சனி, ஜனவரி 17, 2009

இவர்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

இப்படி வாழ வேண்டும் என்று 25 பேர் பட்டியலிட்டிருந்ததை கல்வெட்டு கடுமையாகத் தாக்கி பின்னூட்டம் இட்டிருந்தார். அதை எழுதிய பின்னணியையும் மனதில் வைத்திருந்த காரணிகளையும் விளக்கினாலும் அவரது கண்டனத்துக்கான காரணங்கள் மாறி விடப் போவதில்லை.

எனது வயதில் சம காலத்தில் சம பொருளாதார சூழலில் வாழ்பவர்களாக எடுத்துக் கொண்டேன். 'அந்தக் காலத்தில் அவரால் அப்படி முடிந்தது. இப்போ எல்லாம் அது வேலைக்காகாது' என்ற சாக்கை தவிர்த்துக் கொள்ள விரும்பினேன். ஊடகங்கள் மூலமாகவோ, தனிப்பட்ட முறையிலோ நமக்குக் கண்ணுக்குத் தெரியும் நிலையில் இருப்பவர்கள் என்று வைத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு தேர்வையும் ஆழமாக அலசி ஆராயவில்லை. மனதில் வந்த பெயரை சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்று மட்டும் யோசித்து விட்டு ஏன் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தையும் எழுதிக் கொண்டேன். எழுதிய வரிசையையோ, காரணங்களையோ மாற்றவில்லை. ஒரே ஒருவருக்கு மட்டும் காரணத்தில் சின்ன மாற்றமும், சில பேருக்கு பெயர்களை நீக்குவதையும் செய்தேன்.

நான் பின்னூட்டத்தில் பதில் சொன்னது போல, இது எனது பார்வையை மட்டும் சார்ந்திருக்கிறது. ஏன் ஐஸ்வர்யா ராய் என்று கேட்டால், அழகாக, திறமையாக தனக்குக் கிடைத்த புகழில் மயங்கிப் போய் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாமல் தரை மீது கால் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அபிஷேக் பச்சனுடன் இரண்டு பேரும் தத்தமது பணி வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் சமன் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட நடிகர்கள் விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் போன்றவர்களிடம் இருக்கும் உழைப்பு என்னை கவர்ந்தது. கனிமொழியின் அமைதியும், தனது குறிக்கோளை நோக்கி அதிகம் ஓசை செய்யாமல் நகர்ந்து சாதித்துக் காட்டும் வலிமையும் ஆச்சரியப்பட வைக்கிறது. டேவிட் பெக்கம், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் என்று தமது திறமையை ஆற்றுப்படுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். இளவரசர் வில்லியமின் சோகம் ததும்பும் வாழ்க்கையை சமாளிப்பதும் முட்டாள்தனமான அரச குடும்ப அமைப்புக்குள் வாழ்க்கையை திறமையாக ஓட்டிச் செல்வதும் பிடித்திருக்கிறது.

வயது பார்க்காமல், சம கால நோக்கில் இல்லாமல் பட்டியல் போட வேண்டுமானால்
  1. காந்தியடிகள்
  2. புத்தர்
  3. இயேசு பிரான்
  4. நேரு
  5. பெஞ்சமின் பிராங்கிளின்
  6. அறிஞர் அண்ணா
  7. எம் ஜி ஆர்
  8. ஓஷோ
  9. புரூஸ் லீ
  10. ஜாக்கி சான்
  11. இளைய ராஜா
  12. ஸ்ரீதேவி
  13. ரஜினி காந்த்
  14. லதா ரஜினிகாந்த்
  15. இந்திரா காந்தி
  16. லியோ டால்ஸ்டாய்
  17. கல்கி
  18. தி ஜானகிராமன்
  19. டாடா நிறுவன இயக்குனர் ஒருவர்
  20. டாடா நிறுவன தலைவர் ஒருவர்
  21. அப்பா
  22. அம்மா
  23. பால் சாமுவேல்சன்
  24. கார்ல் மார்க்சு
  25. காமராசர்
  26. ராஜீவ் காந்தி
  27. பிரபாகரன்
  28. மார்க் ட்வெயின்
  29. ஆப்ரஹாம் லிங்கன்
  30. ஐன்ஸ்டைன்
  31. நெல்சன் மாண்டேலா
  32. அன்னை தெரேசா
இப்படி ஒரு பட்டியல் போகும். எனது வாசிப்பு, எனது அனுபவங்களில் நான் கற்றதை வைத்து மட்டும்தானே எழுத முடியும்.

கருத்துகள் இல்லை: