இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஜூலை 22, 2010
சென்னையில் தமிழில் உரையாடலாம் இனி....
http://kaniporul.blogspot.com/2010/08/blog-post.html
ஞாயிறு, ஜூன் 24, 2007
பதிவர் சந்திப்பு - இது பழசு
ஏப்ரல் மாத ஒரு ஞாயிற்றுக் கிழமை
மாலை நண்பர்கள் இருவர் அலுவலகத்துக்கு வந்திருந்து ஏழரை மணிக்குக் கிளம்பிய பிறகு செல்லாவைக் கூப்பிட்டேன். தாமதமாகி விட்டதுதான். மாலையிலிருந்தே எதிர்பார்த்திருந்திருப்பார். ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை நான். அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.
எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து கை கால் எல்லாம் கழுவி, உடை மாற்றி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவர் அழைப்பு. அவரது நண்பர் வந்து விட்டாராம், அப்படியே பாண்டிபஜார் நாயுடுஹால் எதிரில் இருக்கும் கேரளா ஜுவெல்லர்ஸ் பின்னால் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சு அருகில் வரச் சொன்னார்.
தூக்க உணர்வு வந்து விட்டிருந்ததைக் களைந்து விட்டு, பேன்டு சட்டை போட்டு வண்டியில் கிளம்பினேன். நெசப்பாக்கம், கே கேநகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக திநகர் சுரங்க வழியை அடையும் போது இரண்டே இரண்டு சாலை நிறுத்தங்களைத்தான் சந்தித்திருந்தேன். நகருக்குள் வருவதற்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. வாகன நெரிசல் குறைவான ஊருள்ளான வழி.
பாண்டிபஜார் சாலையில் திரும்பி ஒரு இடத்தில் குத்து மதிப்பாக நிறுத்திப் பேசினேன். சரியாக அதே இடத்தில் நாயுடு ஹால், இடது பக்கம் கேரளா ஜுவெல்லர்ஸ், அந்த கட்டிடத்துக்குப் பின்னால் ஸ்ரீகிருஷ்ணா இனிப்புக் கடை உள்ளது என்று அவர் நண்பர் வழி சொல்ல வண்டியை நிறுத்தி விட்டு நடந்து போனேன்.
அந்தக் கடையின் எதிரில் வெற்றாகக் கிடக்கும் ஒரு மனை. நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். வீடு இல்லாமல் அங்கேயே தூங்கக் கூடியவர்கள் என்று பட்டது. கடைக்கு வெளியே பூக்கட்டி விற்கும் ஒரு அம்மா, அவரிடம் வம்பளந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மாவிடம் வம்பு செய்ய வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரை கல்லை எடுத்துக் கொண்டு துரத்தும் இந்த அம்மா என்று சுவாரசியங்களுக்குக் குறைவில்லை.
பை நிறைய மாதிரிகளுடன், உடலில் உருட்டி வலியை, சலிப்பைக் குறைக்கும் கருவி ஒன்றை விற்கும் இரண்டு பேர். கிருஷ்ணா இனிப்பகம் உள்ளே போகிறவர்களையும், வெளியே வருபவர்களையும் நிறுத்தி விற்க முயன்று கொண்டிருந்தார்கள். காதில் செல்பேசியை ஒட்டிக் கொண்டே, அல்லது செல் பேசியை ஒரு அடித் தள்ளிப் பிடித்துக் கொண்டே பெண்களும், ஆண்களும்.
கடையின் முன், தமிழ்ப் புலவர்கள் குறித்து நிகழ்ச்சி விபரங்கள், தமிழிசை இசை நிகழ்ச்சி விபரங்கள் என்று வைத்திருந்தார்கள். 'வாயில் கரையும் ஒரே மைசூர் பாகு' என்று ஒரு தட்டி.
அந்த இடத்தில் ஏதோ சுவர்க்கம் போல விளக்குகளுடன் மின்னும் கடை. வெளியிலேயே காத்திருந்தேன்.
இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து விடுவோம் என்று சொல்லியிருந்தவர்கள், பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள்.
ரிலையன்ஸ் வெப் வோர்ல்டில் இருந்தார்களாம். நண்பரின் வீடு அருகில்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்து, முன்னறையில் குளிரூட்டியைப் போட்டார். ஒரு முன்னறை, அடைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளறை, கீழிறங்கிப் போகும்படி சமையலறை. கைக்கடக்கமான வீடு. அறை குளிரூட்டும் கருவியைத் தவிர ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி இடத்தைப் பிடித்திருந்தன.
அவரது தகவல் செறிந்த புத்திசாலித்தனமாக வாதங்களைக் கேட்க ஆரம்பித்தோம். தமிழ் நாடு அரசியல், கருணாநிதி, ஜெயலலிதா, அதிமுக/திமுக, கேரளா, துபாயில் அவர் வேலை பார்த்தது, அவர் உதவியவர்கள் பற்றிய கதைகள், இப்போதைய அவரது பணி என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்.
பேசிப் பேசி களைத்ததாலோ என்னவோ, எனக்குக் குடிக்கத் தோன்றுகிறது என்று குப்பிகளையும், காய்கனிகளையும் வெளியே எடுத்து வைத்தார். எனக்கும் கடுமையான பசி.
பழங்கள் வெளியே வர ஒரு ஆப்பிளைக் கைப்பற்றிக் கொண்டேன். ரம்மில் 7 அப் ஊற்றுக் கொண்டார்கள். செல்லா காய்களை சிறிது சிறிதாக வெட்ட ஆரம்பித்தார். அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்த முஸ்லீம் பெரியவர் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் செய்த பிரியாணியில் மயங்கி 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்தார்களாம்.
அவரது நண்பர் ஒரு ஆங்கிலோ இந்தியரைக் குறித்துச் சொன்னார். சிறிது நேரத்தில் அவருக்குத் தொலைபேசியும் செய்தார். பத்து மணிக்குக் கிளம்பலாம் என்பது நீண்டு பத்தரைக்குப் புறப்பட்டேன். வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனியாக நின்றது. ஓனிக்ஸ் நிறுவன ஊழியர் சாலையோரத்தை தூய்மை செய்து கொண்டிருந்தார்.
இப்போது பனகல் பூங்கா வழியாக, போத்தீஸ் எதிரில் இருகக்கும் சாலையில் திரும்பி, சுரங்கப் பாதையில் நுழைந்து மேற்கு மாம்பலம் பிடித்து, அசோக் நகர், அசோகா தூண் வழியாக கேகே நகர் அடைந்தேன். இந்த நேரத்தில் சாலை நிறுத்தங்களில் நிற்பது யாருக்குமே தேவை என்று படுவதில்லை.
மாலை நண்பர்கள் இருவர் அலுவலகத்துக்கு வந்திருந்து ஏழரை மணிக்குக் கிளம்பிய பிறகு செல்லாவைக் கூப்பிட்டேன். தாமதமாகி விட்டதுதான். மாலையிலிருந்தே எதிர்பார்த்திருந்திருப்பார். ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை நான். அவர் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.
எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து கை கால் எல்லாம் கழுவி, உடை மாற்றி ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைட் படிக்க உட்கார்ந்த சிறிது நேரத்தில் அவர் அழைப்பு. அவரது நண்பர் வந்து விட்டாராம், அப்படியே பாண்டிபஜார் நாயுடுஹால் எதிரில் இருக்கும் கேரளா ஜுவெல்லர்ஸ் பின்னால் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சு அருகில் வரச் சொன்னார்.
தூக்க உணர்வு வந்து விட்டிருந்ததைக் களைந்து விட்டு, பேன்டு சட்டை போட்டு வண்டியில் கிளம்பினேன். நெசப்பாக்கம், கே கேநகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம் வழியாக திநகர் சுரங்க வழியை அடையும் போது இரண்டே இரண்டு சாலை நிறுத்தங்களைத்தான் சந்தித்திருந்தேன். நகருக்குள் வருவதற்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றியது. வாகன நெரிசல் குறைவான ஊருள்ளான வழி.
பாண்டிபஜார் சாலையில் திரும்பி ஒரு இடத்தில் குத்து மதிப்பாக நிறுத்திப் பேசினேன். சரியாக அதே இடத்தில் நாயுடு ஹால், இடது பக்கம் கேரளா ஜுவெல்லர்ஸ், அந்த கட்டிடத்துக்குப் பின்னால் ஸ்ரீகிருஷ்ணா இனிப்புக் கடை உள்ளது என்று அவர் நண்பர் வழி சொல்ல வண்டியை நிறுத்தி விட்டு நடந்து போனேன்.
அந்தக் கடையின் எதிரில் வெற்றாகக் கிடக்கும் ஒரு மனை. நிறைய மக்கள் கூடியிருந்தார்கள். வீடு இல்லாமல் அங்கேயே தூங்கக் கூடியவர்கள் என்று பட்டது. கடைக்கு வெளியே பூக்கட்டி விற்கும் ஒரு அம்மா, அவரிடம் வம்பளந்து கொண்டிருந்த ஒரு இளைஞர், சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அம்மாவிடம் வம்பு செய்ய வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், அவரை கல்லை எடுத்துக் கொண்டு துரத்தும் இந்த அம்மா என்று சுவாரசியங்களுக்குக் குறைவில்லை.
பை நிறைய மாதிரிகளுடன், உடலில் உருட்டி வலியை, சலிப்பைக் குறைக்கும் கருவி ஒன்றை விற்கும் இரண்டு பேர். கிருஷ்ணா இனிப்பகம் உள்ளே போகிறவர்களையும், வெளியே வருபவர்களையும் நிறுத்தி விற்க முயன்று கொண்டிருந்தார்கள். காதில் செல்பேசியை ஒட்டிக் கொண்டே, அல்லது செல் பேசியை ஒரு அடித் தள்ளிப் பிடித்துக் கொண்டே பெண்களும், ஆண்களும்.
கடையின் முன், தமிழ்ப் புலவர்கள் குறித்து நிகழ்ச்சி விபரங்கள், தமிழிசை இசை நிகழ்ச்சி விபரங்கள் என்று வைத்திருந்தார்கள். 'வாயில் கரையும் ஒரே மைசூர் பாகு' என்று ஒரு தட்டி.
அந்த இடத்தில் ஏதோ சுவர்க்கம் போல விளக்குகளுடன் மின்னும் கடை. வெளியிலேயே காத்திருந்தேன்.
இரண்டு மூன்று நிமிடங்களில் வந்து விடுவோம் என்று சொல்லியிருந்தவர்கள், பத்துநிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள்.
ரிலையன்ஸ் வெப் வோர்ல்டில் இருந்தார்களாம். நண்பரின் வீடு அருகில்தான் இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்து, முன்னறையில் குளிரூட்டியைப் போட்டார். ஒரு முன்னறை, அடைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளறை, கீழிறங்கிப் போகும்படி சமையலறை. கைக்கடக்கமான வீடு. அறை குளிரூட்டும் கருவியைத் தவிர ஒரு குளிர்சாதனப் பெட்டி, ஒரு பெரிய தொலைக்காட்சி பெட்டி இடத்தைப் பிடித்திருந்தன.
அவரது தகவல் செறிந்த புத்திசாலித்தனமாக வாதங்களைக் கேட்க ஆரம்பித்தோம். தமிழ் நாடு அரசியல், கருணாநிதி, ஜெயலலிதா, அதிமுக/திமுக, கேரளா, துபாயில் அவர் வேலை பார்த்தது, அவர் உதவியவர்கள் பற்றிய கதைகள், இப்போதைய அவரது பணி என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசியிருப்பார்.
பேசிப் பேசி களைத்ததாலோ என்னவோ, எனக்குக் குடிக்கத் தோன்றுகிறது என்று குப்பிகளையும், காய்கனிகளையும் வெளியே எடுத்து வைத்தார். எனக்கும் கடுமையான பசி.
பழங்கள் வெளியே வர ஒரு ஆப்பிளைக் கைப்பற்றிக் கொண்டேன். ரம்மில் 7 அப் ஊற்றுக் கொண்டார்கள். செல்லா காய்களை சிறிது சிறிதாக வெட்ட ஆரம்பித்தார். அவருக்கு அதைக் கற்றுக் கொடுத்த முஸ்லீம் பெரியவர் ஒருவரைப் பற்றிச் சொன்னார். அவர் செய்த பிரியாணியில் மயங்கி 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்தார்களாம்.
அவரது நண்பர் ஒரு ஆங்கிலோ இந்தியரைக் குறித்துச் சொன்னார். சிறிது நேரத்தில் அவருக்குத் தொலைபேசியும் செய்தார். பத்து மணிக்குக் கிளம்பலாம் என்பது நீண்டு பத்தரைக்குப் புறப்பட்டேன். வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தனியாக நின்றது. ஓனிக்ஸ் நிறுவன ஊழியர் சாலையோரத்தை தூய்மை செய்து கொண்டிருந்தார்.
இப்போது பனகல் பூங்கா வழியாக, போத்தீஸ் எதிரில் இருகக்கும் சாலையில் திரும்பி, சுரங்கப் பாதையில் நுழைந்து மேற்கு மாம்பலம் பிடித்து, அசோக் நகர், அசோகா தூண் வழியாக கேகே நகர் அடைந்தேன். இந்த நேரத்தில் சாலை நிறுத்தங்களில் நிற்பது யாருக்குமே தேவை என்று படுவதில்லை.
குறிச்சொற்கள்
சென்னை,
வலைப்பதிவு
ஞாயிறு, பிப்ரவரி 04, 2007
வலைப்பதிவர் சந்திப்பில் பதிந்தவை
சிவஞானம்ஜி
கணினியில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதால் நீண்ட நாட்கள் தள்ளிப் போட்டிருந்த ஒரு வேலை முடிக்க முடிந்தது. சென்னை பல்கலையில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம். ஆனால், வகுப்பில் தமிழில் சொல்லித் தரும் படி ஆசிரியரைக் கேட்க முடியாது. அந்த நிலை மாற ஆசிரியர்கள் பயன்படுத்த தமிழில் பாடப் புத்தகங்கள் வேண்டும்.
அப்புறம் பருவ முறை வந்ததும் புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருந்தது. எழுதுவதற்கு யாரும் முன் வரவில்லை. 'முந்நூறு ரூபாய்க்கு யார் மெனக்கிடறது' என்று ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.
கணினித் தமிழ் மூலம் ஐயா அந்த வேலையை முடித்து விட்டார்.
ஐகாரஸ் பிரகாஷ்
ஐகாரஸ் என்பதற்கு பெயர் காரணம் கேட்டவர்களில் நான் ஐம்பதாவது ஆள். அதற்கு ஒரு விருந்து வைப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் பல துறைகளில் என்னென்ன திட்டப் பணிகள் வரவிருக்கின்றன என்று துப்பு அறிந்து அந்தப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், பொருட்கள், சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிய வைக்கும் புதுமையான அதிகம் அறியப்படாத தொழில் செய்து வருகிறாராம். வரிசையாக சிகரெட்டுகளை உருவிக் கொண்டே இருந்தார்.
டோண்டு ராகவன்
வெற்றிகரமாக புதிய பிளாக்கருக்கு மாறி விட்டார். மென்பொருள் பயன்பாட்டின் அருமைகளை உணரக் கூடிய வல்லமையுடன் புதிய பிளாக்கரின் புது வசதிகளை விவரித்தார். தரையில் உட்கார சிரமப்பட்டு எல்லோரின் அன்பு அழைப்பையும் ஏற்று உட்கார்ந்து கொண்டார். புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்.
விக்கி என்ற விக்னேஷ்
பிப்ரவரி 24 அன்று சென்னையில் விக்கிகேம்ப் நடக்க இருக்கிறதாம். விக்கிபீடியாவின் தந்தை வருகை தருகிறாராம். விக்கிபீடியாவின் அடுத்த நிலைகள் பற்றி பேசப் போகிறார்களாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் ஒரு புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.
தற்கால அரசியல் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டோம்.
சோமீதரன்
பிபிசிக்கு வேலை பார்த்து மூன்று ஆண்டுகளாக நிஹாரி என்ற நிறுவனப் பெயரில் ஆவணப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். சமூக அக்கறைப் படங்களைக் கைக்காசு போட்டுக் கூட எடுக்கிறார். தன்னார்வ நிறுவனங்கள், செய்து நிறுவனங்களுக்காக நிதி உதவி பெற்றும் படங்கள் உருவாக்குகிறார்கள். இதைத் தவிர வணிக நிறுவனங்களுக்குத் தேவையான படங்கள் எடுப்பதில் பொருள் ஈட்ட முடிகிறதாம்.
நாலு லட்சம் பேருக்கு என்ன ஆகிறதோ அது எங்களுக்கும் ஆகட்டும் என்று யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட்ட அம்மா அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.
மரபூர் சந்திரசேகரன்
தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய தகவல்களை திரட்டி சிதைந்து போனவற்றைப் புதுப்பிக்கும் பணியை ஒரு குழுவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் வெள்ளை அடித்து அது காயும் முன் சித்திரம் வரையும் முறையில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளைப் பற்றிக் கூறினார். விஜயநகர ஆட்சியின் மீது அதன் மீது இன்னொரு பூச்சு அடித்து அவர்கள் பங்குக்கு வரைந்தார்களாம்.
பிற்காலத்தில் வௌவால் எச்சங்கள் படிந்து ஏதோ கல் தூண் போலக் காட்சியளித்ததாம். அதை மேல் நாட்டு ஆராட்சியாளர் ஒருவர் சுரண்டிப் பார்க்க உள்ளே இருந்த ஓவியங்கள் வெளி வந்திருக்கின்றன. விஜயநகர ஓவியங்களைத் தனியாக பிரித்து எடுக்கும் பணியையும் செய்து முடித்தார்களாம்.
செந்தழல் ரவி
hireafreelancer.com என்ற தளத்தில் போய் திட்டப் பணிகளைப் பிடிக்கலாம். வீட்டிலிருந்த படியே கணினி, இணைய வசதியுடன் எளிதாக மாதம் ஐநூறு டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றார். மேலும் திறமை கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.
வேலை வாய்ப்பு மடல்களுடன் தனது அனுபவப் பதிவுளையும் தொடர்ந்து எழுத கேட்டுக் கொண்டோம்.
முத்து தமிழினி.
வேங்கை வெளியே வருவது போல மீண்டும் வலைப்பதிவுகளின் புத்துணர்ச்சியுடன் இறங்கி விளையாடப் போகிறார்.
பாலராஜன் கீதா
வங்கித் துறை, மென்பொருள் துறை என்று பரவி, சவுதிஅரேபியாவில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு சென்னையில் சொந்த நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.
கணினியில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதால் நீண்ட நாட்கள் தள்ளிப் போட்டிருந்த ஒரு வேலை முடிக்க முடிந்தது. சென்னை பல்கலையில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம். ஆனால், வகுப்பில் தமிழில் சொல்லித் தரும் படி ஆசிரியரைக் கேட்க முடியாது. அந்த நிலை மாற ஆசிரியர்கள் பயன்படுத்த தமிழில் பாடப் புத்தகங்கள் வேண்டும்.
அப்புறம் பருவ முறை வந்ததும் புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருந்தது. எழுதுவதற்கு யாரும் முன் வரவில்லை. 'முந்நூறு ரூபாய்க்கு யார் மெனக்கிடறது' என்று ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.
கணினித் தமிழ் மூலம் ஐயா அந்த வேலையை முடித்து விட்டார்.
ஐகாரஸ் பிரகாஷ்
ஐகாரஸ் என்பதற்கு பெயர் காரணம் கேட்டவர்களில் நான் ஐம்பதாவது ஆள். அதற்கு ஒரு விருந்து வைப்பதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் பல துறைகளில் என்னென்ன திட்டப் பணிகள் வரவிருக்கின்றன என்று துப்பு அறிந்து அந்தப் பணிகளுக்குத் தேவையான கருவிகள், பொருட்கள், சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிய வைக்கும் புதுமையான அதிகம் அறியப்படாத தொழில் செய்து வருகிறாராம். வரிசையாக சிகரெட்டுகளை உருவிக் கொண்டே இருந்தார்.
டோண்டு ராகவன்
வெற்றிகரமாக புதிய பிளாக்கருக்கு மாறி விட்டார். மென்பொருள் பயன்பாட்டின் அருமைகளை உணரக் கூடிய வல்லமையுடன் புதிய பிளாக்கரின் புது வசதிகளை விவரித்தார். தரையில் உட்கார சிரமப்பட்டு எல்லோரின் அன்பு அழைப்பையும் ஏற்று உட்கார்ந்து கொண்டார். புதிய பிளாக்கரிலாவது அனானி/அதர் தேர்வுகளை கொடுக்க மாட்டீர்களா என்ற லக்கிலுக்கின் வேண்டுகோளை பரீசிலிப்பதாகச் சொன்னார்.
விக்கி என்ற விக்னேஷ்
பிப்ரவரி 24 அன்று சென்னையில் விக்கிகேம்ப் நடக்க இருக்கிறதாம். விக்கிபீடியாவின் தந்தை வருகை தருகிறாராம். விக்கிபீடியாவின் அடுத்த நிலைகள் பற்றி பேசப் போகிறார்களாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் ஒரு புத்துயிர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.
தற்கால அரசியல் வரலாற்றைப் பற்றிய புத்தகங்கள் பற்றிப் பேசிக் கொண்டோம்.
சோமீதரன்
பிபிசிக்கு வேலை பார்த்து மூன்று ஆண்டுகளாக நிஹாரி என்ற நிறுவனப் பெயரில் ஆவணப் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். சமூக அக்கறைப் படங்களைக் கைக்காசு போட்டுக் கூட எடுக்கிறார். தன்னார்வ நிறுவனங்கள், செய்து நிறுவனங்களுக்காக நிதி உதவி பெற்றும் படங்கள் உருவாக்குகிறார்கள். இதைத் தவிர வணிக நிறுவனங்களுக்குத் தேவையான படங்கள் எடுப்பதில் பொருள் ஈட்ட முடிகிறதாம்.
நாலு லட்சம் பேருக்கு என்ன ஆகிறதோ அது எங்களுக்கும் ஆகட்டும் என்று யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட்ட அம்மா அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.
மரபூர் சந்திரசேகரன்
தமிழகம் முழுவதும் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய தகவல்களை திரட்டி சிதைந்து போனவற்றைப் புதுப்பிக்கும் பணியை ஒரு குழுவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் வெள்ளை அடித்து அது காயும் முன் சித்திரம் வரையும் முறையில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளைப் பற்றிக் கூறினார். விஜயநகர ஆட்சியின் மீது அதன் மீது இன்னொரு பூச்சு அடித்து அவர்கள் பங்குக்கு வரைந்தார்களாம்.
பிற்காலத்தில் வௌவால் எச்சங்கள் படிந்து ஏதோ கல் தூண் போலக் காட்சியளித்ததாம். அதை மேல் நாட்டு ஆராட்சியாளர் ஒருவர் சுரண்டிப் பார்க்க உள்ளே இருந்த ஓவியங்கள் வெளி வந்திருக்கின்றன. விஜயநகர ஓவியங்களைத் தனியாக பிரித்து எடுக்கும் பணியையும் செய்து முடித்தார்களாம்.
செந்தழல் ரவி
hireafreelancer.com என்ற தளத்தில் போய் திட்டப் பணிகளைப் பிடிக்கலாம். வீட்டிலிருந்த படியே கணினி, இணைய வசதியுடன் எளிதாக மாதம் ஐநூறு டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும் என்றார். மேலும் திறமை கொண்டவர்கள் இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம்.
வேலை வாய்ப்பு மடல்களுடன் தனது அனுபவப் பதிவுளையும் தொடர்ந்து எழுத கேட்டுக் கொண்டோம்.
முத்து தமிழினி.
வேங்கை வெளியே வருவது போல மீண்டும் வலைப்பதிவுகளின் புத்துணர்ச்சியுடன் இறங்கி விளையாடப் போகிறார்.
பாலராஜன் கீதா
வங்கித் துறை, மென்பொருள் துறை என்று பரவி, சவுதிஅரேபியாவில் பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு சென்னையில் சொந்த நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.
குறிச்சொற்கள்
சென்னை,
வலைப்பதிவு
செவ்வாய், டிசம்பர் 19, 2006
ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்
'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' என்று லக்கிலுக் அடக்கமாக எழுதியிருந்தார். ஞாயிறு அன்று மதியம், சிவஞானம்ஜி ஐயா தொலைபேசி 'நியூசியிலிருந்து துளசி அம்மா வந்திருக்காங்க, மாலையில் பதிவர் கூட்டத்தில் சந்திக்கலாம்' என்று சொல்லியிருந்தார்.
சளியும் காய்ச்சலும் நிழலடிப்பது போலப்பட்டாலும் விடாப்பிடியாக நான்கு நாள் தாடியோடுக் கிளம்பி பனகல் பூங்கா அருகில் வண்டி நிறுத்த இடம் தேடி, நிறுத்தக் கூடாத இடம் என்று பிறகு புரிந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே போக வரும் போது எதிரில் அருள் குமாரும், வீரமணியும் சந்திப்பு இடம் மாறிவிட்டதாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடேசன் பூங்கா என்பது கேபிஎன் அலுவலகம் இருக்கும் சாலையில் என்று மங்கலாக நினைவு இருந்தாலும், உறுதி செய்து கொள்வதற்காக ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கேட்க அவர், ஜிஎன் சாலையில் போய் வலது புறம் சந்தில் திரும்பச் சொன்னார்.
அப்படியே தேடித் திரும்பிப் போகும் போது வண்டி மேலே போக மறுத்து நின்று விட்டது. தள்ளிக் கொண்டே போய் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு அருகிலிருக்கும் வாசல் வழியாக பூங்காவுக்குள் போனேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே, என்னைப் போன்ற கிட்டப்பார்வையினருக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வட்டம் அமைத்து அமர்ந்திருந்தார்கள் பதிவர்கள். பாசக்காரத் தலைவர் பாலபாரதி தனக்கு அருகிலேயே இடம் போட்டு என்னை அமர்த்திக் கொண்டார்.
கூட்டங்களின் உயிர்ச் சக்தி போன்ற பாலா அவ்வப்போது தம்மடிக்க தேநீர் குடிக்க போய் விட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உரையாடல் முன்திட்டமிடப்படாமல் இருந்தாலும் சுறுசுறுப்பாகவே போனது.
எல்லோராலும் சங்கம் வைத்துக் கலாய்க்கப்பட்டாலும், தானும் அதை சுணங்காமல் ஏற்றுக் கொண்டாலும், பாலபாரதியின் எண்ணத் தெளிவு பலமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. லக்கிலுக்கிலிருந்து அறிமுகத்தை ஆரம்பித்து வைக்கும்படி பாலபாரதி கேட்டுக் கொண்ட பொழுது புரியாவிட்டாலும் அவருக்கு இடது புறம் அமர்ந்திருந்த திரு எனப்படும் திருவள்ளுவர் கடைசியாக எல்லோருக்கும் பிறகு பேசினால் முத்தாய்ப்பாக இருக்கும் என்று யோசித்து அதைச் சொல்லியிருப்பார் என்று படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துயரமுறும் மக்களைப் பற்றி திரு பேசியதிலிருந்து திரும்பி, தமிழகத்தில் அகதிகளாக வந்திருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச்சு மாறி விட்டதை சுட்டிக் காட்டி இதைப் போலத்தான் வலைப்பதிவுகளிலும் பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்புவது பலமுறை நடந்து விடுகிறது என்று பாலா உணர்த்தினார்.
முதல் முறை இதே நடேசன் பூங்காவில் சந்தித்து மாமல்லபுரம் போய் விட்டு வந்த பதிவுகளின் விளைவாகத் தொடங்கியது சென்னப்பட்டிணம் கூட்டுப் பதிவு. சென்ற மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் விளைவாகத் தொடங்கியது வலைப்பதிவர் உதவிக் குழு என்ற கூட்டுப் பதிவு. 'ஏதாவது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதன் தலையில் கல்லைப் போடு அல்லது ஒரு கமிஷனைப் போடு' என்று அரசியல்வாதிகளைப் போல நாமும் பேசி விட்டுக் கலைந்து போக மனமில்லாமல் ஒரு கூட்டுப் பதிவு அல்லது குழு உருவாக்குவதோடு நின்று விடுகிறோமோ என்று தோன்றியது.
இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாதம், தமிழ்நாட்டு மக்களை நம்பி அகதிகளாக வரும் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்று பேசி விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலேயே கலைந்து விட்டோம்.
திரு அவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கான அறிக்கையை ஒட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடித்து தன்னார்வலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையில், தமது நண்பர்கள், உறவினர்களிடம் மட்டுமாவது கையெழுத்து வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு முன்வருபவர்கள் பின்னூட்த்திலோ, தனிமடலிலோ தமது ஆர்வத்தைத் தெரிவிக்கவும்.
சளியும் காய்ச்சலும் நிழலடிப்பது போலப்பட்டாலும் விடாப்பிடியாக நான்கு நாள் தாடியோடுக் கிளம்பி பனகல் பூங்கா அருகில் வண்டி நிறுத்த இடம் தேடி, நிறுத்தக் கூடாத இடம் என்று பிறகு புரிந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே போக வரும் போது எதிரில் அருள் குமாரும், வீரமணியும் சந்திப்பு இடம் மாறிவிட்டதாக திரும்பிக் கொண்டிருந்தார்கள். நடேசன் பூங்கா என்பது கேபிஎன் அலுவலகம் இருக்கும் சாலையில் என்று மங்கலாக நினைவு இருந்தாலும், உறுதி செய்து கொள்வதற்காக ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கேட்க அவர், ஜிஎன் சாலையில் போய் வலது புறம் சந்தில் திரும்பச் சொன்னார்.
அப்படியே தேடித் திரும்பிப் போகும் போது வண்டி மேலே போக மறுத்து நின்று விட்டது. தள்ளிக் கொண்டே போய் கண்ணதாசன் பதிப்பகத்துக்கு அருகிலிருக்கும் வாசல் வழியாக பூங்காவுக்குள் போனேன். தூரத்திலிருந்து பார்க்கும் போதே, என்னைப் போன்ற கிட்டப்பார்வையினருக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வட்டம் அமைத்து அமர்ந்திருந்தார்கள் பதிவர்கள். பாசக்காரத் தலைவர் பாலபாரதி தனக்கு அருகிலேயே இடம் போட்டு என்னை அமர்த்திக் கொண்டார்.
கூட்டங்களின் உயிர்ச் சக்தி போன்ற பாலா அவ்வப்போது தம்மடிக்க தேநீர் குடிக்க போய் விட்ட நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் உரையாடல் முன்திட்டமிடப்படாமல் இருந்தாலும் சுறுசுறுப்பாகவே போனது.
எல்லோராலும் சங்கம் வைத்துக் கலாய்க்கப்பட்டாலும், தானும் அதை சுணங்காமல் ஏற்றுக் கொண்டாலும், பாலபாரதியின் எண்ணத் தெளிவு பலமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது. லக்கிலுக்கிலிருந்து அறிமுகத்தை ஆரம்பித்து வைக்கும்படி பாலபாரதி கேட்டுக் கொண்ட பொழுது புரியாவிட்டாலும் அவருக்கு இடது புறம் அமர்ந்திருந்த திரு எனப்படும் திருவள்ளுவர் கடைசியாக எல்லோருக்கும் பிறகு பேசினால் முத்தாய்ப்பாக இருக்கும் என்று யோசித்து அதைச் சொல்லியிருப்பார் என்று படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு துயரமுறும் மக்களைப் பற்றி திரு பேசியதிலிருந்து திரும்பி, தமிழகத்தில் அகதிகளாக வந்திருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச்சு மாறி விட்டதை சுட்டிக் காட்டி இதைப் போலத்தான் வலைப்பதிவுகளிலும் பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்புவது பலமுறை நடந்து விடுகிறது என்று பாலா உணர்த்தினார்.
முதல் முறை இதே நடேசன் பூங்காவில் சந்தித்து மாமல்லபுரம் போய் விட்டு வந்த பதிவுகளின் விளைவாகத் தொடங்கியது சென்னப்பட்டிணம் கூட்டுப் பதிவு. சென்ற மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பின் விளைவாகத் தொடங்கியது வலைப்பதிவர் உதவிக் குழு என்ற கூட்டுப் பதிவு. 'ஏதாவது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால் அதன் தலையில் கல்லைப் போடு அல்லது ஒரு கமிஷனைப் போடு' என்று அரசியல்வாதிகளைப் போல நாமும் பேசி விட்டுக் கலைந்து போக மனமில்லாமல் ஒரு கூட்டுப் பதிவு அல்லது குழு உருவாக்குவதோடு நின்று விடுகிறோமோ என்று தோன்றியது.
இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தீவிரவாதம், தமிழ்நாட்டு மக்களை நம்பி அகதிகளாக வரும் மக்களுக்கு கிடைக்காத உரிமைகள் என்று பேசி விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமலேயே கலைந்து விட்டோம்.
- தெருக்களில் இறங்கி, அல்லது தத்தமது வட்டங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவது
- உண்மை அறியும் குழு ஒன்றை உருவாக்கி அகதி முகாம்களுக்குப் போய்ப் பார்ப்பது
- ஊடகங்களில் பரவலாக எழுதி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவது
திரு அவர்களின் கையெழுத்து இயக்கத்துக்கான அறிக்கையை ஒட்டி தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சடித்து தன்னார்வலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையில், தமது நண்பர்கள், உறவினர்களிடம் மட்டுமாவது கையெழுத்து வாங்கிக் கொடுக்கலாம். இதற்கு முன்வருபவர்கள் பின்னூட்த்திலோ, தனிமடலிலோ தமது ஆர்வத்தைத் தெரிவிக்கவும்.
குறிச்சொற்கள்
ஈழம்,
சென்னை,
வலைப்பதிவு
செவ்வாய், நவம்பர் 21, 2006
சென்னை வலைப்பதிவர் சந்திப்பு
தூள் படத்தின் ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தொழிற்சாலைக்குள் வெடிமருந்தை வைத்து விட்டு நீண்ட கயிற்றில் தீவைத்து வெடிக்க முயற்சிப்பார்கள். நாயகன் விக்ரம் ஓடிப்போய் அந்தத் தீ வெடிமருந்தை அடைந்து விடாமல் நாசத்தைத் தவிர்த்து விடுவார். தமிழர் நான்கு பேர், அதுவும் படித்த அறிவுஜீவிகள் சிலர் கூடும் இடத்தில் இயல்பாகவே இருக்கும் வெடிக்கும் பொருளுக்கு முன்னால் தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டார், "வலைப்பூக்களில் சாதியைக் குறித்த விவாதங்கள் தேவையா?" என்ற விவாதத்தைத் துவங்கி வைத்த பாலபாரதி.
டி பி ஆர் ஜோசப், முதலில் எழுந்து இந்த விவாதமே இங்கு தேவையா? என்று கொஞ்சம் சூட்டைத் தணித்தார். 'மும்பையில் வலைப்பதிவர்கள் செய்தது போல ஒரு சங்கமாகப் பதிவு செய்து நிருபர்களுக்கான உரிமைகளைப் பெற முயற்சிக்கலாம், அது போன்ற நடைமுறை செயல்களைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை செலவிடலாம்' என்பது அவர் கருத்து.
சென்னைப் பட்டிணம் கூட்டு வலைப்பதிவு ஆரம்பித்து ஆரம்ப கால சந்திப்புகளிலேயே இத்தகைய வளர்ச்சியை வலியுறுத்தியிருந்தார் பாலபாரதி. சாந்தி அக்கா என்ற பதிவைப் போட்ட அதே பாலபாரதிதான் அனானி ஆட்டம் என்று வரவேற்கும் பதிவுகளையும் போடுகிறார். தனி ஒருவராக வெற்றிகரமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய இவர் செய்யக் கூடியது நிறைய இருக்கிறது.
சிமுலேஷன் "வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை. அதற்கு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.
முன்பு மிக மோசமாக இருந்த வலைப் பதிவுச் சூழல் இப்போது மோசம் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளதாக ரோஸா வசந்த் கூறினார். 'முன்பெல்லாம் குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசுவதே பாவம் என்று இருந்த நிலை போய் இப்போது சுதந்திரமாக அடித்துக் கொள்ளும் நிலை இருப்பது மேல்தான். இது இன்னும் முன்னேறி ஆரோக்கியமான சூழல் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.
"அலுவலகத்தில் வேலை பற்றி விவாதிக்கும் போது நாம் சாதி பற்றி பேசுகிறோமா? உருப்படியாக வேலை நடக்கும் இடங்களில் சாதிப் பேச்சை எடுப்பது எதிர்மறையாகத்தான் முடியும்" இது நான்.
"சாதி என்பது ஒரு நடைமுறை உண்மை. அதை விவாதிக்க மாட்டோம் என்று கண்ணை மூடிக் கொண்டால் பிரச்சனை மறைந்து விடுமா என்ன? ஒடுக்கப்பட்ட குழுவினர் ஒன்று சேர்ந்து செயல்பட இந்தத் தளமும் உதவட்டுமே" என்று அருள்குமார் சாதி பற்றிய விவாதங்கள் தவிர்க்க வேண்டியவை அல்ல என்று கருத்து சொன்னார்.
"அடிப்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு மனக்கஷ்டங்களும் நேர விரயமும் ஆகலாம். ஆனால் வெறும் பார்வையாளராக படித்து விட்டுப் போகும் தம்மைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களை அத்தகைய விவாதங்கள் காட்டுகின்றன" என்று பூபாளன் என்ற வாசகர் கூறினார்.
"பாலபாரதி குறிப்பாகச் சொன்ன ஒரு விவாதம் அறிவுபூர்வமாகத்தான் நடைபெற்றது என்பது தன் கருத்து" என்று ஓகை சொன்னார்.
கூட்டம் முடிந்து வளசரவாக்கம் நோக்கிப் போகும் போது கூட வந்த கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த நண்பர், அவர்கள் ஊரிலும் "இது போல கூட்டங்களில் காரமான விவாதங்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரக் கூட்டம் ஐந்து ஆறு மணி நேரத்துக்கு நீடித்து விடும். இங்கும் அது மாதிரி நடக்கப் போகிறதோ என்று பயந்தேன், ஆனால் சுருக்கமாக முடிந்து விட்டது" என்றார். அவர்கள் அடித்துக் கொள்வது இலக்கிய வாதங்களில்தானாம்.
அவரது பார்வையில் சென்னையில் மூன்று வேறுபாடுகள், "பலப் பல நிறங்களில் சுவர் வண்ணங்கள், சுவரொட்டிகள், பல வகையான உணவுகள், அதிக மக்கள் கூட்டத்தினாலோ வேறு எதனாலோ விளையும் குப்பைக் குவியல்கள்,"
இடைவேளையில் கிளிநொச்சியின் அகிலன், சாவின் நிழலில், குண்டு வீச்சின் பயத்தில் வாழும் வாழ்க்கையை விவரித்தார். குண்டு வீச்சினால் மரணம் அடைந்த குழந்தைகளைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்கு முன் அவரை மாமா என்று அழைத்து விளையாடிய, தாயும் தந்தையும் இல்லாத குழந்தைகளை அடிபட்டு பிணமாகப் பார்த்த துயரத்தை விவரித்தார். எவ்வளவுதான் குறை இருந்தாலும் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத பகுதி ஈழம் என்று தமிழ்நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த கட்டம் என்று நான் கட்டுரை வாசிக்க இருந்தேன். பல நாட்கள் முன்னர் பாலா சொன்ன அன்றே ஒரு பக்கம் எழுதி வைத்து விட்டாலும் அதை விரிவுபடுத்தி எழுதுவதை கடைசிவரை தள்ளிப் போட்டு ஞாயிறு மதியம்தான் அச்செடுத்து முடித்தேன். அந்தக் கட்டுரையைத் தனி பதிவாக வெளியிடுகிறேன்.
"எல்லோரும் சுஜாதா ஆக முடியாது. ஆயிரம் பேர் எழுதும் வலைப்பதிவு உலகில் பத்து பேர் பெரிய எழுத்தாளராக உருவாகலாம். ஆனால், ஒவ்வொருவரும் தமது துறை அறிவைத் தமிழில் தர முயற்சிக்கலாம், முயற்சிக்க வேண்டும்" என்று ராமகி ஐயா கேட்டுக் கொண்டார். "அரசியல் பற்றிய விவாதங்கள், திரைப்பட விவாதங்கள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றையே முழு நேரமும் செய்யாமல் பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சமூகத்துக்குப் பலன் அளிக்கும்படியான ஆக்கங்களை உருவாக்குங்கள் என்று அவரது வேண்டுகோள்".
"வலைப்பதிவு பற்றிய தொழில் நுட்ப நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது. மென்பொருள் துறையில் பணி புரியும் மற்றும் வலைப்பதிவு நுணுக்கங்களைக் கற்று உணர்ந்தவர்கள் கூட்டாக பிறருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். மீள்பதிவு எப்படி போடுவது என்று தெரியாமல் இருந்த தான் பொன்ஸ் விளக்கிய பிறகு அதைக் கற்றுக் கொள்ள முடிந்தது" என்று பாலா ஆரம்பித்து வைத்தார்.
"பின்னூட்டத்தில் சுட்டி கொடுப்பது எப்படி என்று கூடத் தெரியாமல் இருக்கலாம். ஒருவர் கொடுத்த பின்னூட்டத்தை சிறிது மாற்றி வெளியிட என்ன வழி என்று தெரியாது. இதற்கெல்லாம் தெரிந்தவர்கள் தமது அறிவைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்" இது லக்கிலுக்.
"சென்னையில் நடைபெற்ற பிளாக்கேம்பில் பங்கேற்ற விக்கி என்ற விக்னேஷ், தமிழ்பதிவர்களுக்காக இது போன்ற தொழில் நுட்ப சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம்" என்று முன் வைத்தார். என்னென்ன முக்கியமான கேள்விகள் என்று திரட்டி அவற்றில் பத்துப் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து செயல்முறை விளக்கம் கூட அளிக்கலாம். அவருடைய வழிகாட்டலில் ஒரு கூட்டு வலைப்பதிவும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.
பிளாக்கர் பீட்டாவிற்கு மாறி தான்படும் அவதிகளை விவரித்த மரபூர் சந்திரசேகரன், பொருள்வாரியாக பதிவர்களை, பதிவுகளை தேடுவதற்கு வசதிகள் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிறைய பேசுவார்கள் என்று நான் எதிர் பார்த்திருந்த வரவனையான், எஸ்கே ஐயா, முத்து தமிழினி இவர்களெல்லாம் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 'இது போன்ற சந்திப்புகளில் பொதுவாக சில தலைப்புகளைத் திரட்டி வரும் நாட்களில் எல்லோரையும் எழுத வரவேற்கலாம்' என்று எஸ்கே சொன்னார்.
இட்லிவடையின் புகைப்படப் பிரதிநிதி வந்து படங்கள் எடுத்துச் சென்றார். அவர்தான் இட்லிவடை என்று அவர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சிலர் சொன்னார்கள். இட்லி வடை என்பவர் உயரமாக, ஒல்லியாக, வெள்ளையாக, பல ஆண்டுகள் எழுத்து அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம். இது போன்ற ஊகிப்புகளைக் குழப்ப இரண்டு மூன்று பேராக ஒரே முகமூடி பேரைப் பயன்படுத்துவதும் வாடிக்கை.
முகமறிய விரும்பிய பல பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதாரப் பேராசிரியர் சிவஞானம்ஜி ஐயா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடற்குழுக்கள் மூலம் தெரிந்திருந்த ராமகி ஐயா இவர்களை ஒருவழியாக பார்த்து பேச முடிந்தது.
டி பி ஆர் ஜோசப், முதலில் எழுந்து இந்த விவாதமே இங்கு தேவையா? என்று கொஞ்சம் சூட்டைத் தணித்தார். 'மும்பையில் வலைப்பதிவர்கள் செய்தது போல ஒரு சங்கமாகப் பதிவு செய்து நிருபர்களுக்கான உரிமைகளைப் பெற முயற்சிக்கலாம், அது போன்ற நடைமுறை செயல்களைப் பற்றி விவாதிப்பதில் நேரத்தை செலவிடலாம்' என்பது அவர் கருத்து.
சென்னைப் பட்டிணம் கூட்டு வலைப்பதிவு ஆரம்பித்து ஆரம்ப கால சந்திப்புகளிலேயே இத்தகைய வளர்ச்சியை வலியுறுத்தியிருந்தார் பாலபாரதி. சாந்தி அக்கா என்ற பதிவைப் போட்ட அதே பாலபாரதிதான் அனானி ஆட்டம் என்று வரவேற்கும் பதிவுகளையும் போடுகிறார். தனி ஒருவராக வெற்றிகரமான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து நடத்திக் காட்டிய இவர் செய்யக் கூடியது நிறைய இருக்கிறது.
சிமுலேஷன் "வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கை. அதற்கு ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கும் மேலே என்று கருதுவதால்தானே இத்தனை பேர் ஒரு ஞாயிறு மாலையில் கூடி இருக்கிறோம்.
முன்பு மிக மோசமாக இருந்த வலைப் பதிவுச் சூழல் இப்போது மோசம் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளதாக ரோஸா வசந்த் கூறினார். 'முன்பெல்லாம் குறிப்பிட்ட பொருளைப் பற்றி பேசுவதே பாவம் என்று இருந்த நிலை போய் இப்போது சுதந்திரமாக அடித்துக் கொள்ளும் நிலை இருப்பது மேல்தான். இது இன்னும் முன்னேறி ஆரோக்கியமான சூழல் வர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை!' என்று அவர் குறிப்பிட்டார்.
"அலுவலகத்தில் வேலை பற்றி விவாதிக்கும் போது நாம் சாதி பற்றி பேசுகிறோமா? உருப்படியாக வேலை நடக்கும் இடங்களில் சாதிப் பேச்சை எடுப்பது எதிர்மறையாகத்தான் முடியும்" இது நான்.
"சாதி என்பது ஒரு நடைமுறை உண்மை. அதை விவாதிக்க மாட்டோம் என்று கண்ணை மூடிக் கொண்டால் பிரச்சனை மறைந்து விடுமா என்ன? ஒடுக்கப்பட்ட குழுவினர் ஒன்று சேர்ந்து செயல்பட இந்தத் தளமும் உதவட்டுமே" என்று அருள்குமார் சாதி பற்றிய விவாதங்கள் தவிர்க்க வேண்டியவை அல்ல என்று கருத்து சொன்னார்.
"அடிப்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு மனக்கஷ்டங்களும் நேர விரயமும் ஆகலாம். ஆனால் வெறும் பார்வையாளராக படித்து விட்டுப் போகும் தம்மைப் போன்றவர்களுக்குப் பல புதிய கோணங்களை அத்தகைய விவாதங்கள் காட்டுகின்றன" என்று பூபாளன் என்ற வாசகர் கூறினார்.
"பாலபாரதி குறிப்பாகச் சொன்ன ஒரு விவாதம் அறிவுபூர்வமாகத்தான் நடைபெற்றது என்பது தன் கருத்து" என்று ஓகை சொன்னார்.
கூட்டம் முடிந்து வளசரவாக்கம் நோக்கிப் போகும் போது கூட வந்த கிளிநொச்சியிலிருந்து வந்திருந்த நண்பர், அவர்கள் ஊரிலும் "இது போல கூட்டங்களில் காரமான விவாதங்கள் ஆரம்பித்து இரண்டு மணி நேரக் கூட்டம் ஐந்து ஆறு மணி நேரத்துக்கு நீடித்து விடும். இங்கும் அது மாதிரி நடக்கப் போகிறதோ என்று பயந்தேன், ஆனால் சுருக்கமாக முடிந்து விட்டது" என்றார். அவர்கள் அடித்துக் கொள்வது இலக்கிய வாதங்களில்தானாம்.
அவரது பார்வையில் சென்னையில் மூன்று வேறுபாடுகள், "பலப் பல நிறங்களில் சுவர் வண்ணங்கள், சுவரொட்டிகள், பல வகையான உணவுகள், அதிக மக்கள் கூட்டத்தினாலோ வேறு எதனாலோ விளையும் குப்பைக் குவியல்கள்,"
இடைவேளையில் கிளிநொச்சியின் அகிலன், சாவின் நிழலில், குண்டு வீச்சின் பயத்தில் வாழும் வாழ்க்கையை விவரித்தார். குண்டு வீச்சினால் மரணம் அடைந்த குழந்தைகளைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்கு முன் அவரை மாமா என்று அழைத்து விளையாடிய, தாயும் தந்தையும் இல்லாத குழந்தைகளை அடிபட்டு பிணமாகப் பார்த்த துயரத்தை விவரித்தார். எவ்வளவுதான் குறை இருந்தாலும் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாத பகுதி ஈழம் என்று தமிழ்நாட்டு நிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த கட்டம் என்று நான் கட்டுரை வாசிக்க இருந்தேன். பல நாட்கள் முன்னர் பாலா சொன்ன அன்றே ஒரு பக்கம் எழுதி வைத்து விட்டாலும் அதை விரிவுபடுத்தி எழுதுவதை கடைசிவரை தள்ளிப் போட்டு ஞாயிறு மதியம்தான் அச்செடுத்து முடித்தேன். அந்தக் கட்டுரையைத் தனி பதிவாக வெளியிடுகிறேன்.
"எல்லோரும் சுஜாதா ஆக முடியாது. ஆயிரம் பேர் எழுதும் வலைப்பதிவு உலகில் பத்து பேர் பெரிய எழுத்தாளராக உருவாகலாம். ஆனால், ஒவ்வொருவரும் தமது துறை அறிவைத் தமிழில் தர முயற்சிக்கலாம், முயற்சிக்க வேண்டும்" என்று ராமகி ஐயா கேட்டுக் கொண்டார். "அரசியல் பற்றிய விவாதங்கள், திரைப்பட விவாதங்கள் முற்றிலும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவற்றையே முழு நேரமும் செய்யாமல் பத்து ஆண்டுகள் கழித்து தமிழ்ச் சமூகத்துக்குப் பலன் அளிக்கும்படியான ஆக்கங்களை உருவாக்குங்கள் என்று அவரது வேண்டுகோள்".
"வலைப்பதிவு பற்றிய தொழில் நுட்ப நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளக் கடினமாக உள்ளது. மென்பொருள் துறையில் பணி புரியும் மற்றும் வலைப்பதிவு நுணுக்கங்களைக் கற்று உணர்ந்தவர்கள் கூட்டாக பிறருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும். மீள்பதிவு எப்படி போடுவது என்று தெரியாமல் இருந்த தான் பொன்ஸ் விளக்கிய பிறகு அதைக் கற்றுக் கொள்ள முடிந்தது" என்று பாலா ஆரம்பித்து வைத்தார்.
"பின்னூட்டத்தில் சுட்டி கொடுப்பது எப்படி என்று கூடத் தெரியாமல் இருக்கலாம். ஒருவர் கொடுத்த பின்னூட்டத்தை சிறிது மாற்றி வெளியிட என்ன வழி என்று தெரியாது. இதற்கெல்லாம் தெரிந்தவர்கள் தமது அறிவைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்" இது லக்கிலுக்.
"சென்னையில் நடைபெற்ற பிளாக்கேம்பில் பங்கேற்ற விக்கி என்ற விக்னேஷ், தமிழ்பதிவர்களுக்காக இது போன்ற தொழில் நுட்ப சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம்" என்று முன் வைத்தார். என்னென்ன முக்கியமான கேள்விகள் என்று திரட்டி அவற்றில் பத்துப் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து செயல்முறை விளக்கம் கூட அளிக்கலாம். அவருடைய வழிகாட்டலில் ஒரு கூட்டு வலைப்பதிவும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது.
பிளாக்கர் பீட்டாவிற்கு மாறி தான்படும் அவதிகளை விவரித்த மரபூர் சந்திரசேகரன், பொருள்வாரியாக பதிவர்களை, பதிவுகளை தேடுவதற்கு வசதிகள் ஏற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிறைய பேசுவார்கள் என்று நான் எதிர் பார்த்திருந்த வரவனையான், எஸ்கே ஐயா, முத்து தமிழினி இவர்களெல்லாம் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். 'இது போன்ற சந்திப்புகளில் பொதுவாக சில தலைப்புகளைத் திரட்டி வரும் நாட்களில் எல்லோரையும் எழுத வரவேற்கலாம்' என்று எஸ்கே சொன்னார்.
இட்லிவடையின் புகைப்படப் பிரதிநிதி வந்து படங்கள் எடுத்துச் சென்றார். அவர்தான் இட்லிவடை என்று அவர் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சிலர் சொன்னார்கள். இட்லி வடை என்பவர் உயரமாக, ஒல்லியாக, வெள்ளையாக, பல ஆண்டுகள் எழுத்து அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஊகம். இது போன்ற ஊகிப்புகளைக் குழப்ப இரண்டு மூன்று பேராக ஒரே முகமூடி பேரைப் பயன்படுத்துவதும் வாடிக்கை.
முகமறிய விரும்பிய பல பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பொருளாதாரப் பேராசிரியர் சிவஞானம்ஜி ஐயா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடற்குழுக்கள் மூலம் தெரிந்திருந்த ராமகி ஐயா இவர்களை ஒருவழியாக பார்த்து பேச முடிந்தது.
குறிச்சொற்கள்
சென்னை,
வலைப்பதிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)