வெள்ளி, பிப்ரவரி 29, 2008

வாழும் நெறி

தனியொரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவையில்லை

இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால்
எடுப்பவர் யாருமில்லை

=== ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால்
எடுப்பவர் யாருமில்லை//

நீங்களே துவக்கி வைக்கலாமே?:-)

அருண்மொழி சொன்னது…

//இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால்
எடுப்பவர் யாருமில்லை//

இருப்பது -
1. பணம்
2. அறிவு

பணம் பொதுவில் வைத்தால் / அல்லது பிறருக்கு அளித்தால் குறையும்

அறிவு பொதுவில் வைத்தால் / அல்லது பிறருக்கு அளித்தால் குறையும்

நாங்களாம், அறிவை பொதுவில் வைக்கவேண்டும் (திறந்த மூலம் - Open Source)என்று கூறுகிறோம்.

அருண்மொழி சொன்னது…

அறிவை பொதுவில் வைப்பதற்கும் “பூட்டி” வைப்பதற்கும் உள்ள வேறுபாடு

http://arunmozhi985.blogspot.com/2008/02/blog-post_9586.html

வஜ்ரா சொன்னது…

அறிவைப் பொதுவில் வைப்பது ஒரு சிறந்த நெறி. ஆனால் பொருளை, பணத்தைப் பொதுவில் வைக்கவேண்டும் என்று சொல்பவனை என்றுமே நம்பக்கூடாது.


உன்னிடம் இருப்பதைப் பொதுவில் வை என்று சொல்பவன் அதை எடுத்துத் தனக்காகப் பயன் படுத்திக் கொள்ளவே அப்படிச் சொல்கிறான் என்பது எல்.கே.ஜி குழந்தையின் அறிவில் கூட எட்டக்கூடிய ஒரு சின்ன விஷயம்.

மா சிவகுமார் சொன்னது…

வாங்க சிவா,

//நீங்களே துவக்கி வைக்கலாமே//
செய்கிறேன்.

அருண்மொழி,

//பணம் பொதுவில் வைத்தால் / அல்லது பிறருக்கு அளித்தால் குறையும்//

பற்றாக்குறை இருக்கும் போது வன்மமும், வெறுப்பும், பகையும் வளரும். எல்லோரும் முழுமையாக உழைத்து மன நிறைவுடன் வாழும் போது குறைவது எது என்பது பொருட்டில்லாமல் போய் விடும். பணம் என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.

//நாங்களாம், அறிவை பொதுவில் வைக்கவேண்டும் (திறந்த மூலம் - Open Source)என்று கூறுகிறோம்.//
அறிவைப் பொதுவில் வைப்பது இப்போதே வழக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப் பேசினால் எள்ளி நகையாடியிருப்பார்கள்.

குறிப்பிட்ட பிரிவுக்கு வெளியிலிருப்பவர்கள் அறிவு தரும் நூல்களைப் படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தை உருக்கி ஊற்றுவோம் என்று கூட கோட்பாடுகள் இருந்திருக்கின்றன.

அறிவு விடுதலை அடைந்தது போல, மற்ற செல்வங்களும் விடுதலை அடையும் போது சமவுடமை சமூகம் மலரும்.

வஜ்ரா,

//உன்னிடம் இருப்பதைப் பொதுவில் வை என்று சொல்பவன் அதை எடுத்துத் தனக்காகப் பயன் படுத்திக் கொள்ளவே அப்படிச் சொல்கிறான் என்பது எல்.கே.ஜி குழந்தையின் அறிவில் கூட எட்டக்கூடிய ஒரு சின்ன விஷயம்.//

அதே குழந்தையின் அறிவு வளர்ந்து விபரம் புரியும் போது பொதுவில் வைப்பதன் அடிப்படை தெரிந்து கொள்ளும். இன்றைக்கு எல்கேஜி குழந்தையின் நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம் என்று ஒத்துக் கொள்கிறேன். அறிவும் வளரும், மாற்றமும் வரும்.

அன்புடன்,
மா சிவகுமார்