ஞாயிறு, டிசம்பர் 24, 2006

ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன்.
  1. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் இன்னும் பொருத்தமானவையா என்று தெரிந்தவர்கள் உறுதி செய்யவும்.
  2. விருப்பமுள்ளவர்கள் இதை அச்செடுத்து தங்கள் உறவினர், நண்பர்கள் வட்டத்துக்குள் மட்டுமாவது கையெழுத்து வாங்கவும்.

    (தமிழில் இரண்டு பக்கம் - ஒரே தாளின் இரு புறமும், ஆங்கிலத்தின் இரண்டு பக்கங்கள் - ஒரே தாளின் இரு புறமும், கையெழுத்துப் பக்கங்கள் தேவைக்கேற்ப - பக்கத்துக்கு பன்னிரண்டு கையெழுத்துக்கள் பெற்று, ஒவ்வொரு பக்கத்துக்கும் வரிசை எண் கொடுத்து விடுங்கள்)
  • இதன் மூலம் யாழ்ப்பாணம் பற்றிய விழிப்புணர்வு வளரும் என்பது உடனடி பலன்.
  • மேல் நடவடிக்கையாக சேகரித்த கையெழுத்துப் பக்கங்களை ஒன்று சேர்த்து திரு அவர்களுக்கு அனுப்பி ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் தமிழ்/ ஆங்கில வடிவங்கள் கீழே:

அன்புள்ள நண்பர்களே,

இந்த விண்ணப்பத்தில் உங்கள் கையெழுத்தைச் சேர்க்கவும். முழுவதும் படித்து இதன் விபரங்களைப் புரிந்து கொண்டு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் கையொப்பமிடவும்:

இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியின் முக்கிய நகரம் யாழ்ப்பாணம். அங்கு சுமார் ஆறு லட்சம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். 50,000 இலங்கை அரசின் சிங்கள ராணுவ வீரர்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாண தீபகற்பத்தை இலங்கைத் தீவின் மற்ற பகுதிகளோடு சேர்க்கும ஒரே சாலை A9 என்ற நெடுஞ்சாலை. இந்தச் சாலையின் வழியாகத்தான் எல்லாவிதமான சரக்குப் (உணவு, மருந்து, பிற பொருட்கள்) போக்குவரத்தும், மக்கள் போக்குவரத்தும் நடைபெற வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு இந்தச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தியதன் மூலம், யாழ்ப்பாண மக்களுக்கு வெளியுலகுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்து விட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் எல்லா பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களையும் அரசு மூடி விட்டது.

ஆறு லட்சம் மக்களுக்கு அத்தியாவசிய உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்க வழியில்லாமல் செய்து விட்டது அரசாங்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் பள்ளிக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரிகள் திறக்கக் காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களாலும், அரசுகளாலும் அனுப்பப்படும் உதவிப் பொருட்கள் அனைத்தும் ராணுவத்தின் மூலம் அனுப்பப்படுவதால், ராணுவத்தின் தேவைக்கே அவை பயன்படுத்தப்படுகின்றன. மீதியிருக்கும் பொருட்கள் உலகின் எங்கும் இல்லாத அளவு மிக உயர்ந்த விலையில் வெளிச் சந்தையில் விற்கப்படுகின்றன. சில பொருட்களின் விலைகள் வருமாறு:

தீப்பெட்டி - பெட்டி ரூ 30 (முந்தைய விலை ரூ 2)
அரிசி - கிலோ ரூ 180 (முந்தைய விலை ரூ 35)
சர்க்கரை - கிலோ ரூ 400 (முந்தைய விலை ரூ 60)
தேங்காய் - ஒன்று ரூ 90 (முந்தைய விலை ரூ 15)
தேங்காய் எண்ணெய் - லிட்டர் ரூ 450 (முந்தைய விலை ரூ 75)

மிளகாய் - கிலோ ரூ 480 (முந்தைய விலை ரூ 160)
புளி - கிலோ ரூ 150 (முந்தைய விலை ரூ 60)
தேயிலை - கிலோ ரூ 800 (முந்தைய விலை ரூ 300)
முட்டை - பெட்டி ரூ 55 (முந்தைய விலை ரூ 6)
பெட்ரோல் - லிட்டர் ரூ 650 (முந்தைய விலை ரூ 100)
டீசல் - லிட்டர் ரூ 150 (முந்தைய வலை ரூ 45)

நுண்ணுயிரிக் காய்ச்சல் வேகமாகப் பரவி, அதற்குத் தேவையான மருந்துகள் கூட கிடைக்காமல் இதுவரை பாதிக்கப்பட்ட 30,000க்கும் அதிகமான மக்கள் அவதியுறுகிறார்கள்.

A9 சாலை இயல்பான போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டால் இந்தத் துயரங்களில் பெரும் பகுதி நீக்கப்படலாம். இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முடிந்தால் இதனை நகலெடுத்து உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கையெழுத்து பெறும் வேலையை முடிந்தால் செய்யலாம். இதன் மூலம்,
6 லட்சம் மக்களுக்கு உணவு, மருந்து அடிப்படைத் தேவைகள் போய்ச் சேர,
1 லட்சம் மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தொடர
6000 மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் தொடர
நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்க

உங்கள் நடவடிக்கை உதவி புரியலாம்

இந்த விண்ணப்பத்தின் ஆங்கில வடிவம் இணையத்திலும் கையெழுத்துக்காக கிடைக்கிறது.
http://www.petitiononline.com/TAMEELAM/petition.html



Dear Friends,
Please sign the following petition. Please read till the end.

Jaffna is a place in the north of SriLanka, with a population of
approximately 6 lakh (all Tamils) and 50,000 soldiers of Srilankan
Army(all Sinhalese). A9 Road is the only road that connects Jaffna to
the mainland SriLanka. This is the road through which all kind of
transport (food, medicine, material, people)takes place. The Srilankan
government has closed this road a month back, depriving the Jaffna
people, access of anything outside Jaffna. The government has also
closed all the schools, colleges and government offices in Jaffna. 6
lakh people are deprived of food, medicine and other basic necessities.
More than 1 lakh school students are stopped from going to school. More
than 6000 college students await the reopening of the colleges. The
relief materials sent by all foreign NGOs and other countries are sent
only through the Srilankan Army and and distributed only by the
Srilankan and most of which is obviously consumed the Army itself. The
rest of the relief materials that comes out of the Army are sold out for
a very high price that wouldn't exist in any part of the world. A sample
of the cost of some essential goods:-

Match Box- Rs 30/box, (from Rs 2)
Rice:- Rs 180/Kg, (from Rs 35)
Sugar:- Rs 400/kg (from Rs.60)
Coconut:- Rs 90 (from Rs 15)
Coconut oil:- Rs 450/litre (from Rs 75)
Chilli :- Rs 480/kg(from Rs.160 )
Tamarind:- Rs 150/Kg (from Rs 60)
Tea:- Rs 800/Kg(from 300)
Egg:- Rs 55/unit from (Rs 6)
petrol:- Rs 650/litre (from Rs 100)
Diesel:- Rs 150/litre (from Rs 45)

Viral fever is rapidly spreading and so far 30,000 people have got
affected and they suffer without any medicine to even reduce their pain.

All these things to be brought to normalcy if the A9 road is opened for
the public. Please help the people of Jaffna by signing this petition.

http://www.petitiononline.com/TAMEELAM/petition.html

Also forward this email to all your friends,

If you forward, your wishes may or may not come true but you can
certainly help

6 lakh people to get food, medicine and other basic amenities
1 lakh students to continue school education
6000 students to continue their graduate studies
All the diseased to get medicine

4 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

//All the deceased to get medicine//

I think you meant the diseased. The deceased dont need any medicines! :-D

மா சிவகுமார் சொன்னது…

இலவச கொத்தனார்,

இங்கு சரி செய்து விட்டேன். PDFலும் மாற்றி விடுகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

மு.கார்த்திகேயன் சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

மா சிவகுமார் சொன்னது…

கார்த்திகேயன்,

புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. பல புதிய நட்புகளை உருவாக்கித் தந்த வலைப்பதிவுலகுக்கு என்னுடைய நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்