ஞாயிறு, அக்டோபர் 29, 2006

தாண்டவராயனுக்குத் தண்டம்

"நீர் பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்து அவனவன் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடுறான். எழுதுவதை நிறுத்து!"

சூடான ஒரு விவாதத்துக்கு மத்தியில் பெயரிலியாக வந்து, அப்புறம் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தாண்டவராயன் என்று முகவரி கொடுத்த நண்பர் சொன்னது அது.

பொதுவாக அடுத்தவர்களைப் பற்றியக் குறைகளை நாம் வெளிப்படையாகச் சொல்வது இல்லை, 'எதற்கு வீணாக ஒருவரை நோகடிக்க வேண்டும்' என்று சமாதானம். இது போல் விவாதங்களின் போது வரும் கருத்துக்கள்தான் நமக்குக் கிடைக்கும் விமரிசனம்.

பொருளாதாரம் பற்றி எழுத ஆரம்பித்தது 'ஒவ்வொருவரின் வாழ்க்கையைத் தொட்டுப் போகும் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு செயல்பட உதவ வேண்டும், எல்லோரும் படிக்க வேண்டும்' என்ற நோக்கில்தான்.

'நான் எழுதுகிற போக்கில் எழுதுகிறேன், படித்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி' என்று எழுதும் இன்னொரு பதிவைப் போன்றது இல்லை இது.

இந்த நோக்கத்தில் முற்றிலும் வெற்றியடையவில்லை என்றுதான் எனக்கும் தோன்றியது, அதைச் சுட்டிக் காட்டிய தாண்டவராயனுக்கும் நன்றி.

தனி மனிதர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் இவற்றின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசும் microeconomics என்ற பிரிவு முடிந்து, அரசுகளும் நிதிநிலை அறிக்கைகளும், பணமும் வங்கிச் சேவைகளும், நாட்டின் வளர்ச்சியும் செல்வங்களும் போன்றவற்றை அலசும் macroeconomics பற்றி ஆரம்பிக்க வேண்டும்.

இதை எழுதி வைத்து இடைவெளி விட்டு வெளியிடலாம் என்று எண்ணம். அடுத்த ஒரு மாதத்தில் முப்பது பகுதிகளாக macroeconomics பற்றி எழுதி வைத்து விட்டு, டிசம்பரில் மீள்பார்வை பார்த்து சீர்படுத்தி வெளியிட்டால் இன்னும் சிறப்பாக அமையும், தாண்டவராயன் போன்றவர்களும் பயனடைய உதவியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கூடவே நவம்பரில் பதிவுகளுக்கு விடுமுறை கொடுத்து எழுதி முடிக்கத் திட்டமிட்டிருப்பவை:

1. என்னைப் பாதித்த புத்தகங்களைப் பற்றிய தொகுப்பு ஒன்றையும் ஆரம்பித்ததை முடித்து விட வேண்டும். இது வரை போட்ட பட்டியலில் இருபத்தைந்துக்கும் அதிகமான புத்தகங்கள் வந்து விட்டன.

2. வலைப்பதிவுகளுடன் என்னுடைய அனுபவங்களைப் பற்றிய ஒரு தொகுப்பை எழுதத் தேவை இருக்கிறது.

3. நேரம் கிடைக்கும் போது எழுத்து பதிவில் கலவையாக எழுதிப் பதிந்துள்ள நாட்குறிப்புகளைப் பிரித்து வகை செய்து வோர்ட்பிரஸ்ஸில் ஆரம்பித்துள்ள புதிய வலைப்பூவில் தொகுக்கும் வேலையை செய்ய வேண்டும்.

4. இவற்றைத் தவிர இரண்டு சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் எழுதவும், நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த வேலைகளுக்கு நவம்பரை ஒதுக்கி விட்டு, டிசம்பரில் மீண்டும் சந்திக்கலாம். எழுத்து பதிவில் நாட்குறிப்புகளாக எழுதுபவை உடனுக்குடன் வெளிவரும்.

7 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

சரி. அப்ப லீவ் சேங்ஷண்டு:-))))

வடுவூர் குமார் சொன்னது…

நானும் தயாராக இருக்கேன்.!!

மா சிவகுமார் சொன்னது…

நன்றி துளசி அக்கா :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

//நானும் தயாராக இருக்கேன்.!!//

படிக்கத்தானே :-)

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//திட்டமிட்டுள்ளோம்.//
???

மா சிவகுமார் சொன்னது…

பொன்ஸ்,

மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

மா சிவகுமார் சொன்னது…

நன்றி ஜெய்.

உங்களுடைய பிரதியைக் கொடுத்தால் படித்து விட்டுத் தருகிறேன்.

அன்புடன்,

மா சிவகுமார்