நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் (ndtvயின் பர்கா தத், இந்தியா டுடேயின் பிரபு சாவ்லா, வீர் சங்க்வி முதலானோர்) தமது எல்லைகளைத் தாண்டியதாக வெளி வந்தது.
1. செய்தி சேகரிக்கிறோம் என்ற ஆர்வத்தில் அதிகார தரகர்களாக இவர்கள் செயல்படுவது தெரியவந்தது.
2. ஒன்றரை ஆண்டுகள் முன்பு நடந்த இந்த உரையாடல்கள் செய்திகளாக வெளியிடாமல் வைத்திருந்தார்கள் - நீரா ராடியா என்ற தொழில் முனைவர் அரசியல் தரகராக செயல்படுவதைக் குறித்து இவர்கள் தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் விவாதிக்கவில்லை.
3. தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியான பிறகும் அவை பற்றிய விபரங்களை தத்தமது பத்திரிகை / தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்தார்கள்.
வேறு வகையில் ஊழல் அல்லது தவறு செய்யாமல் இருந்தாலும், இந்த அடிப்படை பத்திரிகை தர்மத்தில் அவர்கள் தவறியிருக்கிறார்கள். இதில் அதிகமாக தாக்கப்பட்டவர் பர்கா தத். பர்காகேட் என்று தலைப்பிட்டு இணையத்தில் பரவலான விவாதங்கள் நடந்தன.
ஒரு வழியாக பர்கா தத், சக பத்திரிகை ஆசிரியர்களின் கேள்விகளை சந்தித்து, அந்த நிகழ்ச்சியை சுருக்காமல் அப்படியே ஒளி பரப்பு செய்திருக்கிறார்கள் ndtvயில்.
http://www.ndtv.com/video/player/ndtv-special-ndtv-24x7/barkha-dutt-other-editors-on-radia-tapes-controversy/178964?hp
தவறு செய்வது மனித இயற்கை. செய்த தவறை உணர்ந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் அத்தகைய தவறுகளை தவிர்ப்பதாக உறுதி சொல்வது, சிறந்த மனிதர்களின் அடையாளம்.
பர்கா தத்தும், NDTVயும் தாமதமானாலும் தமது சிறப்பைக் காட்டியிருக்கிறார்கள் and she is pretty :-)
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
புதன், டிசம்பர் 01, 2010
செவ்வாய், நவம்பர் 30, 2010
ரத்தன் டாடாவின் privacy
பட்டப் படிப்பு முடித்த பிறகு வேலையில் சேர்ந்தது டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா எக்ஸ்போர்ட்ஸ் (இப்போது டாடா இன்டர்நேஷனல்) நிறுவனத்தின் தோல் பிரிவில். நான்கு ஆண்டுகள் மத்திய பிரதேசத்திலும், 2 ஆண்டுகள் சாங்காயிலும் பணி புரிந்தேன்.
'எதைச் செய்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்' என்பது அங்கு இயல்பாக பின்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக, விதிகளை வளைத்து செயல்படுவதும் வணிக நிறுவனங்களில் நடக்கிறது என்பது மற்ற நிறுவனங்களைப் பற்றிப் படித்த போது, மற்ற நிறுவனங்களுடன் உறவாடிய பிறகுதான் தெரிய வந்தது.
டாடா என்றால் நேர்மை என்ற உருவகம் பலரது மனதில் இருக்கலாம். அது பெருமளவுக்கு உண்மையும் கூட. தனிப்பட்ட அலுவர்கள் நேர்மை அற்ற செயல்களை செய்தாலும், நிறுவனத்தின் கொள்கையாக நேர்மையற்ற செயல்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.
டாடா நிறுவனத்தின் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதை நான் பெருமையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
=========================
டாடா குழுமத்தின் தலைவர் திரு ரத்தன் டாடா, 'திருமதி நீரா ராடியாவுடனான அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவது அவரது அந்தரங்க உரிமைகளுக்கு எதிரானது' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
========================
அந்தரங்க உரிமை என்பது தனிமனிதர்களுக்கானது. ஒரு வணிக நிறுவனத்துக்கு அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது. (தொழில் ரகசியங்கள் - பொருட்களின் விலை நிர்ணயித்தல், தொழில் நுட்ப அறிவு -போன்றவை) இருக்கலாம்.
டாடா போன்ற பெரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு முழுவதுமாகவும், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் - வணிக நலனுக்குத் தேவையான மறைவைத் தவிர்த்து - பெருமளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
திருமதி நீரா ராடியாவின் மீது வருமான வரித் துறையின் கண்காணிப்பு இருக்கிறது. அவருடன் திரு ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாவதில் அவருக்கு என்ன மறுப்பு இருக்க முடியும்?
