திங்கள், மார்ச் 03, 2008

!!!!!!

துன்பங்களையும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, ருக்மணி தனது வழியில் வந்து விடாமல் ஜானகியால் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அவள் ஒரு விடுதியுடன் இணைந்த பள்ளியில் படித்து முடித்து இன்றைக்குப் பட்டதாரியாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறாள்.

ருக்மணிக்கு அவளது அம்மா ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியுமா?

"ஆமா, அவள் பத்தாம் வகுப்பு முடிச்சதும் நானே சொல்லிட்டேன். வேறு யாராவது கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நானே சொல்லி விடுவது நல்லதில்லையா. பல நாட்கள் அழுது கொண்டே இருந்தாள், என் கூட பேசவில்லை. கடைசியில் என்னை, என் நிலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாள்"

தாயும் மகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "என்னுடைய பணியால் ருக்மணிக்கு கல்யாணம் பண்ணி வைப்பது கஷ்டமாக இருக்கப் போகிறது"

பேசிக் கொண்டிருக்கும் போது முதல் முறையாக ஜானகியின் முகத்தில் கடுமை கரைந்து குழந்தை பயம் தெரிகிறது. உடனேயே மீண்டும் அந்தக் கடுமை முகத்தைப் போர்த்திக் கொள்கிறது.


----இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு மலரில் வெளி வந்த கட்டுரையிலிருந்து.

கருத்துகள் இல்லை: