சனி, பிப்ரவரி 03, 2007

female verbal molestation

அழுக்கு மனங்கள்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் வன்முறையை அவிழ்த்து விடுவது பலவீனத்தைக் காட்டுகிறது. வன்முறை, கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்துதல் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் காட்டுகிறது.

ஒரு பெண் பதிவரிடமிருந்து வந்த மடல் கீழே தரப்பட்டுள்ளது. அவரது பெயரைக் குறிப்பிடவில்லை.

சில சொற்களை மட்டும் (தேடல் இயந்திரங்களுக்காக) நீக்கியுள்ளேன். படித்து தலை குனிவோம்.

QUOTE

Dear friends,

I have had enough. I have been patient, indifferent and indirect in showing my repulsion to this kind of female molestation in our tamil manam blog world. But nobody is doing anything about it.

People are trying to protect each other even though they are aware of the extent of nastiness that these guys are capable of. I want action. If we dont keep our own house clean, who else will?

I want this guy to be questioned. I want everybody to know about these guys.
I want women molestation to stop in tamil blogs.
I believe it is not too much to ask.

I am forwardin you a nasty email content. I am sorry to send this to you.

I have had four emails.
I have had plenty of comments from this exact same fellow.

I want you to do something. Anything. Just lets show that we are not ashamed.

I am absolutely not ashamed of this going public. I want this guy to be put in front of public.
I want him to stop it. I want all his friends to stop this nonsense.

Tamilmanam is a wonderful place with a lot of wonderful people.
I think its just 0.1% who are this crazy.

PLEASE DO SOMETHING. Yes read the nasty attachement.
If you want to figure out the IP address tell me how else I can forward it to you.
I am not naming anybody. But its too easy a guess, or somebody is abusing this too easy to guess person. I have no idea

best,
your colleague at tamilmanam

Note: forwarded message attached.

Looking for earth-friendly autos?
Browse Top Cars by "Green Rating" at Yahoo! Autos' Green Center.

---------- Forwarded message ----------
From: "samuga sevai"
To:
Date: Wed, 31 Jan 2007 17:34:57 +0800
Subject: helloooo

_____யியும் ____யும் தவிர வேற எதுவுமே தெரியாத அரிப்பெடுத்த தெவ்டியாடி நீ.
பழுக்கக் காய்ச்சின இரும்பு ராட எடுத்து உன் ___யில செருகிட்டா போதும். தெளிவா ஆயிடுவ.


உன் ரெண்டாவது(?) புருஷன் prax அவ்ளோ wimp -பா அந்த நாய் ?

உனக்கெல்லாம் 32க்கு மேல கொழந்தையும் பொறக்காது, ஒரு கொரங்கும் பொறக்காது. அந்த கம்னாட்டி எதுக்குதான் வாழரானோ.

பொறந்தாலும் அது தெவ்டியாவாதான் போகும் - அது ஒன்னும் தப்பில்ல - இருந்தாலும் உன் புருஷனே உம் பொண்ண காசு கொடுத்து _____. That'll be interesting,no?

27 கருத்துகள்:

Tulsi சொன்னது…

ரொம்ப அசிங்கமாவும் அவமானமாவும்
நினைக்கவச்ச அந்த மடல் எனக்கும் வந்துச்சு சிவா.

இந்த மாதிரி கெட்ட குணம் கொண்ட மனுஷங்களைப் பார்க்கும்போது வாழ்க்கையே வெறுத்துப்போகுது.

ச்சீ......ரொம்ப அழுக்கு மனசு.

பெயரில்லா சொன்னது…

வழக்கமான போலி டோண்டுவா?

பாதிக்கப்பட்டவர்

வடுவூர் குமார் சொன்னது…

இதைப்போல் என்னிடமும் ஒரு 15 இருக்கிறது ஆனால் அது ஆண் மகனுக்கு ஏற்றவை.
பெண்களே!!
இதைப்பற்றி கவலைப்படாமல் கையில் சு(த்)ட்டி கொண்டு ஒரு வெட்டு வெட்டி,தூக்கிப்போட்டுட்டு அடுத்த பதிவை எழுதுங்க.
என்ன பன்னுவது?வாழ்ந்த நிலை,வளர்த்த/வளர்ந்த நிலை,தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்க்கு கொடுக்க மறந்த மரியாதை நிலையில் அந்த 0.1% இருக்கிறார்கள்.
இது பொது இடம் என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
இவர்களுடன் வாழ/எழுத கற்றுக்கொள்ளவேண்டும்.

BadNewsIndia சொன்னது…

வாழ்ந்த/வளர்த்த விதம், நண்பர்கள், தாய்/தந்தை/பாட்டி/தாத்தாவின் 'ஜீன்' - இதில் ஏதோ ஒன்று குளறுபடி ஆனாலும், இந்த வக்கிர அழுக்கு மனம் உண்டாகும்.

பாதிக்கப்படுபவர்கள், இவர்களை ஒதுக்கி விட்டு உங்கள் பணியை தொடரலாம். ஆனால், அப்படி அலட்சியமாய் விடக் கூடாது. நம் இல்லத்தை நாம் தான் துப்புரவாக வைத்திருக்க வேண்டும். இதைக் கூட செய்யவில்லை என்றால், நாம் எங்கே நாட்டில் நடக்கும் நிஜப் பிரச்சனையை கையாளப்போகிறோம்.

பாதிக்கப்படுபவர்கள், அவரவர் city cyber-crime காவல் துறையிடம் முறையிட்டு, அவர்கள் சொல்லித் தருவது போல் 'பொறி' வைத்து இந்த ஜந்துக்களை பிடிக்க உதவலாம்.

direct email வரும் இந்த அசிங்கங்களை சுலபமாய் trace செய்யலாம். பின்னூட்டமாய் வரும் அசிங்கங்களும், அந்தந்த ப்ளாக் நிறுவனத்தின் துணை கொண்டு பிடிக்கலாம்.

நான் ஏற்கனவே சில 'ஜந்துக்களை' பற்றி கொடுத்துள்ள புகாருக்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று புகார் கொடுத்தால் நாளை விடை கிடைக்காது. பொறி வைத்து மெதுவாய் செயல் படுவார்கள். 'பொறுத்திருங்கள்'.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மடல் வெளியிட்டது முதல் கட்டம்!

நன்றி!

மா சிவகுமார் சொன்னது…

துளசி அக்கா,

இப்படிப் பட்ட மனிதர்கள் மிகச் சிறுபான்மையாகவே இருக்கும் போது, அவர்களை அடையாளம் கண்டு, அவர்களது குறைகளை அடையாளம் கண்டு சரி செய்ய முடிந்தால் இனிமேலாவது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

அனானி,

அடுத்தவர்களை வருந்த வைத்துப் பார்ப்பதில் ஏதோ நிறைவு பெறுபவர் போலிருக்கிறது. யார் என்று தெரியவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் குமார்,

சென்னை பேருந்துகளில் பெண்களைச் சீண்டும் அதே வீரம்தான் இங்கும் தெரிகிறது இல்லையா! இத்தகைய செயல்களுக்கான தூண்டுதல்கள் என்ன என்று என்னாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

badnewsindia,

சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை அறிந்து மகிழ்ச்சி. இருந்தும், ஏன் இப்படி நடக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை மனம் மாற்றுவதுதான் நீண்ட காலத் தீர்வாக அமைய முடியும்.

அன்புடன்,

மா சிவகுமார்

Hariharan # 03985177737685368452 சொன்னது…

சிவா,

எனக்கு முற்றிலும் புரியாதது இவர்களது செய்கை. இப்படியான மடல்கள் ஏராளம் எனக்கு வந்திருக்கிறது. இவர்கள் பின்பற்றும் ஐடியாலஜியால் வரும் வினை இது என்பது எனது கருத்து.


பெரும்பாலும் நான் ஈவெரா, கருணாநிதி பற்றி விமர்சனமாக எழுதும் போதும், வேதம், இந்துமதம் என்று எழுதும் போதும் இந்தமாதிரியான கீழ்த்தரமாக தமிழ்த்தாயே வெட்கித் தலைகுனியும் படியான அழுகல் தமிழில் மடல்கள் எனக்கு வருவது வாடிக்கை.

இவர்களது மித மிஞ்சிய அரசியல் சார்புநிலை என நான் கருதுகிறேன்.

என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் இங்கு.

சென்ஷி சொன்னது…

இதை விட கொடுமையான பதிவுகள் எனக்கும் வந்துள்ளன. கொடுமையாய் அப்போது நான் தமிழ்மணத்திற்கு புதிது. அதிலும் பின்னூட்ட மட்டுறுத்தல் எப்படி என்றும் தெரியாது. எனக்கிருந்த சிறு கணிணி அறிவைக் கொண்டு மட்டுறுத்தல் செய்தேன். அந்த பதிவில் வந்திருந்த பின்னூட்டத்தையும் அழித்தேன்.

ஆனால் நான் அனுபவித்த அந்த பல மணி நேர மன உளைச்சல் அவனுக்கும் ஏற்படுமா என்று தெரியவில்லை.

இதைப் போன்ற அனானிகளுக்கு மிகக் கண்டனங்களுடன்

சென்ஷி

தருமி சொன்னது…

முதல்முறை எனக்கு வந்த போது விக்கித்துப் போனேன். எப்படி முடிகிறது இப்படி ஒன்றை எழுதுவதற்கு, அதுவும் ஒரு பெண்ணுக்கு...

பெயரில்லா சொன்னது…

எனது கண்டனங்களையும் இங்கு பதிகிறேன்...

நானும் இந்த மாதிரி மடல்களை எதிர்கொண்டிருக்கிறேன்......ஆனால் அது ஆண்களுக்கானவை.....என்ன செய்வது ..வெளியில் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்து கொண்டு இருந்தாலும், முகத்தை மறைத்துக் கொண்டு மன வக்ரங்களை வெளிப்பாடுத்துகிறார்கள்......

நெல்லை சிவா சொன்னது…

மிக்க வெட்கப்பட வேண்டிய விசயம், நல்ல விசயங்களுக்குப் பயன்பட வேண்டியவைகள், தீய சக்திகளுக்கும் உபயோகப் பட்டுக் கொண்டிருக்கின்றது. சொல்லித்திருத்த முடியாத மாக்கள் இவர்கள்!
திறந்த இந்த இணைய உலகில், இது போல ஒருவர் போனால், இன்னொருவர் வருவார்,
இம்மாதிரி வசவுகளில், மனம் புண்பட்டு திசைதிரும்பாமல், அசட்டை செய்து, பணி தொடரச் சொல்லுங்கள், அவர்களை.

பெயரில்லா சொன்னது…

ஹரிஹரன் சொன்னது போல் இது கருத்து வேறுபாடால் வந்த காழ்ப்புணர்ச்சியில் / பொறாமையில் எழுதப்படும் வரும் மடல்களே.
அந்தப் பதிவர் கொஞ்சம் வலையுலகில் பிரபலமானவரென்றால் கேட்க்கவே வேண்டாம்.
ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போல அதிகம் அறியப்படாத அல்லது ஆன்மீகம் / அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதாத அப்படிப்பட்ட பின்னூட்டம் இடாத பதிவர்களுக்கு இது போல் ஆபாச பின்னூட்டமோ மடல்களோ வருவதில்லை.
இதுவும் ஒரு வகையான கருத்து வன்முறையன்றி வேறல்ல.

இதை மறுதலிக்க எனக்கு தெரிந்த சில யோசனைகள்.

1.இப்படிப்பட்டவை பின்னூட்டமாக வரும் பொழுது அதை பிரசுரிக்காதது
மட்டுமன்றி அது போல் ஒன்று வந்ததாகவே காட்டிக் கொள்ளாதீர்கள்.
தான் அனுப்பிய ஆபாசம் போய் சேர்ந்ததா இல்லையா என தெரியாமலே அந்த நபர் தலையை
பிய்த்துக் கொள்ளட்டும்.எதிர்வினை இல்லாது அவனால் தொடர்ந்து இதை செய்ய முடியாது.

2.முதல் சில வரிகளைப் படித்த பின் பினூட்டம் அல்லது மடல் இந்த வகையானது என்று தெரிந்த மாத்திரத்திலேயா முழுவதும்
படிக்காமல் டெலிட் செய்து விடுங்கள். என்ன எழுதியிருந்தது என்பது தெரியாத வரை உங்களுக்கு எந்த மன உளைச்சலும் ஏற்படாது.( அதாவது அப்படிப்பட்ட கடிதங்களை நேரம் செலவழித்து முழுவதும் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்.:))

3.இதை ஒரு விஷயமாக வலையில் பிரஸ்தாபிக்காதீர்கள்

அனைவரும் தான் எழுதுவதை படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிந்து ஆனந்தப் படுவதே
இது போன்ற நபர்களின் வெற்றி.அந்த சந்தோஷத்தை அவர்களுக்கு தராதீர்கள்.Simply Ignore Them

இப்படி செய்வதால் இந்தக் குள்ள நரிகள் பதுங்கியிருக்க முடியாமல் புதரிலிருந்து தானாகவே தலையை நீட்டி பிடிபடும்.

பெயரில்லா சொன்னது…

ம.சிவகுமார் ,

முதலில் உங்கள் பின்னூட்ட மட்டுறுத்தும் வசதியை ஆக்டிவேட் செய்யுங்கள்.

பின்னூட்டங்களை மட்டுறுத்தி வெளியிடவும்

பெயரில்லா சொன்னது…

இதில் மிகக் கொடுமை என்னவென்றால் தமிழ்மணத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு வரும் இத்தகைய தாக்குதல். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் "என்ன கருமம்டா சாமி"னு தமிழ்மணத்திற்கே முழுக்கு போட்டுவிடுகிறார்கள்.

இதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒரு ப்ளாக்கை திரட்டியில் சேர்க்கும் போது என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை முகப்பிலெயே தமிழ்மணம் stickyயாக வைக்க வேண்டும். மேலும் அதை முதலில் சேர்பவர்களுக்கு மின் அஞ்சலும் செய்யவேண்டும்.

எனக்கு தெரிந்த தற்காப்புகள்.
- உண்மையான பெயரில் எழுதாதீர்கள்.
- e-mail idயை ப்ளாகரில் மறைத்து வையுங்கள்.
- தங்கள் ஊர், உற்றார் உறவினர், மனைவி, மக்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை தெரிவிக்காதீர்கள்.
- தங்கள் புகைப்படத்தைப் போடதீர்கள்.
- கமெண்ட் மாடரேஷன் கட்டாயம் செய்யவும்.
- இணைய உலகம் நல்ல மனம் உடையது என்ற மனப்பான்மையை தூக்கியெறியுங்கள். இன்றைக்கு நல்லவர் போல் எழுதும் ஒருவர் போலியான பெயரில் அவதூறாக எழுதுபவராகக் கூட இருக்கலாம்.

முன்பு ஒரு முறை இவர் தான் போலி என்று ஒருவரை கைகாட்டி தாக்கினர் பலர். ஆனால் அவரோ தன்னுடைய ப்ளாகில் தான் அப்படி எழுதியது உண்மை தான் எனவும். ஆனால் அதே முறையில் புனித பிம்பமாக வலம் வரும் பலர் அவரைப் போல தரக்குறைவாக போலியாக எழுதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு பல புலிகள் பசுத்தோல் போர்த்தி உள்ளன.

மணியன் சொன்னது…

இத்தகைய அழுக்கு மனங்களின் வெளிப்பாடு இணையத் தமிழின் ஆரம்பங்களிலிருந்தே வளர்ந்து வருகிறது. வலையுலகம் தமிழரிடையே பரவும் வேகத்தில் இந்த மொழி வன்முறையும் பரவிவருகிறது. ஒரு அனானியின் கணக்கில் அவரவர் தங்கள் மன விகாரங்களுக்கு வடிகால் தேடுவதாகவும் தெரிகிறது. ஓராண்டுக்கும் மேலாக இதுபற்றி நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் என்று பலதரப்பட்டவர் ஆசைப்பட்டாலும் B4க்கும் B6க்கும் எல்லை தகராறுகள் வரும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் உலகளாவிய இணையத்தில் தீயவரை பிடித்து தண்டனை வழங்குவர் என எதிர்பார்ப்பது கடினமே.

'திருடனாய்ப் பார்த்து திருந்தும்வரை ' இந்த மடல்களையும் பதிவுகளையும் மனதாலும்செய்கையாலும் புறம் தள்ள வேண்டியதுதான் ஒரே வழி.

ஜோ/Joe சொன்னது…

//இப்படிப்பட்டவை பின்னூட்டமாக வரும் பொழுது அதை பிரசுரிக்காதது
மட்டுமன்றி அது போல் ஒன்று வந்ததாகவே காட்டிக் கொள்ளாதீர்கள்.
தான் அனுப்பிய ஆபாசம் போய் சேர்ந்ததா இல்லையா என தெரியாமலே அந்த நபர் தலையை
பிய்த்துக் கொள்ளட்டும்.எதிர்வினை இல்லாது அவனால் தொடர்ந்து இதை செய்ய முடியாது.

2.முதல் சில வரிகளைப் படித்த பின் பினூட்டம் அல்லது மடல் இந்த வகையானது என்று தெரிந்த மாத்திரத்திலேயா முழுவதும்
படிக்காமல் டெலிட் செய்து விடுங்கள். என்ன எழுதியிருந்தது என்பது தெரியாத வரை உங்களுக்கு எந்த மன உளைச்சலும் ஏற்படாது.( அதாவது அப்படிப்பட்ட கடிதங்களை நேரம் செலவழித்து முழுவதும் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளாதீர்கள்.:))

3.இதை ஒரு விஷயமாக வலையில் பிரஸ்தாபிக்காதீர்கள்

அனைவரும் தான் எழுதுவதை படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று தெரிந்து ஆனந்தப் படுவதே
இது போன்ற நபர்களின் வெற்றி.அந்த சந்தோஷத்தை அவர்களுக்கு தராதீர்கள்.Simply Ignore Them
//

இவற்றை நான் வழிமொழிகிறேன்.

நாமக்கல் சிபி சொன்னது…

//'திருடனாய்ப் பார்த்து திருந்தும்வரை ' இந்த மடல்களையும் பதிவுகளையும் மனதாலும்செய்கையாலும் புறம் தள்ள வேண்டியதுதான் ஒரே வழி.
//

வழிமொழிகிறேன்.
அதே சமயம் நம் அனைவரது எதிர்ப்பையும் பதிவு செய்ய இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வோம்!

கால்கரி சிவா சொன்னது…

சிவகுமார், இவர்களுக்கு வெற்றி என்பது இந்த வசைகளுக்கு பயந்து ஓடுவது தான்.

இவர்கள் கண்டிக்கப் படவேண்டும் அதே நேரம் இவர்களை புறம்தள்ளி நாம் முன் செல்ல வேண்டும்.

கெட்டவர்கள் என்றைக்குமே ஜெயித்ததில்லை

VSK சொன்னது…

அனேகமாக இது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத வலைப்பதிவரே இருக்க முடியாது என நினைக்கிறேன்.

சொல்ல வேண்டிய ஆலோசனைகளை எல்லாரும் சொல்லி இருக்கிறார்கள் ஏற்கெனவே!

நான் இட்ட ஒரு சில பின்னூட்டங்களை அப்படியே 'காப்பி' அடித்து அனானியாக சில பதிவுகளில் இடும் விஷமக்காரர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது!?
:))

இது தற்போது எனக்கு நடந்துவரும் ஒரு நிகழ்வு!

படிப்பவர்களுக்கு நான் இட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இது உருவாக்குகிறது!

மிகவும் தெரிந்த ஒருவரால்தான் இவ்வாறு செய்ய முடியும் என நம்புகிறேன்.

அப்படியானால்.... இது மிகவும் ஆபத்தான போக்கு.

பதிவெழுதுவதையே கூட விட்டுவிடலாம் என பல நேரங்களில் தோன்றுகிறது!

எனது கண்டனங்களை இங்கு பதிகிறேன்.

எஸ்.கே

thiru சொன்னது…

சிவகுமார்,

இப்படி வக்கிர பின்னூட்டங்கள் இடுபவர்கள் யாராக இருப்பினும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். பின்னூட்டங்களில் நேர்மையை கடைபிடிக்கிறார்களா தமிழ்வலைப்பதிவாளர்கள் என்பது கேள்வி. பல பெயர்களில் திட்டுவதும், முகமிலியாக வக்கிர பின்னூட்டம் இடுவதும் என கேவலமான நிலைக்கு தங்களையே தள்ளுகிற இவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். இந்த செயல்கள் கண்டிக்கப்படவேண்டியது!

இது போலியா என ஒருவர் கேட்டிருக்கிறார். போலி என முடிவுக்கு வர முடியவில்லை. காரணம், கீதை பற்றிய எனது பதிவிற்கு வந்த சில பின்னூட்டங்கள். மிரட்டல்களும், இங்கே நீங்கள் பதிவு செய்துள்ள பின்னூட்டத்தையும் மிஞ்சும் வக்கிரமான மொழியில் வந்த அனானி பின்னூட்டமும் இதற்கு சாட்சி. "இதுகளை" நான் மனித இனத்தில் பார்ப்பதில்லை என்பதால் பொருட்படுத்தவில்லை.

பெண் பதிவர்கள் குறைவாக இருக்கும் ஒரு சமுதாய அமைப்பில் பெண்களை குறிவைத்து தாக்கும் இந்த வக்கிரத்தை கண்டிக்கிறேன்!

Santhosh சொன்னது…

இது போன்ற மனிதர்களை பற்றி அறிந்தால் மறைமுகமாகவோ அல்லது நேராகவும் விளக்கம் கேட்கலாம். இது போன்ற நாய்களின் முகங்களை பொதுவில் போட்டு உடைக்க வேண்டும். இது போன்றவர்களுக்கு நேரடையாகவும் மறைமுகமாகவும் சிலர் ஆதரவு தெரிவிப்பது மிகவும் வருந்தத்தக்கதே :(..

tamizhppiriyan சொன்னது…

எப்படி, இப்படி எல்லாம் எழுத மனம் வருகிறதோ!கடவுளே...நடவடிக்கை எடுக்க வழி இருப்பின் தயவு செய்து செய்யுங்கள்.இவர்களை இப்படியே விடக் கூடாது.

சிறில் அலெக்ஸ் சொன்னது…

இந்த மடல் எனக்கும் வந்தது. எனக்கும் சில பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன..

இது குறித்த கூட்டு முயற்சி எதுவானாலும் அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.

இப்படி செய்பவர்கள் தாங்களாகவே திருந்துவது நல்லது.

பெயரில்லா சொன்னது…

இதை எழுதியவனை எனக்கு நன்றாகத் தெரீயும், அவன் ஐ பி தெரியும். போலீசில் கம்ப்ளெயிண்டும் கொடுத்துள்ளோம். மலேசிய ஐ பி ப்ரொவைடருக்கும் கொத்துத்துள்ளோம். அது சரி எல்லோரும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று வெற்று வாய்ச் சவடால் விடுகிறீர்களே, அனைவரும் சேர்ந்து ஒரு பெட்டிஷன் தயார் பண்ணி என்னிடம் இருக்கும் ஐ பி ஆதரங்களை அளித்து தமிழ் நாட்டு போலீஸுக்கு ஒரு பெட்டிஷன் ஏன் கொடுக்கக் கூடாது ? அப்படி ஒரு பெட்டிஷன் எழுதினால் கையெழுத்துப் போட இங்கு எத்தனை பேர் ரெடி ? பாதி பேர் காணாமல் போய் விடுவீர்கள். இங்கு வெற்றுச் சவடால் வீசும் பல பதிவர்கள் பெண் பதிவர்கள் உட்பட அவனிடம் தனி மடலில் கெஞ்சி தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள்தான்.

ஒரு பொது பெட்டிஷன் ரெடி பண்ணி அதனை போலீஸிடம் கொடுத்து அவர்களை நடவடிக்கை எடுக்க உங்களில் யாருக்கும் தைரியம் உள்ளதா ? இருந்தால் அப்படி துணிவு இருப்பவர் அனைவரும் இங்கு தங்கள் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும். அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லவும், அதற்கு தைரியம் இல்லாதவர்கள் தயவு செய்து சும்மா வீராப்புப் பேசாமல் ஒதுங்கவும்ம். எத்தனை பேர் துணிந்து இங்கு வருகிறீர்கள் என்பதை பார்த்த பின்பு நான் மீண்டும் இங்கு வருகிறேன்.

இந்த பெட்டிஷனை பெரிய மனிதரான ஒரு தருமியோ அல்லது மூத்த பதிவரான ஒரு பத்ரியோ தயார் செய்யலாம். ஒரு 100 பதிவர்களாவது கையெழுத்துப் போட வேண்டும், தொடர்ந்து ஃபாலோ அப் செய்ய வேண்டும். செய்ய உங்களில் எத்தனை பேருக்குத் துணிவிருக்கிறது ? 100 பேர் வேண்டாம் ஒரு பத்து பேராவது துணிந்து வருவீர்களாயின் நான் என்னைப் பற்றிய தகவல்களையும் என்னிடம் உள்ள தகவல்களையும் நான் நம்பும் பதிவர்களான கால்கரி சிவா, பி கே எஸ், பத்ரி, தருமி போன்றவர்களிடம் தரத் தயாராக இருக்கிறேன். போலீஸுக்கு நான் தனி நபராகக் கொடுத்த பெட்டிஷனுக்கு ஆக்ஷன் ஏதும் இல்லை. ஆகவே ஒரு 100 பதிவர்கள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து முழுப் பிரஷர் கொடுத்தால் ஏதும் நடவடிக்கை எடுக்கப் படலாம்.

நான் ரெடி, உங்களில் யார் யார் ரெடி, சும்மா வெட்டிப் பேச்சுக்கள் வேண்டாம் நடவடிக்கை தேவை . உங்கள் பதிலைப் பொறுத்து என் பதில் வரும். என்னிடம் உள்ள தகவல்களைப் பொதுவில் வைக்க மாட்டேன் ஆனால் மேற்குறிப்பிட்ட பதிவர்களிடம் அளிக்கத் தயாராக உள்ளேன்.

எங்கே பார்ப்போம் எத்தனை பேர் வருகிறீர்கள் என்று ?

BadNewsIndia சொன்னது…

Count me in.

இதைப் பற்றி தனி பதிவாக எழுதி ஆள் சேர்க்கலாமா?
என்னிடமும் சில ஆதாரங்கள் இருக்கிறது.
எல்லோரிடமும் உள்ளதை சேர்த்து கொடுத்தால், சுலபமாக கண்டறியலாம்.

பொது மன்னிப்பு கேட்கவும் அந்த 'அனானி'க்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

????