புதன், ஜூன் 30, 2010

காஷ்மீர்

பல மாதங்களாக காஷ்மீரிலிருந்து பெரிய வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகள் படிக்கவில்லை. ஓமர் அப்துல்லா நல்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.

கடந்து இரண்டு நாட்களாக மீண்டும் கலவரம். இரண்டு இளைஞர்கள், துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்.

டெக்கான் குரோனிக்கிளில் ஓமர் அப்துல்லாவின் பேட்டியில் இதைப் பற்றியும் காஷ்மீர் போராட்டம் குறித்த மற்ற செய்திகளைப் பற்றியும் பேசியிருந்தார்.
  • 'காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானின் மேலாண்மையில்தான் செயல்படுகிறார்கள்.'
  • 'இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி வந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே செயல்படுகிறது'
  • 'காஷ்மீரில் கலகத்தைத் தூண்டுவதற்கு, பிரிவினை வாதிகளும், எதிர்க்கட்சிகளும் தவிர இன்னும் சில கைகளும் செயல்படுகின்றன'
அவரது வழிகாட்டலில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இன்றைய நாளிதழில் மேலும் துப்பாக்கி சூடு, மேலும் உயிரிழப்பு என்று செய்தி.

கருத்துகள் இல்லை: