செவ்வாய், பிப்ரவரி 12, 2019

தின "மலத்தில்" முளைத்த "பட்டம்"

11 பிப்ரவரி தேதியிட்ட தினமலரில் மோடி திருப்பூரில் பேசியதை விட முக்கியமாக தி.மு.க கூட்டணியில் கலகம் மூட்டி விடும் குசும்பு வேலை தலைப்புச் செய்தியாக வந்திருந்தது.

'பா.ம.க-வுக்கு ஆதரவாக துரை முருகனும், எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும் வாதிடுகிறார்களாம், அவர்கள் வி.சி.க-வை எதிர்க்கிறார்களாம். பா.ம.க அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் வி.சி.க-வுக்கு ஒரு இடம் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம்' என்கிறார்களாம்.

மெட்ரோ ரயில் தொடக்க நிகழ்ச்சி, கிருஷ்ணா நதி நீர் வந்து சேர்ந்தது, விரும்பிய சேனல்களுக்கு 9 கோடி வாடிக்கையாளர் மாற்றம் என நேர்மறையான செய்திகளே முன் பக்கத்தை நிறைத்தன. தேவைக்கேற்ப தமது பத்திரிகையின் செய்தி வெளியிடும் Mode-ஐ மாற்றிக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. 'நாடாளுமன்ற தேர்தல் வரப் போகிறது, ஆளும் கட்சிகளுக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்' என்றால் 'எல்லாம் நன்றாக போகிறது' என்ற mood-ஐ உருவாக்க வேண்டும். இதுவே ஆளும் கட்சியாக தி.மு.க, காங்கிரஸ் இருந்தால் அவற்றை தோற்கடிக்க எதிர்மறை செய்திகள் வெளியிட வேண்டும். சரியான சாணக்கிய சைத்தான்கள்.

இதைத் தவிர, தி.மு.க மீது அவர் விமர்சனம், இவர் விமர்சனம், தி.மு.க போட்டியிட விரும்புபவர்களிடம் 2 கோடி கேட்கிறது என்று செய்தி. அ.தி.மு.க ஏதோ ஒற்றுமையின் கூடாரம் போலவும், சுத்த சுயம் பிரகாச அரசியல்வாதிகளால் நிரம்பியிருப்பது போலவும் அ.தி.மு.கவில் நடக்கும் பஞ்சாயத்துகள் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. எப்படி ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்பதற்கு எல்லா ஆளும் வர்க்க ஊடகங்களுக்கும் இந்த பார்ப்பன வர்த்தக பத்திரிகை ஒரு முன் உதாரணம்.

இந்த மலக்குழியில் நீந்தி போனால், இணைப்பாக "பட்டம்".

நல்ல தரமான அறிவியல் பூர்வமான தயாரிப்பு. ஆசிரியர் குழுவில் நமது யெஸ். பால பாரதி இருக்கிறார்.

"மறதி ஏன்" என்பது தொடர்பாக ஆய்வில் கலாச்சார நினைவாற்றல், செய்தித்தொடர்பு நினைவாற்றல் என்று இரண்டாக பிரித்து அவை எப்படி நேரம் போகப் போக குறைந்து செல்கின்றன என்று கிராஃப் போட்டு விளக்கியது ஒரு பக்கம்.

த.வி.வெங்கடேஸ்வரன் 4 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். 4-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு மாணவர்களின் கேள்விகள். மிக எளிமையான சந்தேகங்களை துல்லியமாக அறிவியல் ரீதியாக விடை சொல்கிறார். மரக்கதவுகள் மழை நாட்களில் மூட சிரமமாக இருப்பது ஏன், பொய் பற்கள் இயற்கை பற்களை விட சிறப்பாக செயல்படுமா, பூமி சுற்றாமல் இருந்தால் இரவில் நட்சத்திரங்களை பார்க்க முடியுமா?, பச்சோந்தி எப்படி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது என்று ஆரம்பித்து சிக்சர்கள் அடிக்கிறார்.

பள்ளிகளில் bullying பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்ப்பதற்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் ஆர்.வெங்கடேஷ் என்பவர் எழுதிய ஒரு பக்கக் கட்டுரை.

தமிழ் இலக்கணம், நன்னெறி கதைகள், வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள், எர்ன்ஸ்ட் ஹேக்கலின் மேற்கோள் கடைசிப் பக்கத்தில் என்று பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ், ஆசிரியர் குழுவில் இன்னும் பலரும்.

இத்தகைய அறிவியல் இணைப்பை வேத கால அறிவியலாக மாற்றுவதற்கு இந்த பார்ப்பன கும்பலுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? தமிழக மாணவர்கள் அதை நிராகரித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும் என்றாலும், அப்படி மாற்றுவதற்கான அதிகாரம் அவர்களிடம் இருப்பதை கவனத்தில் வைத்திருக்கத்தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை: