ஞாயிறு, பிப்ரவரி 13, 2011

நான் ஏன் கிரிக்கெட் உலகக் கோப்பையைப் புறக்கணிக்கிறேன்!

கிரிக்கெட் உலகக் கோப்பையைப் புறக்கணிப்போம்  - செந்தழல் ரவி

//எனக்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சச்சின், ட்ராவிட், கங்குலி. சச்சின் க்ரீஸை விட்டு இறங்கி அடிக்கு சிக்ஸரும், காலுக்கு வரும் யார்க்கரை அப்படியே போர் ஆக இழுக்கும் ட்ராவிடும், ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை கவரில் விளாசும் கங்குலியும் ஆடிய காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம்.

இந்தியா தோற்றால் அப்செட் ஆகிவிடுவது, ஜெயித்தால் ஏதோ நானே களத்தில் இறங்கி ஆடியது போலவும் சந்தோஷப்பட்ட காலம் ஒன்று உண்டு.

ஆனால் இன்றைக்கு எனக்கு 'இந்திய' என்ற வார்த்தை சற்றே அன்னியமாக படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபிறகும், இனிமே சுடமாட்டோம் என்று புளுகும் இந்த அறிவு ஜீவிகள், இதுவரை ஒரு பேச்சுக்கு கூட இது தவறு, இந்த செயலுக்காக வருந்துகிறோம் என்று சொல்லவில்லை.//

//நமது எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு ஒன்று இருக்கிறது. அது, வரப்போகும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பது.

சென்னையில் போட்டி நடந்தால், முழு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு ஆள் கூட இருக்கக்கூடாது. தமிழன் என்ற உணர்வு தலை தூக்கவேண்டும். கிரிக்கெட் போட்டிக்கான கட்டணத்தை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

கிரிக்கெட் போட்டிகளை டிவியிலும் பார்க்கக்கூடாது. கிரிக்கெட் தொடர்பாக இணைய போரம்களில் விவாதிக்ககூடாது. கிரிக்கெட் தொடர்பாக வலைப்பதிவுகள், ட்விட்டர் பதிவுகள், பேஸ்புக் அப்டேட்டுகள் என்று எதுவும் கூடாது.//


இலங்கையைப் புறக்கணிப்போம் - முகிலன்

//நவம்பர் 27, 2008. பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் தீவிரவாதிகள் 14 பேர் மும்பை நகரத்தை சில நாட்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். உயிர், பொருள் இழப்புகள் ஏற்பட்டன. பொங்கி எழுந்தது இந்தியா. பாகிஸ்தானைக் குற்றம் சொல்லி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது, இந்நிகழ்வில் பாகிஸ்தான் அரசாங்கம் எந்த அளவுக்கு ஈடுபட்டது என்பதற்கு சான்றுகள் இல்லாத போதிலும். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கான விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் செல்ல இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது.//

அதற்கு ஈடாக, அதே நேரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணி விளையாட போனது. 

//கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணிப்போம். நேரிலோ டிவியிலோ பார்க்காமல் புறக்கணிப்போம். ஒரு வேளை ஏற்கனவே டிக்கெட் வாங்கிவிட்டீர்கள் என்றால் ஸ்டேடியத்துக்குள் டிவி கேமிராவுக்குத் தெரியும் வண்ணம் மீனவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் ஏந்திப் பிடிப்போம்.

இலங்கையில் நடக்கும், இலங்கை அணி பங்குபெறும் அனைத்து விளையாட்டுகளையும் புறக்கணிப்போம். இலங்கை அணியைத் தடை செய்யாத ஐசிசி நடத்தும் அத்தனைப் போட்டிகளையும் புறக்கணிப்போம். //

கருத்துகள் இல்லை: