குளிர் காலத்தில் சிமின்டு தரையில் படுத்தால் குளிரும். பாய் விரித்துப் படுத்தால் குளிருவதில்லை. உலோகப் பரப்பைத் தொட்டால் குளிர்கிறது, மரப்பரப்பு குளிருவதில்லை.
நம்ம உடம்பிலிருந்து சூட்டை கடத்தும் பரப்புகளைத் தொட்டால் நம் உடல் வெப்பத்தை இழப்பதால் குளிர்கிறது. வெப்பத்தைக் கடத்த முடியாத பரப்புகளைத் தொடும் போது குளிர்வதில்லை.
அதே போலக் வெளியில் போகும் போது கம்பளி ஆடை அணிவது உடல் வெப்பத்தை இழக்காமல் காத்துக் கொள்ள மட்டுமே. கம்பளி ஆடைக்கு என்று கதகதப்பாக்கும் இயல்பு கிடையாது.
விடையளித்த (முந்தைய பதிவில்) வவ்வாலுக்கும், பெயர் சொல்லாமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்ட நண்பருக்கும் நன்றி.
அடுத்த கேள்வி:
தோசை சாப்பிட்டால் அதிகமா தண்ணீர் தவிப்பது ஏன்?
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஜூலை 22, 2007
வெள்ளி, ஜூலை 20, 2007
சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது ஏன்?
விடை உதவி - வவ்வால்்
"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் "
இணையத்தில் தேடியதில் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கட்டுரைகள் ரத்த ஓட்டம் செரிமானத்துக்கு அதிகமாகத் தேவைப் படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மந்த நிலை ஏற்படுகின்றது என்றே சொல்கின்றன.
விழித்திருந்து படிக்க வேண்டும் என்றால் வயிறு நிறைய சாப்பிடாமல் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தலை சாய்த்தல் கேட்கிறது என்றால், கொஞ்சம் யோசியுங்க.
அடுத்த கேள்வி:
உலோகம் குளிர்ச்சியாகவும், மரக்கட்டை குளிராமலும் இருப்பது ஏன்?
"பொதுவாக நம் உடலின் ரத்த ஓட்டத்தில் 40 சதவீதம் மூளைக்கு , அதாவது தலைப்பகுதிக்கு போய்விடும், சாப்பிட்டவுடன், செறிமானம், மற்றும் உட்கிரகித்தலுக்காக அதிக ரத்த ஓட்டம் ... வயிற்றின் பக்கம் திருப்பப்படும் எனவே மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும் அதனால் ஒரு மந்தமான நிலை ஏற்படும் ,அதுவே தூக்கத்திற்கு அழைத்து செல்லவும் காரணம் "
இணையத்தில் தேடியதில் வேறு சில காரணங்களும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலான கட்டுரைகள் ரத்த ஓட்டம் செரிமானத்துக்கு அதிகமாகத் தேவைப் படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மந்த நிலை ஏற்படுகின்றது என்றே சொல்கின்றன.
விழித்திருந்து படிக்க வேண்டும் என்றால் வயிறு நிறைய சாப்பிடாமல் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தலை சாய்த்தல் கேட்கிறது என்றால், கொஞ்சம் யோசியுங்க.
அடுத்த கேள்வி:
உலோகம் குளிர்ச்சியாகவும், மரக்கட்டை குளிராமலும் இருப்பது ஏன்?
வியாழன், ஜூலை 19, 2007
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?
வவ்வால் போன பதிவிலேயே விடையைச் சொல்லி விட்டார். 'குறைந்த வெப்பம் வேதிவினை திறனைக் குறைக்கும்' என்று.
வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின் உயிர் வேதி வினைகள் அனைத்தும் உடல் வெப்ப நிலையிலேயே நடக்கும் படி தகவமைந்திருக்கும்.
சாப்பிட்டுட, குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றின் உள் வெப்பநிலை குறைந்து உணவைச் செரிக்கும் வினைகள்
பாதிக்கப்படும் என்று அனுபவம்.
வெதுவெதுப்பான நீர்தான் வயிற்றுக்கு நல்லது.
அடுத்த கேள்வி:
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?
வேதி வினைகள் குறித்த வெப்ப நிலையில் அதிக பட்ச வேகத்தில் நடக்கும். நமது உடலின் உயிர் வேதி வினைகள் அனைத்தும் உடல் வெப்ப நிலையிலேயே நடக்கும் படி தகவமைந்திருக்கும்.
சாப்பிட்டுட, குளிர்ந்த நீர் குடித்தால் வயிற்றின் உள் வெப்பநிலை குறைந்து உணவைச் செரிக்கும் வினைகள்
பாதிக்கப்படும் என்று அனுபவம்.
வெதுவெதுப்பான நீர்தான் வயிற்றுக்கு நல்லது.
அடுத்த கேள்வி:
சாப்பிட்ட உடன் தூக்கம் வருவது ஏன்?
புதன், ஜூலை 18, 2007
குழம்பில் புளி ஊற்றுவது எதுக்கு?
புளிப்பு சுவை என்ற வெளிப்படையான விடை ஒரு புறம் இருக்க, புளி சேர்ப்பதால் என்ன வேதியியல் மாற்றம் நடக்கிறது என்று பார்க்கலாம்.
தூய்மையான தண்ணீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருக்கும். உயிரினங்கள் வாழ்ந்து தழைக்க இந்த சமச் சூழல் தேவை. புளியில் அமிலத் தன்மை இருக்கிறது. புளி சேர்த்தக் குழம்பில் அமிலக் காரச் சமநிலை மாறி, அமிலத் தன்மை மிஞ்சி விடும். இதனால் உணவுப் பொருளில் வளர்ந்து பெருகி குழம்பைக் கெட்டுப் போக வைக்கக் கூடிய நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து குழம்பு அதிகமான நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
குளிர் சாதனப் பெட்டிகள் இல்லாத காலங்களில் செய்த உணவை முடிந்த வரை கெட்டுப் போகாமல் காத்துக் கொள்ள இந்த புளி சேர்ப்பது பயன்பட்டது. சமைத்த மீதத்தை ஆறியதும் குளிரப் பெட்டியில் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும் போது இந்தக் காரணம் அடிபட்டுப் போகிறது.
அடுத்த கேள்வி:
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?
தூய்மையான தண்ணீரில் அமிலத் தன்மையும் காரத்தன்மையும் சமநிலையில் இருக்கும். உயிரினங்கள் வாழ்ந்து தழைக்க இந்த சமச் சூழல் தேவை. புளியில் அமிலத் தன்மை இருக்கிறது. புளி சேர்த்தக் குழம்பில் அமிலக் காரச் சமநிலை மாறி, அமிலத் தன்மை மிஞ்சி விடும். இதனால் உணவுப் பொருளில் வளர்ந்து பெருகி குழம்பைக் கெட்டுப் போக வைக்கக் கூடிய நுண்ணுயிரிகளின் செயல்பாடு குறைந்து குழம்பு அதிகமான நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
குளிர் சாதனப் பெட்டிகள் இல்லாத காலங்களில் செய்த உணவை முடிந்த வரை கெட்டுப் போகாமல் காத்துக் கொள்ள இந்த புளி சேர்ப்பது பயன்பட்டது. சமைத்த மீதத்தை ஆறியதும் குளிரப் பெட்டியில் வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும் போது இந்தக் காரணம் அடிபட்டுப் போகிறது.
அடுத்த கேள்வி:
சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிக்கலாமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)