புதன், ஜனவரி 04, 2012

கண்ணில் விழுந்தவை


1. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - சர் வெங்கி ஆகிறார்.
2012 புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அரச விருதுகள் பட்டியலில் சர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நோபல் பரிசு கிடைத்த நேரத்தில் இந்தியர் என்று காலர் தூக்கி விட்டுக் கொண்டார்கள், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும்.

2. என் ஆர் நாராயண மூர்த்தி பேட்டி

"டிசம்பர் 29 மிகவும் மோசமான நாள். முதலாவதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போனது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.9 கோடி மக்கள் தொகையுடைய நாட்டின் அணியைத் தோற்கடிக்க 11 பேர் இல்லையே என்று வேதனையாக இருந்தது."

3. லோக்பால் பில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது - காங்கிரசு.

1968லிருந்தே இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஒரு பேச்சு இன்று வேறு பேச்சு என்ற கெட்ட பழக்கமே கிடையாது. 2041லும் இதையே சொல்வார்கள்.

4. இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நபர்களும் முதலீடு செய்யலாம்.
பிரதமருக்கு எப்படியாவது வெளிநாட்டுப் பணம் வந்தா சரிதான். சில்லறை வணிகத்தில் முதலீடு இல்லை என்றால் பங்குச் சந்தை வழியாகவாவது வந்து நிறையட்டும்.

என்ன இருந்தாலும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா மேல் எவ்வளவு பாசம்?

5. 2012ல் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், நிபுணர்கள் குழு.

6. மோனோ ரயில் ஒப்பந்த புள்ளி தொடர்பான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லை.

7. வேலூர் மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை.

8. இந்திய நிறுவனங்கள் லாபத்தை அதிகரிக்க வெளிநாடுகளைத் தேடுகின்றன.
இந்தியாவில் வளர்ச்சி வீதம் குறைவதால் முதலீட்டுக்கு லாபம் கிடைக்காது என்று வெளி வாய்ப்புகளைத் தேடுகின்றன இந்திய நிறுவனங்கள்.

9. கிரிக்கெட் நேர்முக வர்ணனையை ஒலிபரப்பாத கோவை வானொலி நிலைய நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட  10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.

3 கருத்துகள்:

சீனு சொன்னது…

//10. திருவண்ணாமலை அருகில் உள்ளாட்சி தேர்தலில் மாற்றி வாக்களித்தார்கள் என்று தோற்றுப் போனவர் வீடுகளுக்கு தீ வைத்து விட 10 இருளர் குடும்பத்தினர் ரோட்டோரம் வசிக்கிறார்கள்.//

http://tamil.oneindia.in/news/2012/01/04/tamilnadu-15-irular-families-ostracised-near-chenji-aid0091.html

???

மா சிவகுமார் சொன்னது…

நான் சொன்னது இந்த செய்தியை

http://www.deccanchronicle.com/channels/cities/chennai/political-vengeance-leaves-tribals-homeless-426

மா சிவகுமார் சொன்னது…

டெக்கான் குரோனிக்கிள்