தேவையில்லாத பேச்சுக்களை பொதுவில் வைத்து கிசுகிசு பாணியில் விவாதங்கள் நடப்பதை திரு ரத்தன் டாடா விரும்பாமல் இருக்கலாம். ஆனால். ஊழல் கண்காணிப்பில் இருப்பவர் ஒருவருடனான அவரது உறவாடல்களை ஏன் பொதுவில் விவாதிக்க முடியாமல் போய் விட்டது?
'எதைச் செய்தாலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்' என்பது அங்கு இயல்பாக பின்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக, விதிகளை வளைத்து செயல்படுவதும் வணிக நிறுவனங்களில் நடக்கிறது என்பது மற்ற நிறுவனங்களைப் பற்றிப் படித்த போது, மற்ற நிறுவனங்களுடன் உறவாடிய பிறகுதான் தெரிய வந்தது.
டாடா என்றால் நேர்மை என்ற உருவகம் பலரது மனதில் இருக்கலாம். அது பெருமளவுக்கு உண்மையும் கூட. தனிப்பட்ட அலுவர்கள் நேர்மை அற்ற செயல்களை செய்தாலும், நிறுவனத்தின் கொள்கையாக நேர்மையற்ற செயல்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.
டாடா நிறுவனத்தின் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதை நான் பெருமையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
=========================
டாடா குழுமத்தின் தலைவர் திரு ரத்தன் டாடா, 'திருமதி நீரா ராடியாவுடனான அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவது அவரது அந்தரங்க உரிமைகளுக்கு எதிரானது' என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம்.
========================
அந்தரங்க உரிமை என்பது தனிமனிதர்களுக்கானது. ஒரு வணிக நிறுவனத்துக்கு அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது. (தொழில் ரகசியங்கள் - பொருட்களின் விலை நிர்ணயித்தல், தொழில் நுட்ப அறிவு -போன்றவை) இருக்கலாம்.
டாடா போன்ற பெரு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதில் பணி புரியும் ஊழியர்களுக்கு முழுவதுமாகவும், வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் - வணிக நலனுக்குத் தேவையான மறைவைத் தவிர்த்து - பெருமளவும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
திருமதி நீரா ராடியாவின் மீது வருமான வரித் துறையின் கண்காணிப்பு இருக்கிறது. அவருடன் திரு ரத்தன் டாடா பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியாவதில் அவருக்கு என்ன மறுப்பு இருக்க முடியும்?
தேவையில்லாத பேச்சுக்களை பொதுவில் வைத்து கிசுகிசு பாணியில் விவாதங்கள் நடப்பதை திரு ரத்தன் டாடா விரும்பாமல் இருக்கலாம். ஆனால். ஊழல் கண்காணிப்பில் இருப்பவர் ஒருவருடனான அவரது உறவாடல்களை ஏன் பொதுவில் விவாதிக்க முடியாமல் போய் விட்டது?
புதன், நவம்பர் 24, 2010
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா...
இணையத்தில் தமிழில் எழுத இருந்த சிரமங்களை உடைக்க இகலப்பை 1999/2000ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் முழுவதும் புதிதாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது இகலப்பை. முகுந்தின் வழிகாட்டலில் தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் திறவூற்று (open source) மென்பொருளாக வெளியிடப்படுகிறது.
இணையத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திப் பலனடையலாம். உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் உருவாக்கக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் முழுவதும் புதிதாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது இகலப்பை. முகுந்தின் வழிகாட்டலில் தன்னார்வலர்களால் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் திறவூற்று (open source) மென்பொருளாக வெளியிடப்படுகிறது.
இணையத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்திப் பலனடையலாம். உங்கள் கருத்துக்களையும் குறைகளையும் உருவாக்கக் குழுவுக்குத் தெரிவிக்கலாம்.
செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010
மகஇகவும் இணையமும்
http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/
http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர
மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.
திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.
மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.
அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்
1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.
2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில் கருத்தாக்கம் செய்வது முக்கியமான பணி.
இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர
மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.
திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.
மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.
அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.
அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்
1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.
2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில் கருத்தாக்கம் செய்வது முக்கியமான பணி.
இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
சனி, ஆகஸ்ட் 28, 2010
காவி பயங்கரவாதிகள்! :-) :-)
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
http://www.indianexpress.com/news/why-rss-in-terrorist-activities-gadkari-asks-digvijay/673239/
பிற்பகல் தாமே வரும்.
http://www.indianexpress.com/news/why-rss-in-terrorist-activities-gadkari-asks-digvijay/673239/
குறிச்சொற்கள்
அரசியல்,
இந்துத்துவா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)