சனி, ஏப்ரல் 16, 2011

செத்த வீட்டில் புலம்ப மட்டும் தெரிந்த சமூகம்


மாரிமுத்து என்ற மீனவரின் உடலை பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்து விட்டு அடக்க முடியாத சோகத்தில் இருக்கும் தமிழ் உணர்வாளர் ராமநாதன் கோட்டைப்பட்டிணத்திலிருந்து பேசினார்:

'சம்பவம் நடந்து 14 நாட்களுக்குப் பிறகு உடல் கரையில் ஒதுங்கியிருக்கிறது. தலை இல்லை.  மனசே சரியில்லை. எங்கோ பிறந்து எங்கோ உயிரிழந்து எங்கோ அடக்கம் செய்யப்படுவதாக அவரது தலைவிதி ஆகியிருக்கிறது.

என்ன தவறு செய்தார்கள் இந்த மீனவர்கள்! பிழைக்கத் தொழில் செய்யப் போவது ஒரு குற்றமா?

ஏப்ரல் 6ம் தேதியே 'மூன்று உடல்கள் பிண அறையில் வைத்திருப்ப'தாக ஒரு காவலர் யாழ்ப்பாணத்திற்குப் போன ராமேசுவரம் மீனவர்களிடம் வாய் தவறிச் சொன்னதாக நிரபராதி மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் சொன்னாராம்.

நீங்க என்ன வேண்டும் என்றாலும் சத்தம் போடுங்க, நாங்க அடிக்கிறது அடிப்போம், கொல்வோம் என்ற செய்தியைத்தான் சிங்களப் பேரினவாத ராணுவம் தமிழர்களுக்குச் சொல்லியிருக்கிறது.

இழவு வீட்டில் கூடி இருந்து அழும் சமூகமாக ஆகி விட்டிருக்கிறோம்!.'

1 கருத்து:

மங்கை சொன்னது…

:(