புதன், அக்டோபர் 10, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் - 2

சீனாவில்
  • முடியாட்சி முடிந்து 1911ல் குடியரசு மலர்கிறது.
  • அதற்கு பின்னர் உள்நாட்டுப் போர், அன்னிய ஆதிக்கம் எதிர்ப்பு
  • இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளிலும் ஆண்டுகளில் கம்யூனிஸ்டு செம்படைக்கும் தேசிய மக்கள் கட்சி (குவமின்தாங்) யின் ஆட்சியாளர்களுக்கும் கடுமையான சண்டை
  • கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று 1949ல் ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.
  • குவமின்தாங் ஆட்சியாளர்கள் தாய்வான் தீவில் குடியேறி அமெரிக்காவின் ஆதரவுடன் தாங்கள்தான் உண்மையான சீனா என்று குட்டித் தீவுக்குள் அரசமைத்துக் கொள்கிறார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை, கம்யூனிஸ்டு கட்சியின் சர்வாதிகாரம் என்ற அடிப்படையில்தான் சீனாவில் அரசியல் பொருளாதாரம் நடந்து வருகிறது.
  • கட்சி, ஆட்சி, தொழில் நிறுவனங்கள் எல்லாவற்றிலும் கட்சி உறுப்பினர்கள் / தலைவர்களின் ஆதிக்கம்தான்.
  • தனியார் சொத்துரிமை கிடையாது.
  • எல்லா நிலங்களும், எல்லா வளங்களும் சமூகத்துக்கு உரிமையானவை.
  • மத்தியத் திட்டக் குழு வகுத்தபடி பயிர் செய்ய வேண்டும் வரும் விளைச்சலை விதிக்கப்பட்ட விலைக்கு விற்று விதிக்கப்பட்ட வருமானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எப்படி தனி மனிதருக்கு உழைக்க ஆர்வம் இருக்கும்? கல்வி முறை எப்படி இருந்தது? பணம் எப்படிப் பயன்பட்டது? என்ற கேள்விகளை இப்போதைக்கு தள்ளிப் போட்டு விட்டு இந்த முறையின் விளைவுகளைப் பார்க்கலாம்.

பற்றாக்குறைகள், பஞ்சம், வறுமை என்று ஒவ்வொரு இக்கட்டாகத் தள்ளாடி வந்து கொண்டிருந்தது செஞ்சீனா. 1970களில் அமெரிக்கா முதலான மேல் நாடுகள் கம்யூனிஸ்டு அரசை அங்கீகரிக்க ஆரம்பித்தன. தாய்வானில் ஒதுங்கியிருந்து குவமின்தாங் அரசுதான் சீனா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் உண்மையான சீன அரசை ஏற்றுக் கொண்டு அரசு முறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

உள்நாட்டு அரசியலிலும் சேர்மன் மாவோவின் காலம் முடிந்து மக்களுக்கு மாற்றம் தேவைப்பட்டது. கம்யூனிசம் என்ற கனவைப் பற்றிப் பேசியே கவலைகளை மறக்கச் செய்யும் வித்தைகளின் சரக்கு தீர்ந்து விட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்த வேண்டும், வெளி நாட்டு முதலீடுகளை அனுமதிக்க வேண்டும், சந்தைப் பொருளாதாரத்தை முயன்று பார்க்க வேண்டும் என்று தேவைகள் ஏற்பட்டன.

2 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

மா.சி,
பாதில நிக்கிறா போல இருக்கே ,முழுசா சொல்லிடுங்க அப்போ தான் எனக்கு எதாவது சொல்ல தோனும்!

மா சிவகுமார் சொன்னது…

சொல்லிடுறேன் வவ்வால். :-)

அன்புடன்,
மா சிவகுமார்