எதிர்க்கவும் கண்டிக்கவும் தூண்டியது.
காந்தியை தமது எதிரிகளாகப் பார்த்தவர்களின் பட்டியல்:
1. கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள்
2. கடவுள் பக்தி கொண்ட இந்து தீவிரவாதிகள்
3. முஸ்லீம்கள், அவர்களை எதிர்க்கும் இந்துக்கள்
4. தாழ்த்தப்பட்டோர்களின் பிரநிதிகள்
ஆனால், இதை எல்லாம் தாண்டி சக மனிதன் மீது தான் கொண்டிருந்த அளவற்ற அன்பினால் கோடிக்கணக்கான, தன் தேசக் குடிமக்களையும், தன்னைப் பார்த்தேயிராத வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர் அந்த மந்திரவாதி.
கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் ஆன்ம சக்திக்கு முன் மண்டியிட வைத்தவர் அந்தப் படைத் தளபதி.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்
என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்ந்த காந்தி, மனதில் துர் எண்ணங்களை ஒழித்து நல்ல சிந்தனைகளை வளர்த்திட இறைபக்தியே ஒரே வழி என்று கண்டார். கடவுளை மறுக்கும் ஒரு கோட்பாடு உண்மையை எப்படி அறிந்திருக்க முடியும் என்ற வெறுப்புதான் கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்டுகளையும் வலுவாக எதிர்க்கவும் கண்டிக்கவும் தூண்டியது.
காந்தியை தமது எதிரிகளாகப் பார்த்தவர்களின் பட்டியல்:
1. கடவுள் இல்லை என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள்
2. கடவுள் பக்தி கொண்ட இந்து தீவிரவாதிகள்
3. முஸ்லீம்கள், அவர்களை எதிர்க்கும் இந்துக்கள்
4. தாழ்த்தப்பட்டோர்களின் பிரநிதிகள்
ஆனால், இதை எல்லாம் தாண்டி சக மனிதன் மீது தான் கொண்டிருந்த அளவற்ற அன்பினால் கோடிக்கணக்கான, தன் தேசக் குடிமக்களையும், தன்னைப் பார்த்தேயிராத வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர் அந்த மந்திரவாதி.
கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவின் ஆன்ம சக்திக்கு முன் மண்டியிட வைத்தவர் அந்தப் படைத் தளபதி.
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 9
சமீபத்தில் நர்மதாவில் அணையின் உயரத்தை ஏற்றுவதை எதிர்த்த மேதா பாட்கரின் உண்ணாவிரதமும், அதற்கு எதிர்ப்பாட்டாக நரேந்திர மோடியின் உண்ணாவிரதமும் செய்திகளில் அடிபட்டது.
காந்தீய உண்ணாவிரதத்தின் விதிகள் என்ன?
எதிராளியை மிரட்ட/ பணிய வைக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள, தன்னைச் சேர்ந்தவர்களை மனம் மாற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்.
யாரை மாற்ற உண்ணாவிரதம் இருக்கிறோமே அவர் மீது பரிசுத்தமான அன்பு இருக்க வேண்டும்.
காந்தியின் உண்ணாவிரதங்கள் எல்லாமே தன் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தவோ, இந்திய மக்களை மனம் திரும்ப வைக்கவோ மேற்கொள்ளப்பட்டவை.
நாடெங்கும் ஆலயங்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் திறக்கப்பட்டது காந்தியின் உண்ணாவிரதம் ஒன்றிற்கு நாட்டு மக்களின் அன்புப் பதிலாகத்தான். கல்கத்தாவின் மதக்கலவரத்தை நடத்தி வந்த முரடர்கள் ஆயுதங்கள் கீழே போட்டது தங்கள் அன்புக்குரிய மகாத்மா உயிரை விட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். காந்தியின் கடைசி உண்ணா விரதம், தில்லியிலும், நாடெங்கிலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தது.
தான் நினைத்தது நடந்து விட வேண்டும், அடுத்தவன் அழிந்து போக வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் சத்தியப் போராட்டங்கள் ஆகாது. எதிரியின் மீது அன்பு கொண்டு, அவனது மனம் மாற வேண்டும் என்ற குறிக்கோளோடு நடத்துவதுதான் காந்தி வழியான சத்தியப் போராட்டம்.
அப்படிப் பார்த்தால் மேதா பாட்கரும் காந்தியைப் பின்பற்றவில்லை. மோடியோ வெகு தூரத்தில் உள்ளார்.
காந்தீய உண்ணாவிரதத்தின் விதிகள் என்ன?
எதிராளியை மிரட்ட/ பணிய வைக்க உண்ணாவிரதம் இருக்கக் கூடாது.
தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள, தன்னைச் சேர்ந்தவர்களை மனம் மாற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்.
யாரை மாற்ற உண்ணாவிரதம் இருக்கிறோமே அவர் மீது பரிசுத்தமான அன்பு இருக்க வேண்டும்.
காந்தியின் உண்ணாவிரதங்கள் எல்லாமே தன் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்தவோ, இந்திய மக்களை மனம் திரும்ப வைக்கவோ மேற்கொள்ளப்பட்டவை.
நாடெங்கும் ஆலயங்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் திறக்கப்பட்டது காந்தியின் உண்ணாவிரதம் ஒன்றிற்கு நாட்டு மக்களின் அன்புப் பதிலாகத்தான். கல்கத்தாவின் மதக்கலவரத்தை நடத்தி வந்த முரடர்கள் ஆயுதங்கள் கீழே போட்டது தங்கள் அன்புக்குரிய மகாத்மா உயிரை விட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான். காந்தியின் கடைசி உண்ணா விரதம், தில்லியிலும், நாடெங்கிலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு வழி வகுத்தது.
தான் நினைத்தது நடந்து விட வேண்டும், அடுத்தவன் அழிந்து போக வேண்டும் என்று மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் சத்தியப் போராட்டங்கள் ஆகாது. எதிரியின் மீது அன்பு கொண்டு, அவனது மனம் மாற வேண்டும் என்ற குறிக்கோளோடு நடத்துவதுதான் காந்தி வழியான சத்தியப் போராட்டம்.
அப்படிப் பார்த்தால் மேதா பாட்கரும் காந்தியைப் பின்பற்றவில்லை. மோடியோ வெகு தூரத்தில் உள்ளார்.
சனி, மே 13, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 8
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக கிளர்ச்சிகள் நடத்திய காந்தி, அந்த சமயத்தில் அங்கு வாழும் கறுப்பு இனத்தவருக்காக என்ன செய்தார்? தான் இந்தியன் என்பதால் இந்தியரின் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போய் விட்ட அவர், இந்தியரின் நிலைமையை விட பல மடங்கு மோசமாக இருந்த கறுப்பர்களுக்காக எதுவும் செய்யவில்லையா?
தம்முடைய கொள்கைகள் மனித இனத்துகே வழி காட்டும் என்று கூறி வந்த மகாத்மா, தன் கண் முன்னால் நடந்திருக்கக் கூடிய கறுப்பர்களின் மீதான அடக்குமுறைகளுக்காக எதுவுமே செய்யவில்லையா?
விடை தெரியவில்லை.
தம்முடைய கொள்கைகள் மனித இனத்துகே வழி காட்டும் என்று கூறி வந்த மகாத்மா, தன் கண் முன்னால் நடந்திருக்கக் கூடிய கறுப்பர்களின் மீதான அடக்குமுறைகளுக்காக எதுவுமே செய்யவில்லையா?
விடை தெரியவில்லை.
வெள்ளி, மே 12, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 7
ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போய், இப்போதெல்லாம் அது கண்ணில் படுவதே இல்லை. அக்டோபர் இரண்டாம் தேதி வரும் விடுமுறையில் தொலைக்காட்சியில் சிறப்புத் திரைப்படங்கள் பார்க்கிறோம். ஜனவரி 30 அன்று முற்பகலில் இரண்டு அஞ்சலி செலுத்துவது கூட ஏறத்தாழ நின்று விட்டது. இதனால் காந்தியை மறந்து விட்டொம் என்று பொருளா?
"காந்தியம் என்பது காலத்துக்கு ஒவ்வாதது, அந்தக் கிழவர் ஏதேதோ உளறி விட்டுப் போய் விட்டார். இப்போதைய வாழ்க்கைக்கு அதெல்லாம் ஒத்து வருமா?" என்று அலட்டிக் கொள்வதால் காந்தி நினைத்த, செய்த, சொன்ன கருத்துகள் நம்மை பாதிப்பதே இல்லை என்று பொருளா?
இந்தியா என்ற நாடு ஒரே நாடாக தேர்தலில் பங்கேற்பது, மத்தியில் ஒரு அரசு செயல்படுவது எல்லாமே காந்தியத்தின் அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டவை. இந்தியப் பெருநாட்டின் பெரும்பகுதிகள் நேபாளத்தைப் போல மன்னரால் ஆளப்படலாம். பிற பகுதிகள் வங்காள தேசம் போல ராணுவ அதிகாரத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கலாம். யூகோஸ்லேவியா போல நாடு சிதறியிருக்கலாம்.
இவை எல்லாம் நிகழாமல் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை காந்திய சிந்தனைகளிலிருந்து பிறந்தது. காந்தியின் படிப்பினைகளைப் புறக்கணித்து சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் ஒடுக்கப்பட்டவரகள் இன்னும் முன்னேற முடியாமல் இருப்பது நமது "ஒளிரும்" வாழ்க்கையைத் தகர்த்து விடக்கூடிய வெடி குண்டுகள். காந்தியின் பாடங்களை மறந்து, சிறுபான்மையினர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து, தேவைக்கதிகமாக செலவளித்து இல்லாதவர் வாழ்வைத் தகர்ப்பது நமது "மிளிரும்" வாழ்க்கையில் இருள் புகுத்தி விடக் கூடிய கார்மேகங்கள்.
நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்கள் வாங்கிப் பதுக்கும் நகைகள் ஒரு ஏழைக் குழந்தையின் தட்டிலிருந்து உணவைப் பறிக்கின்றன.
நிலத்தை வாங்கி விற்று பணத்தைப் பெருக்கும் நபர்கள் ஒரு சிறு குழந்தையின் கல்வி வாய்ப்பை மறுக்கிறார்கள்.
இதைத் தெரிந்து கொள்ள காந்தியம் படிக்க வேண்டாம். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம் சுமித் எழுதிய முதல் பொருளாதார நூலைப் படித்தால் போதும். 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சு எழுதிய பொருளாதார நூலைப் படித்தால் போதும். வரலாற்றில் வழிகாட்டிச் சென்ற பெரிய மனிதர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டால் போதும்.
"காந்தியம் என்பது காலத்துக்கு ஒவ்வாதது, அந்தக் கிழவர் ஏதேதோ உளறி விட்டுப் போய் விட்டார். இப்போதைய வாழ்க்கைக்கு அதெல்லாம் ஒத்து வருமா?" என்று அலட்டிக் கொள்வதால் காந்தி நினைத்த, செய்த, சொன்ன கருத்துகள் நம்மை பாதிப்பதே இல்லை என்று பொருளா?
இந்தியா என்ற நாடு ஒரே நாடாக தேர்தலில் பங்கேற்பது, மத்தியில் ஒரு அரசு செயல்படுவது எல்லாமே காந்தியத்தின் அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டவை. இந்தியப் பெருநாட்டின் பெரும்பகுதிகள் நேபாளத்தைப் போல மன்னரால் ஆளப்படலாம். பிற பகுதிகள் வங்காள தேசம் போல ராணுவ அதிகாரத்தின் கீழ் உழன்று கொண்டிருக்கலாம். யூகோஸ்லேவியா போல நாடு சிதறியிருக்கலாம்.
இவை எல்லாம் நிகழாமல் இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை காந்திய சிந்தனைகளிலிருந்து பிறந்தது. காந்தியின் படிப்பினைகளைப் புறக்கணித்து சாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் ஒடுக்கப்பட்டவரகள் இன்னும் முன்னேற முடியாமல் இருப்பது நமது "ஒளிரும்" வாழ்க்கையைத் தகர்த்து விடக்கூடிய வெடி குண்டுகள். காந்தியின் பாடங்களை மறந்து, சிறுபான்மையினர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்து, தேவைக்கதிகமாக செலவளித்து இல்லாதவர் வாழ்வைத் தகர்ப்பது நமது "மிளிரும்" வாழ்க்கையில் இருள் புகுத்தி விடக் கூடிய கார்மேகங்கள்.
நல்ல நிலையில் இருக்கும் குடும்பங்கள் வாங்கிப் பதுக்கும் நகைகள் ஒரு ஏழைக் குழந்தையின் தட்டிலிருந்து உணவைப் பறிக்கின்றன.
நிலத்தை வாங்கி விற்று பணத்தைப் பெருக்கும் நபர்கள் ஒரு சிறு குழந்தையின் கல்வி வாய்ப்பை மறுக்கிறார்கள்.
இதைத் தெரிந்து கொள்ள காந்தியம் படிக்க வேண்டாம். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதம் சுமித் எழுதிய முதல் பொருளாதார நூலைப் படித்தால் போதும். 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சு எழுதிய பொருளாதார நூலைப் படித்தால் போதும். வரலாற்றில் வழிகாட்டிச் சென்ற பெரிய மனிதர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டால் போதும்.
செவ்வாய், மே 09, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 6
காந்தி வங்காளத்தின் நவகாளி கிராமத்துக்குப் போகிறார். முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக இந்துக்களை மதம் மாற்றவும், இந்துப் பெண்களை சூறையாடவும், இந்து வீடுகளையும் கோவில்களையும் எரிக்கவும் செய்த இடம் நவகாளி. காந்தி எதற்கு அங்கே போகிறார்?
"பெண்மையில் கூக்குரல் என்னை அழைக்கிறது. வன்முறையின் கடைசிப் பொறி வரை அணையும் வரை நான் வங்காளத்தை விட்டுப் போக மாட்டேன். அதற்கு பல வருடங்கள் ஆகலாம். நான் இங்கேயே இறந்து விட நேரலாம். ஆனால் நான் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் இங்கு இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டும் கொடுத்து, அதற்காக என்னால் எதையும் செய்ய முடியா விட்டால் நான் இறப்பதையே விரும்புவேன்."
ஆனால், பக்கத்து பீகார் மாநிலத்தில் இந்துக்கள் முஸ்லீம்களை பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
"பீகாரி இந்துக்களின் இந்த பாதகங்கள் காய்தே அசாம் ஜின்னா காங்கிரசை இந்துக் கட்சி என்று குற்றம் சாட்டுவதை உண்மை ஆக்கி விடலாம். காங்கிரசின் பெருமைகளை உயர்த்த பெரும் பணிகளைச் செய்துள்ள பீகார், அதன் கல்லறையை தோண்டுவதில் முதலாவதாக இருந்து விடக்கூடாது. "
புது தில்லியில் தன்னாட்சி கிடைத்ததற்கான கொண்டாட்டங்களில் பங்கு பெறவில்லை. "35 ஆண்டுகளாக எதற்காகப் பாடுபட்டேனோ அது அழிகிறதே" என்ற துக்கத்தோடு பிரிவினை செய்யப்படும் மாநிலங்களில் அமைதித் தூதுவராக செல்கிறார். ஒற்றை மனிதன் அமைதிப் படையாக அவர் சென்ற ஊர்களில் எல்லாம் மக்கள் வன்முறையைக் கைவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள். வங்காளத்தில் இனிமேல் அன்பு நிலவும் என்று உறுதி செய்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பிய பிறகு, எந்த விதமான கலவரமும் நடக்கவில்லை. யாராவது முதல் கல்லை எறிந்தால் அது காந்தியைக் கொலை செய்வதற்கு சமமாகும் என்று இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் தெரிந்திருந்தது. கலவரத்தைத் தூண்டக் கூடிய தலைவர்களும், கலவரம் செய்யக் கூடிய முரடர்களும் வெல்லப்பட்டனர். அமைதியை விரும்பும் பெரும்பான்மையினரின் கைகள் பலப்படுத்தப்பட்டன.
இனிமேல் பாஞ்சாலத்துக்குச் செல்லலாம் என்று அமைதித் தூதர் தில்லி வருகிறார். தில்லியிலோ நிலைமை மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களின் கோபம் தில்லி இசுலாமியர்கள் மீது பாயத் துடித்துக் கொண்டிருந்தது. தீவிர வாத இந்துக் கட்சியினர் பாகிஸ்தானை பழி வாங்குவதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.
ஒரு இந்தியன் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் தில்லியில் நடமாட முடியவில்லை என்றால் சுய ஆட்சி கிடைத்தும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். சகோதரர்களான இந்துக்களும் இசுலாமியரும் அமைதியாக வாழ முடியாத நிலையை காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவருடைய கடைசி உண்ணா நோன்பு, நாடெங்கும் தீவிரவாத உணர்வுகளை கிள்ளி எறிந்து குலையாத அமைதியை அமைத்துத் தந்தது. இந்தியா என்ற தேசத்தை உருவாக்கி, அதில் தீண்டாமை என்ற பழக்கத்தை அவமானமாக்கி, அதில் பல மதத்தினரும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிச் சென்ற அந்த மகாத்மாவின் அன்புதான் இன்றும் நம் தேசத்தை வழி நடத்திச் செல்கின்றது.
அந்தக் கொள்கைகளை உடைத்து எறிய முயலும் இந்துத்துவா குழுக்களின் முயற்சிகள் மண்ணாகிப் போகட்டும்.
"பெண்மையில் கூக்குரல் என்னை அழைக்கிறது. வன்முறையின் கடைசிப் பொறி வரை அணையும் வரை நான் வங்காளத்தை விட்டுப் போக மாட்டேன். அதற்கு பல வருடங்கள் ஆகலாம். நான் இங்கேயே இறந்து விட நேரலாம். ஆனால் நான் தோல்வியை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் இங்கு இருப்பதால் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மட்டும் கொடுத்து, அதற்காக என்னால் எதையும் செய்ய முடியா விட்டால் நான் இறப்பதையே விரும்புவேன்."
ஆனால், பக்கத்து பீகார் மாநிலத்தில் இந்துக்கள் முஸ்லீம்களை பழி வாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
"பீகாரி இந்துக்களின் இந்த பாதகங்கள் காய்தே அசாம் ஜின்னா காங்கிரசை இந்துக் கட்சி என்று குற்றம் சாட்டுவதை உண்மை ஆக்கி விடலாம். காங்கிரசின் பெருமைகளை உயர்த்த பெரும் பணிகளைச் செய்துள்ள பீகார், அதன் கல்லறையை தோண்டுவதில் முதலாவதாக இருந்து விடக்கூடாது. "
புது தில்லியில் தன்னாட்சி கிடைத்ததற்கான கொண்டாட்டங்களில் பங்கு பெறவில்லை. "35 ஆண்டுகளாக எதற்காகப் பாடுபட்டேனோ அது அழிகிறதே" என்ற துக்கத்தோடு பிரிவினை செய்யப்படும் மாநிலங்களில் அமைதித் தூதுவராக செல்கிறார். ஒற்றை மனிதன் அமைதிப் படையாக அவர் சென்ற ஊர்களில் எல்லாம் மக்கள் வன்முறையைக் கைவிடுவதாக உறுதி அளிக்கிறார்கள். வங்காளத்தில் இனிமேல் அன்பு நிலவும் என்று உறுதி செய்து கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பிய பிறகு, எந்த விதமான கலவரமும் நடக்கவில்லை. யாராவது முதல் கல்லை எறிந்தால் அது காந்தியைக் கொலை செய்வதற்கு சமமாகும் என்று இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் தெரிந்திருந்தது. கலவரத்தைத் தூண்டக் கூடிய தலைவர்களும், கலவரம் செய்யக் கூடிய முரடர்களும் வெல்லப்பட்டனர். அமைதியை விரும்பும் பெரும்பான்மையினரின் கைகள் பலப்படுத்தப்பட்டன.
இனிமேல் பாஞ்சாலத்துக்குச் செல்லலாம் என்று அமைதித் தூதர் தில்லி வருகிறார். தில்லியிலோ நிலைமை மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களின் கோபம் தில்லி இசுலாமியர்கள் மீது பாயத் துடித்துக் கொண்டிருந்தது. தீவிர வாத இந்துக் கட்சியினர் பாகிஸ்தானை பழி வாங்குவதற்கு திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர்.
ஒரு இந்தியன் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் தில்லியில் நடமாட முடியவில்லை என்றால் சுய ஆட்சி கிடைத்தும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம். சகோதரர்களான இந்துக்களும் இசுலாமியரும் அமைதியாக வாழ முடியாத நிலையை காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவருடைய கடைசி உண்ணா நோன்பு, நாடெங்கும் தீவிரவாத உணர்வுகளை கிள்ளி எறிந்து குலையாத அமைதியை அமைத்துத் தந்தது. இந்தியா என்ற தேசத்தை உருவாக்கி, அதில் தீண்டாமை என்ற பழக்கத்தை அவமானமாக்கி, அதில் பல மதத்தினரும் சேர்ந்து வாழும் சூழலை உருவாக்கிச் சென்ற அந்த மகாத்மாவின் அன்புதான் இன்றும் நம் தேசத்தை வழி நடத்திச் செல்கின்றது.
அந்தக் கொள்கைகளை உடைத்து எறிய முயலும் இந்துத்துவா குழுக்களின் முயற்சிகள் மண்ணாகிப் போகட்டும்.
செவ்வாய், மே 02, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 5
காந்தியின சத்திய சோதனை போன்ற எண்ண நேர்மை நிறைந்த தன் வாழ்க்கைக் கதை ஒன்றைக் காண்பது மிக அரிது. தான் ஒவ்வொரு வயதிலும் செய்த செய்ய மறந்தவற்றை எந்த விதமான மறைப்புகளும் இன்றி உலகத்துக்கு முன் வெளிப்படுத்திய துணிச்சல் அந்த நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.
எதையாவது மறைத்திருந்தாலோ, திரித்திருந்தாலோ நமக்கு எப்படி தெரியும் என்ற வாதம் மனதில் தோன்றலாம். சத்திய சோதனையைப் படித்த யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது என்பது உறுதி.
தான் கூறிய பொய்கள், திருட்டு தனது பலகீனங்கள், அவற்றைப் புரிந்து கொள்ள தான் நடத்திய சோதனைகள் என்று படிப்பவர் மனதைத் தொட்டு விடும் இந்தப் புத்தகம் மிக மலிவு விலையில் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு 30 ரூபாய்தான்.
எதையாவது மறைத்திருந்தாலோ, திரித்திருந்தாலோ நமக்கு எப்படி தெரியும் என்ற வாதம் மனதில் தோன்றலாம். சத்திய சோதனையைப் படித்த யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது என்பது உறுதி.
தான் கூறிய பொய்கள், திருட்டு தனது பலகீனங்கள், அவற்றைப் புரிந்து கொள்ள தான் நடத்திய சோதனைகள் என்று படிப்பவர் மனதைத் தொட்டு விடும் இந்தப் புத்தகம் மிக மலிவு விலையில் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு 30 ரூபாய்தான்.
ஞாயிறு, ஏப்ரல் 23, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 4
இயந்திரம் சார்ந்த பொருளாதரத்துக்கு எதிரானது காந்தியம். கோடிக் கணக்கான மக்கள் வாழும் இந்தியப் பொருளாதாரத்தில் இயந்திரத்தால் மலிவாகச் செய்யப்படும் பொருட்கள் கிராமச் சமூகங்களை அழித்து, பல லட்ச மக்களை அடிமை ஊழியத்துக்கு செலுத்தி விடும் என்கிறார் காந்தியடிகள்.
பல் தேய்க்கும் பசையை எடுத்துக் கொள்வோம். பாரம்பரியமாக ஆல்/வேம்புக் குச்சிகளால் பல் துலக்கி வந்த நாம் இப்போது முற்றிலும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் சார்ந்த பொருட்களுக்கு மாறி விட்டோம். அதைத் தயாரித்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல் என்று மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிடுகின்றன.
தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆலங்குச்சி, வேப்பங்குச்சிகளைப் பண்படுத்தி, பொதி செய்து கவர்ச்சியாக சந்தைப்படுத்தும் முறையை நாம் உருவாக்கியிருந்தால் தொழில் நுட்ப முன்னேற்றத்தை நம் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவதோடு, நமக்கு பொருந்திய முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே மாதிரி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்பொருளையும் ஆராய்ந்து பாருங்கள். மெக்டொனால்டு அல்லது பிட்சா ஹட் என்பது ஒரு கோட்பாடு. பாரம்பரிய உணவுப் பொருட்களை தரமாகச் சமைத்து வாடிக்கையாளருக்கு வசதியாக வீடு தேடி கொண்டு கொடுப்பது என்பது பரபரப்பான உலகில் சிலருக்குத் தேவைப்படலாம். அந்தக் கோட்பாட்டை மட்டுமில்லாமல், பாலாடைக் கட்டி நிறைந்த நம் தட்பவெப்பத்துக்கு முற்றிலும் பொருந்தாத மேற்கத்திய உணவையும், அந்தக் கோட்பாட்டோடு இறக்குமதி செய்துள்ளோம். நம் பாரம்பரிய உணவை பிட்சா ஹட் போல தயாரித்து வழங்கும் தொழில் நம் நாட்டுக்கு சரியான வளம் சேர்த்திருக்கும்.
காந்தியடிகள் கணினி மயமாக்குதலை ஆதரித்திருப்பாரா, எதிர்த்திருப்பாரா?
நம் நாட்டு பண்பாட்டை அழித்து விடும் எதையும் அவர் எதிர்த்திருக்கக் கூடும். அமெரிக்காவில் அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு புரியும்படியுமான உவமானத்தில் வடிவமைக்கப்பட்ட கணினி இடைமுகங்களை இங்கும் இறக்குமதி செய்து நமது தொண்டைகளுக்குள் திணித்துக் கொண்டுள்ளோம். மேசைத் தளம் என்றில்லாமல் நமக்கு அறிமுகமான ஒரு உவமானத்தின் அடிப்படையில் கணினிகள் உருவாக்கினால், நம் கிராமங்களிலும் மக்கள் வசதியாகப் பயன்படுத்தும் வண்ணம் கணினிகளை வடிவமைத்தால் அது உண்மையான முன்னேற்றம். நம்முடைய தனித்தன்மை எங்கே போயிற்று? நம்முடைய வளங்களை எல்லாம், வாரி வெளியே போட்டு விட்டு, அமெரிக்க கலாச்சாரத்தை டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானா?
பல் தேய்க்கும் பசையை எடுத்துக் கொள்வோம். பாரம்பரியமாக ஆல்/வேம்புக் குச்சிகளால் பல் துலக்கி வந்த நாம் இப்போது முற்றிலும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் சார்ந்த பொருட்களுக்கு மாறி விட்டோம். அதைத் தயாரித்தல், விநியோகித்தல், சந்தைப்படுத்தல் என்று மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிடுகின்றன.
தொழில் நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆலங்குச்சி, வேப்பங்குச்சிகளைப் பண்படுத்தி, பொதி செய்து கவர்ச்சியாக சந்தைப்படுத்தும் முறையை நாம் உருவாக்கியிருந்தால் தொழில் நுட்ப முன்னேற்றத்தை நம் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவதோடு, நமக்கு பொருந்திய முன்னேற்றம் ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே மாதிரி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு நுகர்பொருளையும் ஆராய்ந்து பாருங்கள். மெக்டொனால்டு அல்லது பிட்சா ஹட் என்பது ஒரு கோட்பாடு. பாரம்பரிய உணவுப் பொருட்களை தரமாகச் சமைத்து வாடிக்கையாளருக்கு வசதியாக வீடு தேடி கொண்டு கொடுப்பது என்பது பரபரப்பான உலகில் சிலருக்குத் தேவைப்படலாம். அந்தக் கோட்பாட்டை மட்டுமில்லாமல், பாலாடைக் கட்டி நிறைந்த நம் தட்பவெப்பத்துக்கு முற்றிலும் பொருந்தாத மேற்கத்திய உணவையும், அந்தக் கோட்பாட்டோடு இறக்குமதி செய்துள்ளோம். நம் பாரம்பரிய உணவை பிட்சா ஹட் போல தயாரித்து வழங்கும் தொழில் நம் நாட்டுக்கு சரியான வளம் சேர்த்திருக்கும்.
காந்தியடிகள் கணினி மயமாக்குதலை ஆதரித்திருப்பாரா, எதிர்த்திருப்பாரா?
நம் நாட்டு பண்பாட்டை அழித்து விடும் எதையும் அவர் எதிர்த்திருக்கக் கூடும். அமெரிக்காவில் அமெரிக்க கலாச்சாரத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு புரியும்படியுமான உவமானத்தில் வடிவமைக்கப்பட்ட கணினி இடைமுகங்களை இங்கும் இறக்குமதி செய்து நமது தொண்டைகளுக்குள் திணித்துக் கொண்டுள்ளோம். மேசைத் தளம் என்றில்லாமல் நமக்கு அறிமுகமான ஒரு உவமானத்தின் அடிப்படையில் கணினிகள் உருவாக்கினால், நம் கிராமங்களிலும் மக்கள் வசதியாகப் பயன்படுத்தும் வண்ணம் கணினிகளை வடிவமைத்தால் அது உண்மையான முன்னேற்றம். நம்முடைய தனித்தன்மை எங்கே போயிற்று? நம்முடைய வளங்களை எல்லாம், வாரி வெளியே போட்டு விட்டு, அமெரிக்க கலாச்சாரத்தை டாலர் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதானா?
சனி, ஏப்ரல் 22, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 3
முசுலீம்கள், தலித்துகள், இந்துக்கள், பொதுவுடமைக் கட்சியினர் ஏன் காங்கிரசு கட்சியினர் கூட காந்தியை எதிர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். இந்தியாவுக்கு மக்களாட்சி முறையின் விதையை ஊன்றி அந்தப் பண்பாட்டை அரசியல் கலாச்சாரத்தில் வளர்த்த பெருமை காந்தியையே சேரும்.
அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு தன் மனதுக்குப்பட்டவற்றை பிற தலைவர்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்திருக்க முடியும். சாதி சம்பந்தமாக அம்பேத்கார் எழுதிய ஒரு மடலில், சாதி ஒழிந்தால்தான் அதன் பேரில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்று உறுதிபட குறிப்பிடுகிறார். அதற்கான பதிலில், தான் அம்பேத்காரின் கருத்தைப் புரிந்து கொள்வதாகவும், அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதின் நியாயத்தை ஒத்துக் கொள்வதாகவும், ஆனால் அதனுடன் மாறுபடுவதாகவும் காந்தி எழுதுகிறார். சாதியை ஒழிக்க முனையாமல், அந்த முறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அழித்து விட போராட வேண்டும் என்று, அந்த ஏற்றத் தாழ்வுகள் அழிந்த பிறகு, சாதிமுறை நமக்கு குறைபட்டதாகத் தெரிந்தால் அதையும் ஒழிப்பதைப் பற்றி சிந்த்திக்கலாம் என்பதுதான் தனது கொள்கை என்று எழுதுகிறார்.
இதற்கு தொடர்புடைய ஒரு செய்தி. போரூரில் ஒரு தட்டி வைத்துள்ளார்கள், அதில் அம்பேத்காரின் ஒரு மேற்கோள் எழுதப்பட்டுள்ளது.
"சாதிதான் சமூகம் என்றால், காற்றில் விஷ விதைகள் பரவட்டும்"
இது காந்தியின் கொள்கைக்கு அம்பேத்காரின் பதிலடியாக இருக்குமோ?
அவருக்கு மக்களிடையே இருந்த செல்வாக்குக்கு தன் மனதுக்குப்பட்டவற்றை பிற தலைவர்களின் மீது வலுக்கட்டாயமாகத் திணித்திருக்க முடியும். சாதி சம்பந்தமாக அம்பேத்கார் எழுதிய ஒரு மடலில், சாதி ஒழிந்தால்தான் அதன் பேரில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் என்று உறுதிபட குறிப்பிடுகிறார். அதற்கான பதிலில், தான் அம்பேத்காரின் கருத்தைப் புரிந்து கொள்வதாகவும், அவர் ஏன் அப்படிக் கூறுகிறார் என்பதின் நியாயத்தை ஒத்துக் கொள்வதாகவும், ஆனால் அதனுடன் மாறுபடுவதாகவும் காந்தி எழுதுகிறார். சாதியை ஒழிக்க முனையாமல், அந்த முறையில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை அழித்து விட போராட வேண்டும் என்று, அந்த ஏற்றத் தாழ்வுகள் அழிந்த பிறகு, சாதிமுறை நமக்கு குறைபட்டதாகத் தெரிந்தால் அதையும் ஒழிப்பதைப் பற்றி சிந்த்திக்கலாம் என்பதுதான் தனது கொள்கை என்று எழுதுகிறார்.
இதற்கு தொடர்புடைய ஒரு செய்தி. போரூரில் ஒரு தட்டி வைத்துள்ளார்கள், அதில் அம்பேத்காரின் ஒரு மேற்கோள் எழுதப்பட்டுள்ளது.
"சாதிதான் சமூகம் என்றால், காற்றில் விஷ விதைகள் பரவட்டும்"
இது காந்தியின் கொள்கைக்கு அம்பேத்காரின் பதிலடியாக இருக்குமோ?
வெள்ளி, ஏப்ரல் 21, 2006
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 2
அந்த இனிப்பு விவகாரத்துக்கு வருவோம். இனிப்பு என்பது ஒரு சுட்டிதான். அடிப்படைத் தேவைகளுக்கு அல்லது தனது பணிக்குத் தேவையானவற்றைத் தவிர்த்து அதிகமாக புணர்வது எதுவுமே திருட்டுதான்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பணக்கார குழந்தைக்கு அதன் பெற்றோர் பெருமளவில் விலை உயர்ந்த பொம்மைகளை வாங்கிக் குவித்தால், நாட்டின் இன்னொரு பகுதியில் பல ஏழை குழந்தைகள் பொம்மை கிடைக்காமல் இருக்க நேரிடும்.
இதை விளக்க சில அனுமானங்களை செய்து கொள்ளலாம். சில உண்மைகளையும் மனதில் கொள்ளுவோம்.
பொருளாதார உண்மை : இந்த உலகின் வளங்கள் அளவுக்கு அடங்கியவை. எந்த வளத்தையும் ஒரு வகையில் பயன்படுத்தி விட்டால் பிற பயன்பாடுகளுக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது.
அனுமானம் : உலகில் பொம்மைகள் செய்வதற்கான தொழில்களும், பொம்மைகளைவாங்கி விளையாடும் குழந்தைகளும் தமக்கு முற்றிலும் மன நிறைவு கிடைக்கும் நிலையில் உள்ளனர். பத்து ரூபாய்க்கு ஒரு பொம்மை என்ற விலையில் நாட்டில் எல்ல குழந்தைகளுக்கும் ஒரு பொம்மை விளையாடக் கிடைக்கிறது, பொம்மை செய்யும் வியாபாரிகளுக்கும் நியாயமான லாபம் கிடைக்கிறது. ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளும் ஒரே அளவில் பொம்மை வைத்து விளையாடி மகிழ்ச்சியாக உள்ளனர்.
இப்போது ஒரு பணக்காரத் தந்தை தன் குழந்தைக்கு அதிக எண்ணிக்கையிலோ உயர்ந்த தரத்திலோ பொம்மை கொடுக்க வேண்டும் என்று முனைகிறார். அவ்வாறு கிடைக்க ஒரு வழி, ஏற்கனவே தகுதர பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியை அணுகி அதிக பணம் கொடுத்து கூடுதல் பொம்மைகளைத் தனக்கு விற்க தூண்டுதல். வியாபாரிக்கு மகிழ்ச்சிதான், அதிக விலைக்கு கூடுதல் பொம்மைகளை விற்று விடுகிறார்.
இப்போது பத்து ரூபாய்க்கு பொம்மை வாங்க வரும் ஒரு தந்தைக்கு பொம்மை இல்லை. அதை சமாளிக்க, பொம்மைகளின் விலை சற்றே உயர்ந்து விடுகிறது. பத்து ரூபாய்க்கு வாங்கி விட முடியும் பதினொன்று ரூபாய் மிக அதிகம் என்ற குடும்பங்களின் குழந்தைகளுக்கு பொம்மை இல்லாமல் போய் விடும்.
இது இத்தோடு முடிந்து விடவில்லை. வியாபாரியின் கையில் கூடுதல் லாபம். அதை இன்னும் அதிகரிக்க என்ன வழி என்று பார்க்கிறார். பணக்காரர், கூடுதல் கூறுகள் சேர்க்கப்பட்ட பொம்மையை இன்னும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார் என்று ஊகித்துக் கொண்டு, தகுதர பொம்மைகளின் உற்பத்தியைக் குறைத்து விட்டு, புதிய ரக உயர் விலை பொம்மைகளை செய்கிறார். தகுதர பொம்மைகளின் எண்ணிக்கைகள் குறைய, விலை இன்னும் ஏறுகிறது. இன்னும் பல குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் அடைவது நின்று விடுகிறது.
போட்டியாளர்களின் பொம்மைகளிலிருந்து தன்னுடையதை வேறுபடுத்தி அதிக விலை ஈட்ட, விளம்பரங்கள் வர ஆரம்பிக்கன்றன. பளபளக்கும் பொதிகளில் பொம்மைகள் கடைகளுக்கு வந்து சேருகின்றன. இப்படி ஒவ்வொரு வகையிலும், கூடும் செலவினங்கள், பத்து ரூபாய் பொம்மைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விலையைக் கூட்டிக் கொண்டே வருகின்றன.
இதுதான் சந்தை பொருளாதாரத்தின் இயங்கு முறை. இதை ஒவ்வொருவரின் மன ஆசைக்கு விட்டு விடுவது, முதலாளித்துவம். அரசே வினியோகம் செய்வது பொதுவுடமை தத்துவம். ஒவ்வொருவரும் சுயமாக தேவையற்றவற்றைத் துறந்து விடுவது காந்தியம்.
வினோபாவின் பூதானத் திட்டம் இந்த அடிப்படையில் பிறந்தது. காந்தியடிகளின் செல்வப்பாதுப்பாளர் தத்துவம் இதைத்தான் வலியுறுத்துகிறது. சந்தைப் பொருளாதரத்தின் குறைபாடுகளால் செல்வம் ஒரு இடத்தில் குவிந்து விடுவது இயற்கைதான். அதை தன் மனம் போல ஆளாமல் சமூகத்தின் சொத்து தமது பாதுகாப்பில் வந்து சேர்ந்துள்ளது என்ற பொறுப்போடு பயன்படுத்துவது காந்தியம் போதிக்கும் வழி முறை.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு பணக்கார குழந்தைக்கு அதன் பெற்றோர் பெருமளவில் விலை உயர்ந்த பொம்மைகளை வாங்கிக் குவித்தால், நாட்டின் இன்னொரு பகுதியில் பல ஏழை குழந்தைகள் பொம்மை கிடைக்காமல் இருக்க நேரிடும்.
இதை விளக்க சில அனுமானங்களை செய்து கொள்ளலாம். சில உண்மைகளையும் மனதில் கொள்ளுவோம்.
பொருளாதார உண்மை : இந்த உலகின் வளங்கள் அளவுக்கு அடங்கியவை. எந்த வளத்தையும் ஒரு வகையில் பயன்படுத்தி விட்டால் பிற பயன்பாடுகளுக்கு அது கிடைக்காமல் போய் விடுகிறது.
அனுமானம் : உலகில் பொம்மைகள் செய்வதற்கான தொழில்களும், பொம்மைகளைவாங்கி விளையாடும் குழந்தைகளும் தமக்கு முற்றிலும் மன நிறைவு கிடைக்கும் நிலையில் உள்ளனர். பத்து ரூபாய்க்கு ஒரு பொம்மை என்ற விலையில் நாட்டில் எல்ல குழந்தைகளுக்கும் ஒரு பொம்மை விளையாடக் கிடைக்கிறது, பொம்மை செய்யும் வியாபாரிகளுக்கும் நியாயமான லாபம் கிடைக்கிறது. ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா குழந்தைகளும் ஒரே அளவில் பொம்மை வைத்து விளையாடி மகிழ்ச்சியாக உள்ளனர்.
இப்போது ஒரு பணக்காரத் தந்தை தன் குழந்தைக்கு அதிக எண்ணிக்கையிலோ உயர்ந்த தரத்திலோ பொம்மை கொடுக்க வேண்டும் என்று முனைகிறார். அவ்வாறு கிடைக்க ஒரு வழி, ஏற்கனவே தகுதர பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியை அணுகி அதிக பணம் கொடுத்து கூடுதல் பொம்மைகளைத் தனக்கு விற்க தூண்டுதல். வியாபாரிக்கு மகிழ்ச்சிதான், அதிக விலைக்கு கூடுதல் பொம்மைகளை விற்று விடுகிறார்.
இப்போது பத்து ரூபாய்க்கு பொம்மை வாங்க வரும் ஒரு தந்தைக்கு பொம்மை இல்லை. அதை சமாளிக்க, பொம்மைகளின் விலை சற்றே உயர்ந்து விடுகிறது. பத்து ரூபாய்க்கு வாங்கி விட முடியும் பதினொன்று ரூபாய் மிக அதிகம் என்ற குடும்பங்களின் குழந்தைகளுக்கு பொம்மை இல்லாமல் போய் விடும்.
இது இத்தோடு முடிந்து விடவில்லை. வியாபாரியின் கையில் கூடுதல் லாபம். அதை இன்னும் அதிகரிக்க என்ன வழி என்று பார்க்கிறார். பணக்காரர், கூடுதல் கூறுகள் சேர்க்கப்பட்ட பொம்மையை இன்னும் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பார் என்று ஊகித்துக் கொண்டு, தகுதர பொம்மைகளின் உற்பத்தியைக் குறைத்து விட்டு, புதிய ரக உயர் விலை பொம்மைகளை செய்கிறார். தகுதர பொம்மைகளின் எண்ணிக்கைகள் குறைய, விலை இன்னும் ஏறுகிறது. இன்னும் பல குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் அடைவது நின்று விடுகிறது.
போட்டியாளர்களின் பொம்மைகளிலிருந்து தன்னுடையதை வேறுபடுத்தி அதிக விலை ஈட்ட, விளம்பரங்கள் வர ஆரம்பிக்கன்றன. பளபளக்கும் பொதிகளில் பொம்மைகள் கடைகளுக்கு வந்து சேருகின்றன. இப்படி ஒவ்வொரு வகையிலும், கூடும் செலவினங்கள், பத்து ரூபாய் பொம்மைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விலையைக் கூட்டிக் கொண்டே வருகின்றன.
இதுதான் சந்தை பொருளாதாரத்தின் இயங்கு முறை. இதை ஒவ்வொருவரின் மன ஆசைக்கு விட்டு விடுவது, முதலாளித்துவம். அரசே வினியோகம் செய்வது பொதுவுடமை தத்துவம். ஒவ்வொருவரும் சுயமாக தேவையற்றவற்றைத் துறந்து விடுவது காந்தியம்.
வினோபாவின் பூதானத் திட்டம் இந்த அடிப்படையில் பிறந்தது. காந்தியடிகளின் செல்வப்பாதுப்பாளர் தத்துவம் இதைத்தான் வலியுறுத்துகிறது. சந்தைப் பொருளாதரத்தின் குறைபாடுகளால் செல்வம் ஒரு இடத்தில் குவிந்து விடுவது இயற்கைதான். அதை தன் மனம் போல ஆளாமல் சமூகத்தின் சொத்து தமது பாதுகாப்பில் வந்து சேர்ந்துள்ளது என்ற பொறுப்போடு பயன்படுத்துவது காந்தியம் போதிக்கும் வழி முறை.
ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 1
"இந்தியா போன்ற ஏழைகள் நிறைந்த நாட்டில் இனிப்புப் பண்டங்களையும் சுவைக்காக மட்டுமான பொருட்களையும் உண்பது திருடுவதற்குச் சமமாகும்". - காந்தி
நான் சம்பாதித்த காசு, எனக்குப் பிடித்த இனிப்பு, இதை சாப்பிட்டால் என்ன ஆகி விடும்? சம்பாதித்ததையெல்லாம் தானம் செய்து விட வேண்டுமா என்ன? இதெல்லாம் நடக்க கூடிய ஒன்றா? அந்தப் பைத்தியக் கார கிழவர் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க ஆரம்பித்தால் எல்லோரும் கிராமங்களில் போய் மாட்டு வண்டியில் போய்க் கொண்டியிருக்க வேண்டியதுதான். நடக்கிற விஷயத்தைப் பார்ப்போம்.
காந்தியின் கனவுகள், பொருளாதாரக் கொள்கைகளை அவருடன் சேர்த்தே எரித்து சாம்பலை கடலில் கரைத்து விட்ட நமக்கு இன்று காந்தியின் பெயரைத் தாக்குவது, அவரது எண்ணங்களை எள்ளி நகையாடுவது, அவரின் தலைமையை குறை கூறுவது எல்லாமே ஒரு மதிப்புச் சின்னமாகி விட்டன.
முப்பது கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அந்த அரை நிர்வாண பக்கிரியின் கொள்கைகள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் செல்லுபடியாகுமா?
உலகெங்கும் உள்ள மக்களுக்கு, தூய குடிநீர், சுகாதாரமான உணவு, தரமான கல்வி சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சாத்தியமாகுமா?
"ஏழைகள் ஏழைகளாக இருப்பது அவர்களின் தலை எழுத்து" என்று ஒதுக்கித் தள்ளும் இந்து மதம், "சாமர்த்தியமிருந்தால் முன்னேறி வரட்டுமே" என்று சவால் விடும் மேற்கத்திய நாகரீகம், "எம்முடைய வழியே சரியான வழி, உலகின் எல்லா நாடுகளும் எம் வழிக்கு வந்து விடுங்கள்" என்று அறை கூவும் அமெரிக்க ஆணவம், "கொலை செய்து சொர்க்கம்" என்று மூளைச் சலவைச் செய்யப்பட்ட இளம் தீவிரவாதிகள் என்று மனித குலம் சந்திக்கும் சவாலுக்கெல்லாம் விடையாக காந்தி என்ன செய்திருப்பார்?
நான் சம்பாதித்த காசு, எனக்குப் பிடித்த இனிப்பு, இதை சாப்பிட்டால் என்ன ஆகி விடும்? சம்பாதித்ததையெல்லாம் தானம் செய்து விட வேண்டுமா என்ன? இதெல்லாம் நடக்க கூடிய ஒன்றா? அந்தப் பைத்தியக் கார கிழவர் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க ஆரம்பித்தால் எல்லோரும் கிராமங்களில் போய் மாட்டு வண்டியில் போய்க் கொண்டியிருக்க வேண்டியதுதான். நடக்கிற விஷயத்தைப் பார்ப்போம்.
காந்தியின் கனவுகள், பொருளாதாரக் கொள்கைகளை அவருடன் சேர்த்தே எரித்து சாம்பலை கடலில் கரைத்து விட்ட நமக்கு இன்று காந்தியின் பெயரைத் தாக்குவது, அவரது எண்ணங்களை எள்ளி நகையாடுவது, அவரின் தலைமையை குறை கூறுவது எல்லாமே ஒரு மதிப்புச் சின்னமாகி விட்டன.
முப்பது கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அந்த அரை நிர்வாண பக்கிரியின் கொள்கைகள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் செல்லுபடியாகுமா?
உலகெங்கும் உள்ள மக்களுக்கு, தூய குடிநீர், சுகாதாரமான உணவு, தரமான கல்வி சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சாத்தியமாகுமா?
"ஏழைகள் ஏழைகளாக இருப்பது அவர்களின் தலை எழுத்து" என்று ஒதுக்கித் தள்ளும் இந்து மதம், "சாமர்த்தியமிருந்தால் முன்னேறி வரட்டுமே" என்று சவால் விடும் மேற்கத்திய நாகரீகம், "எம்முடைய வழியே சரியான வழி, உலகின் எல்லா நாடுகளும் எம் வழிக்கு வந்து விடுங்கள்" என்று அறை கூவும் அமெரிக்க ஆணவம், "கொலை செய்து சொர்க்கம்" என்று மூளைச் சலவைச் செய்யப்பட்ட இளம் தீவிரவாதிகள் என்று மனித குலம் சந்திக்கும் சவாலுக்கெல்லாம் விடையாக காந்தி என்ன செய்திருப்பார்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)