செவ்வாய், ஏப்ரல் 19, 2011

ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்கள்

சானல் 4 தொலைக்காட்சியில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் பேட்டி


'என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியக்கூடாது' என்று முயற்சித்து வெற்றியும் பெற்றது இலங்கை அரசு. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அனைவரையும் அருகிலேயே வர விடவில்லை.

1. இலங்கை நடத்தும் விசாரணை எதுவும் உண்மைகளை வெளிக் கொண்டு வராது. போர்க்குற்றங்களை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்.

2. இலங்கை இடுக்குகளில் மறைந்து கொண்டது. சீனா இலங்கையை பாதுகாப்பு கவுன்சிலில் பாதுகாத்தது. இந்தியா மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பாதுகாத்தது.

3. எந்த பெரிய நாடும் இலங்கையில் நடந்ததை புறக்கணிக்க முடியாதபடி இந்த அறிக்கை இருக்கிறது. போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன்.

4. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளிவந்த பிறகு, சீனா கூட எதுவும் செய்ய முடியாது. லிபியா, சூடான் போன்ற நாடுகளைப் பொறுத்த வரை சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதே போல இலங்கைக்கும் நடக்கும்.

5. இலங்கை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவும், கிரிக்கெட் விளையாடவும் அனுமதிக்கப்பட வேண்டுமா? ராஜபக்சே உலகில் சுற்றி வர அனுமதிக்கப்பட வேண்டுமா?

குறிப்பிட்ட தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்தான் இந்தக் குற்றங்களுக்கு முழுப்பொறுப்பாளிகள்.

7. இலங்கை அரசு என்ன நடக்கிறது என்பதை வெற்றிகரமாக மூடி மறைத்திருந்தது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மைக்கேல் டையர் <-- உத்தம் சிங், ராஜபக்ஷே <-- யார்?