வியாழன், ஜூலை 29, 2010

கேள்விக்குப் பதில் கிடைக்குமா? - 2

சுமங்கலி கேபிள் விஷன் என்ற நிறுவனம் தனது ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்த அரசு நிறுவனத்தின் சொத்துக்களை சட்ட விரோதமாக அழித்தது.

சுமங்கலி கேபிள் டிவி நிறுவனம், அரசு கேபிள் நிறுவனத்தின் (2008ம் ஆண்டில்) ஃபைபர் ஆப்டிக் கம்பி கட்டமைப்பை அழிக்கும் வேலையை பரவலாக செய்து வந்தது. சுமங்கலி கேபிள் விஷன், தமிழ் நாட்டில் கேபிள் தொலைக்காட்சி வினியோகத்தில் தனது ஏகபோக உரிமையை தொடர்ந்து நிலைநாட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷனின் கிரிமினல் செயல்களும் அரசுச் சொத்தை அழிக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து வந்த ஒரு மாநில அமைச்சரின் பங்கும் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர்களை கிரிமினல் சட்டங்களின் கீழ் கைது செய்யும்படி பரிந்துரையும் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டது.

'கண்கள் பனித்து இதயம் இனித்த' பிறகு இப்போது அரசு கேபிள் நிறுவனம் கிட்டத்தட்ட உயிரை விட்டு விட்டது. சுமங்கலி கேபிள் விஷனின் கிரிமினல் செயல்களும் அதனால் அழிக்கப்பட்ட அரசு சொத்துக்களும் கேட்பாரற்றுப் போய் விட்டன.

அரசு கேபிள் நிறுவனம் என்ன நிலைமையில் இருக்கிறது? அதில் எவ்வளவு மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டது? சுமங்கலி கேபிள் விஷனுக்கு எதிராக அரசு அதிகாரிகள் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன?

==========================
சமீபத்தில் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு, தமிழக அரசால் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர் சந்தித்த அரசியல் நெருக்கடிகள், ஊழல்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்.

கருத்துகள் இல்லை: