திங்கள், அக்டோபர் 10, 2011

மாநில சுயாட்சியும் மங்காத்தாவும்

டாடாக்கள், அம்பானிகள், மிட்டல்கள், சரத்பவார்கள் போன்ற சூட்டு போட்ட பெரிய மனிதர்கள், கிளப்பில் மங்காத்தா ஆடி இந்திய தேசத்தின் வளத்தைப் பெருக்கி வந்தார்கள். 

மாறன்கள், அன்புமணிகள், ஸ்டாலின்கள், அழகிரிகள், சசிகலாக்கள் போன்ற அரை டவுசர் போட்ட சிறுவர்கள், ஆடுபவர்களுக்கு சிகரெட், கூல் டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் வாங்கி வருவது, புதிய சீட்டுக் கட்டு மாற்றித் தருவது என்று எடுபிடி வேலைகள் செய்து கொடுத்தால் கணிசமான டிப்ஸ் வாங்கி வளமாக வாழலாம், இந்திய தேசத்தில். 

'50 ஆண்டுகளாக கேட்டுப் போராடி வந்த மாநில சுயாட்சி வரப் போகிறது, நாமும் மங்காத்தா மேசையில் உட்காரலாம்' என்று துணிந்து பெரிய மனிதர்களின் வட்டத்தில் உட்காரத் துணிந்த தயாநிதி மாறனும், ஆ ராசாவும் இப்போது கிளப் காவலர்களால் தெருவில் தள்ளப்பட்டு நையப் புடைக்கப்படுகிறார்கள் (அன்புமணி ஏற்கனவே தெருவுக்கு அனுப்பப்பட்டு விட்டார்). 

இப்போதைய உடனடி தேவை மாநில சுயாட்சிக்கான மக்கள் போராட்டம். நம்ம ஊர் மாறன்களும், அன்புமணிகளும் (அவருக்கு தனியாக ஒரு மாநிலம் கூட பிரித்துக் கொள்ளலாம்), தாங்களும் பெரிய மனிதர்களாக மங்காத்தா ஆட ஒரு கிளப்பும் ஆட்ட மேசையும் அவசரமாக தேவைப்படுகிறது. 

மக்களே உங்கள் குரலை எழுப்புங்கள், போராட்டங்களை ஆரம்பியுங்கள்!

கருத்துகள் இல்லை: