வியாழன், மார்ச் 03, 2011

நாகை / ராமேஸ்வரம் பயண நோக்கங்கள்

தமிழகத்து மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இருந்து வரும் அச்சுறுத்தல்களை நீக்க
  1. 30 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய, கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடர்ந்து தண்டனை அளிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு கொடுக்க வேண்டும்.
  3. கச்சத் தீவு மற்றும் சுற்றிய கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்க வேண்டும். 
மார்ச் 4, 5, 6, 7 தேதிகளில் தமிழ் இணையப் பயனர்கள் மீனவர்கள் கிராமங்களுக்குப் போய்
  1. மீனவர்களைச் சந்தித்து பிரச்சனை குறித்த விபரங்களை திரட்டி, வலைப்பதிவுகளாகவும், டுவீட்டுகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் இணையத்தில் வெளியிடுதல்.
  2. இணையத்தில் தமிழர்கள் மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை அம்மக்களுக்கு தெரியப்படுத்துதல்.
  3. ஆர்வமும் விருப்பமும் இருக்கும் மீனவ இளைஞர்களுக்கு இணையம், வலைப்பதிவு, டுவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுப்பது. தமிழில் தட்டச்சவும் இணையத்தைப் பயன்படுத்தவும் அறிமுகம் செய்வது.
இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட இணையப் பயனர்கள் 9884070556 என்ற எண்ணில் தொடர்பு கொள்வும்.

அடுத்த நான்கு நாட்களில் டுவிட்டரிலும், வலைப்பதிவுகளிலும், ஃபேஸ்புக்கிலும், கூகுள் பஸ்சிலும் மீனவர் தாக்கப்படுவதைக் குறித்த தகவல்களை நம்மால் முடிந்த அளவுக்கு பரவலாக்குவோம்.

இதுவரை கலந்து கொள்வதாக உறுதி செய்திருப்பவர்கள் :
1. ரோசா வசந்த், சென்னை
2. உண்மைத் தமிழன், சென்னை
3. நாச்சியப்பா, சென்னை

4. நாகை சிவா, நாகப்பட்டினம்
5. பாபு, நாகப்பட்டினம்

6. அபி அப்பா, மாயவரம்
7. சாந்தப்பன், திருவாரூர்

8. டிபிசிடி, பெங்களூர்
9. பிரேம் ஆனந்த் (விருப்பம் தெரிவித்தார், தொடர்பு கொள்ளவில்லை)

10. சரண் மற்றும் அவரது 3 நண்பர்கள், சிதம்பரம்

கருத்துகள் இல்லை: