ஞாயிறு, டிசம்பர் 31, 2006

சாதி ஒழியத்தான் வேண்டுமா? -2

சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் திருமண உறவுகளைக் குறுக்கிக் கொள்வதால் என்ன நன்மைகள், என்ன தீமைகள்?

நன்மைகள்:
நம்மைப் போன்ற பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், சமயச் சடங்குகள் உடைய குடும்பத்தில் உறவு ஏற்படுத்துவது மூலம் திருமணத்துக்குப் பிறகான சேர்ந்து வாழ்தல் எளிதாக இருக்கும்.

தீமைகள்:
நெருங்கிய உறவுக்குள்ளே திருமண உறவு வைத்துக் கொள்வதால் மரபணுத் தேர்வுகள் குறைபாடுகளையே மிகைப்படுத்தி பிறக்கும் குழந்தைகளை குறைபாடுடையவர்களாகச் செய்து விடுகிறது என்பதை ஏற்றுக் கொண்டு படித்த குடும்பங்களில் அதைத் தவிர்த்து விடுகிறோம்.

அதையே சிறிதே பெரிய வட்டத்துக்குள் செய்வதுதான் சாதிக்குள்ளேயே திருமணம். மரபணுத் தேர்வுகளில் நன்மை தரும் பண்புகள் வருங்காலச் சந்ததியினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், தாயும் தந்தையும் வேறுபட்ட மரபணுக் கூறுகளைக் கொண்டிருத்தல் தேவை.

பல நூறு ஆண்டுகளாக சிறிய வட்டத்துக்குள் குறுக்கி நமது வளர்ச்சிக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம்.

தீர்வு:
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது, மனப் பொருத்தம், குடும்பப் பொருத்தம், ஏன் பணப் பொருத்தம் கூடப் பார்ப்பது தேவையாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே சாதி என்ற சின்ன வட்டத்துக்குள் தேர்வை ஒடுக்கிக் கொள்வது அறிவுடமையாகாது. சாதி என்ற கட்டுப்பாடு இல்லாமல் நமது உறவு வட்டங்களை பெரிதாக்கிக் கொள்வது சமூகத் தேவை.

சாதி ஒழிய வேண்டும் - 1
சாதி ஒழிய வேண்டும் - 2
சாதி ஒழியத்தான் வேண்டும் - 3

2 கருத்துகள்:

Chinook Singam சொன்னது…

நல்ல கருத்து

மா சிவகுமார் சொன்னது…

வணக்கம் சினூக் சிங்கம்,

உங்கள் வலைப்பூவில் இன்னும் நிறைய எழுத ஆரம்பியுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்