செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

மகஇகவும் இணையமும்

http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/

http://www.google.com/buzz/115511813610845200164/bHuJAeb5mQf/வ-னவ-ம-ம-க-இ-க-த-ழர

மகஇகவை மற்ற கட்சிகளோடு ஒப்பிடக் கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.

திமுக, அதிமுக, பாமக முதலான கட்சிகள் இந்திய அரசியலமைப்புக்குள், தேர்தலில் போட்டியிடுவது, பத்திரிகைகளில் 'கொள்கை' பரப்புவது, மக்களுக்குப் பிடித்தபடி (அன்றைய தேதியில்) நடந்து கொண்டு பிரபலமடைவது என்று செயல்படுகிறார்கள்.

மகஇகவைப் பொறுத்த வரை, இன்றைய ஆட்சியமைப்பையே முழுமையாக நிராகரிக்கிறார்கள் (என்பது எனக்குப் புரிந்தது). இந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதார அமைப்பைத் தூக்கி எறிந்து புதிய சமூகம் உருவாக்குவது அவர்களது நீண்ட கால நோக்கம்.

அதற்கான வேலைகளை மட்டும் செய்து கொண்டே இருக்கும் கர்மவீரர்கள் அவர்கள். இடையில் கிடைக்கும் பதவி, பணம், அங்கீகாரம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜெயிலுக்குப் போவது ஒரு கௌரவம் என்பது கூட ஒத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அடுத்த 10 ஆண்டுகளில் இல்லா விட்டாலும், 100 ஆண்டுகளிலாவது தாம் நம்பும் சமூகத்தை உருவாக்கி விடலாம் என்ற உறுதியான நம்பிக்கையில், அதற்காக இன்றைய என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்கிறார்கள்

1. மக்கள் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுவது மூலம் பொது மக்கள் மத்தியில் பணி செய்வது ஒரு பக்கம்.

2. இன்னொரு பக்கம், நீண்ட கால நோக்கில் அறிவுஜீவிகளின் மத்தியில்  கருத்தாக்கம் செய்வது  முக்கியமான பணி.

இரண்டாவது நோக்கத்தின் ஒரு பிரிவுதான் இணையத்தில் செயல்படுவது. மகஇக உறுப்பினர்கள் தாமாகவே இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தாலும், பின்னர் அவர்களுக்குள் விவாதித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

சுதந்திரம்!!!

"நிலம் வாங்கணும் என்றால் என்னிடம் கேட்டிருந்தால் அறிவுரை சொல்லியிருப்பேனே எந்த நிலத்தை வாங்கலாம், எதை வாங்கக் கூடாது என்று. இது போல அரசு நிறுவனத்தின் நிலத்தில் கை வைத்து மாட்டிக் கொண்டாயே" என்று ஊழல் செய்ததாக வழக்கில் சிக்கிய அப்போதைய முன்னாள் முதல்வருக்கு  (செல்வி ஜெயலலிதா) அப்போதைய  முதல்வர் (திரு கருணாநிதி) கருத்து சொன்னார்.

எதைச் செய்தால் மாட்ட முடியாது என்று அலசி ஆராய்ந்து புத்தி கூர்மையுடன் ஊழல் செய்யும் திரு கருணாநிதியின் சாமர்த்தியத்தின் உச்சக்கட்டம் இந்த ஆட்சிக் காலம்.
  • குழந்தையின் கையில் கிலுகிலுப்பை வாங்கித் தருவதாகச் சொல்லி கழுத்தில் போட்டிருக்கும் நகையை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். கிலுகிலுப்பையையும் பறித்துக் கொள்கிறார்கள்.
  • ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, நகையை மட்டும் திரும்பக் கொண்டு கொடுத்து விடுகிறார்கள்.
  • குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு நகையின் பயன்பாடும் இல்லை. கிலுகிலுப்பையின் பலனும் இல்லை. 
குழந்தை - எல்நெட் கார்பொரேஷன்
கிலுகிலுப்பை - ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர்
நகை - எல்நெட் கார்பொரேஷனின் சொத்துக்கள்
திருடர்கள் - எல்நெட் மற்றும் ஈடிஎல்லின் நிர்வாகிகள்

பெற்றோர்கள் - எல்காட், தமிழக அரசு, எல்காட்டின் சிறுபான்மை பங்குதாரர்கள்
  1. ஈடிஎல் இன்ஃப்ராஸ்டிரக்சர் என்ற நிறுவனத்திற்கு எல்நெட் கார்போரேஷனின் சொத்துக்களை பயன்படுத்தி விட்டு ஈடிஎல்லின் உரிமை, ஆதாயத்தில் பங்கு எல்லாவற்றையும் தனியார் அடித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான ஊழல் வெளியில் வந்திருக்கிறது.
  2. இந்த விபரங்களின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்டு விசாரிக்க முனைந்த எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர்கள் சுறுசுறுப்பாக பணி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  3. கிரிமினல் மூளைகளின் ஊழல் வேலை ஏதோ துப்பறியும் நாவல் படிப்பது போல இருக்கிறது.  இந்தச் சில கோடிகளுக்கு இவ்வளவு 'உழைத்திருக்கிறார்கள்' என்றால் பத்தாயிரக் கணக்கான கோடிகள் அடித்த விவகாரங்களில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கும்!
ஒரு ரூபாய் கூட அரசுப் பணத்தை களவாடிய ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்தி தகுந்த தண்டனை கிடைக்க வைப்பது அவசியம். அது தானாக, ஒரே நாளில் நடந்து விடப் போவதில்லை. திரு உமாசங்கர் போல பொறுமையாக, விடா முயற்சியுடன் வழக்கை எழுப்பி உண்மையை நிலை நாட்ட வேண்டியிருக்கும்.
  • இந்தக் கட்டத்தில் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், ஏற்படப் போகும் பொருளாதாரப் பேரழிவில் மக்கள் சிக்கி, பெரும் இன்னலுக்கு வழிவகுக்கும்.
  • 100 கோடி ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது, 60,000 கோடி ரூபாய் ஊழல் என்று சொல்லும் போது அது வெறும் எண்களாகப் போய் நமது மனதை மரக்க வைத்து விட்டது. இந்தப் பணத்தில் ஒவ்வொரு ரூபாயும், சமூகத்தின் மிகவும் நலிந்த பிரிவினரை வாட்டும் வகையில் போய் முடியும்.
  • 60,000 ரூபாய் அடித்ததில் 6,000 கோடி ரூபாய் தேர்தல் லஞ்சமாக வாக்காளர்களுக்குக் கொடுத்து காசு வாங்கியவர்களை மகிழ்வித்து விட்டாலும், மீதி 54,000 கோடி ரூபாய்கள் நாட்டுப் பொருளாதாரத்தில் பாய்ந்து, பொருட்களின், குடியிருப்பின், கல்வியின், மருத்துவ சேவையின் விலை உயர்வாக மக்களை வாட்ட ஆரம்பிக்கும். 
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க, பொறுப்புள்ள ஒவ்வொருவரும் தமது குரலை உரக்க ஒலிப்பது இன்றைய தேவை.

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை

நேற்று ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போயிருந்த போது வினியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் எழுதியிருந்தது. Communist Workers Platform (CWP) என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் பிரசுரத்தில் "படியுங்கள் மாற்றுக் கருத்து" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் தேடினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவும் கிடைத்தது.
http://sattavizhippunarvu.blogspot.com/2010/07/cwp.html

==========

நமது நாட்டின் சமூக அமைப்பு முதலாளித்துவம் ஆகும். இங்கு நிலவுவது முதலாளித்துவ லாப நோக்கப் பொருளாதாரம். லாப நோக்கம் உழைப்பவரையும் நாட்டின் வளங்களையும் சுரண்டி தனியார் கொழுக்க வழிவகுத்துக் கொடுக்கிறது. அதிக எண்ணிக்கையில் நமது நாட்டில் உழைப்பாளர் இருப்பது மிகக் குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முதலாளிகளுக்கு வாய்ப்பு வசதியை ஏற்படுத்தித் தருகிறது, சுரண்டலின் விளைவாக சமூகத்தின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுகிறது. அது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தித் தேக்க நெருக்கடியினை தோற்றுவிக்கிறது.

நமது நாட்டின் அரசு இந்த முதலாளித்துவத்தின் நலன்களுக்காக அடிப்படையில் இருக்கக்கூடிய அரசு. அது உருவாக்கும் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுபவையே. மக்களின் வாங்கும் சக்தி சூறையாடப்படுவதால் உற்பத்திப் பொருள் விற்பனை குறைந்து ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளே உற்பத்தியை முழுவீச்சில் தொடரமுடியாமல் திணறுகின்றன, இந்நிலையில் குன்றி வரும் முதலீட்டு வாய்ப்புகளை எப்படியாவது முதலாளிகளுக்கு ஏற்படுத்தி தருவதும் அரசின் பணியாக உள்ளது. நெருக்கடியின் சுமை முழுவதையும் உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் சுமத்துகிறது. அதனை எதிர்த்து கிளம்பும் உழைக்கும் மக்கள் இயக்கங்களை நசுக்குவதும் திசை திருப்புவதும் முதலாளித்துவ அரசின் முக்கிய பணிகளாக உள்ளன.

முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பொதுநல அரசு என்ற பாவனையில் அரசு அதன் கைவசம் வைத்திருந்த பொது சுகாதாரம், கல்வி போன்றவற்றையும் கூட தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது. உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து பெரும் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு மானியமாக வழங்குகிறது . அதைக் கொண்டே உழைக்கும் வர்க்க இயக்கத்தை நசுக்கப் பயன்படும் அடக்குமுறை கருவிகளை மென்மேலும் வலிமைப்படுத்துகிறது.

முதலாளித்துவ நெருக்கடி முற்றிவரும் இன்றைய நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஜனநாயக உரிமைகள் பலவும் பறிபோய்க் கொண்டுள்ளன. அமைப்பு வெகு வேகமாக பாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

இவ்வாறு மக்கள் சந்தித்து கொண்டுள்ள பிரச்னைகள் அனைத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கக் கூடிய முதலாளித்துவத்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோசலிச அமைப்பை நிறுவுவது உணர்வு பெற்ற உழைக்கும் மக்கள் இன்றைய நிலையில் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும். அந்த முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிச சமூக மாற்றத்தை அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டு உண்மையான சமூக மாற்ற சக்திகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து சமூக மாற்றத் திசைவழியில் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதே கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடை (CWP) அமைப்பாகும்.
==========

கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் - கற்கால மனிதர்களின் சட்டம்

இரானில் திருமணத்துக்கு வெளியில் பாலுறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று விதித்த தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்புவோம்.

http://english.aljazeera.net/news/middleeast/2010/08/2010812141953137551.html