ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

வேலூருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபுரம்


இறைவனின் பெயரால் நடத்தப்படும் இது போன்ற அவலங்களை அனுமதிப்பது நமது சமூகத்தின் அழுகல்களை காட்டுகிறது. 

பெரிய பெரிய கோவில்களும், தங்கம் வேயப்பட்ட அறைகளும் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டங்களில் உருவானவை. அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தும் முயற்சியில் சமூகம் ஈடுபடலாம். 

21ம் நூற்றாண்டில் மக்களின் உழைப்பைச் சுரண்டும் வகையில் புதிதாக தங்கக் கோயில் கட்டும் கொள்ளைக் கூட்டங்களை என்ன செய்யப் போகிறோம்?

இத்தனை பணம் எங்கிருந்து திரட்டினார்கள் என்று வருமான வரி சோதனை நடத்த வேண்டும்.  இவ்வளவு நிலத்தை எப்படி ஆக்கிரமித்தார்கள் என்று நில வரம்புச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்க வேண்டும். 

இவற்றில் ஆரம்பித்து விட்டு, ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட தங்கம் பூசப்பட்ட கோவில் வளாகத்தை மட்டும் வழிபாட்டுத் தலமாக விட்டு விட்டு, மீதி இருக்கும் இடங்களை ஒரு பெரிய பள்ளிக் கூடமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கலாம். 

கிராமம் பிரபலம் ஆவதற்கு இறைவன் பெயரையும், ஆன்மீகத்தையும் மலிவாகப் பயன்படுத்துவது பெரிய தவறு. வேலை வாய்ப்பும் இடம் வளர்வதும் வணிக நடவடிக்கைகள் (குடுகுடுப்பை சொல்லும் சுற்றுலா, பொருளாதார மையங்கள்).  அவற்றுக்கு ஆன்மீக முலாம் பூசி மக்களை ஏமாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். 

உள்ளூர் பண்ணையார்கள் மற்றும் பூசாரிகளிடம் சிக்கியிருந்த கோவில்களை அரசு நிர்வாகத்துக்குக் கொண்டு வந்தது தேவையான சீர்திருத்த நிலை என்று எனக்குத் தோன்றுகிறது. 

இந்தத் தங்கக் கோவில் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்று எனக்குத் தோன்றுகிறது. 

கருத்துகள் இல்லை: