வெள்ளி, செப்டம்பர் 29, 2006

யாருக்காக?

சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பெரிய குறை யாருக்கு அதன் பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்தான். உலக மயமாக்கலால் மொத்த உற்பத்தியும் பலன்களும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அது குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த நல்லூழினால் சிலரிடமே செல்வம் குவிவதைத் தடுக்க முடிவது இல்லை.

அப்படிக் குவியும் செல்வத்தை எப்படிப் பகிர்ந்து கொள்வது, ஆற்றலிலோ முயற்சியிலோ எந்த வகையிலும் குறைந்து விடாத பிறருக்கும் பலன்களை எப்படிச் சேர்ப்பது என்பதைக் கற்றுக் கொண்டு செயல்படுத்தினால்தான் சந்தைப் பொருளாதார மயமாக்கம் வெற்றி பெற முடியும்.

இதை விவாதிக்கும் நேர்முகம் ஒன்று இன்றைய இந்து நாளிதழில்.

கருத்துகள் இல்லை: