டெக்கான் குரோனிக்கிளில் ஜெயதி கோஷ் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து
1. எரிபொருள் விற்கும் நிறுவனங்களுக்கு இழப்பு என்று அரசு காரணம் சொன்னாலும், அந்த நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளில் நல்ல ஆதாயம் ஈட்டியதாகத்தான் வருகிறது. ஆதாயம் குறைவதை இழப்பு என்று சொல்கிறார்கள்.
2. உலகச் சந்தையின் விலையுடன் உள்நாட்டு விலையை இணைப்பது தேவையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்குத்தான் வழி வகுக்கும்.
3. இந்த விலை ஏற்றம் தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் கிடைப்பதற்காக செய்யப்பட்டிருக்கிறது.
4. எரிபொருள் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அரசு எரிபொருள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க நேரிடும்.
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.
புதன், ஜூன் 30, 2010
காஷ்மீர்
பல மாதங்களாக காஷ்மீரிலிருந்து பெரிய வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகள் படிக்கவில்லை. ஓமர் அப்துல்லா நல்ல வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.
கடந்து இரண்டு நாட்களாக மீண்டும் கலவரம். இரண்டு இளைஞர்கள், துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்.
டெக்கான் குரோனிக்கிளில் ஓமர் அப்துல்லாவின் பேட்டியில் இதைப் பற்றியும் காஷ்மீர் போராட்டம் குறித்த மற்ற செய்திகளைப் பற்றியும் பேசியிருந்தார்.
இன்றைய நாளிதழில் மேலும் துப்பாக்கி சூடு, மேலும் உயிரிழப்பு என்று செய்தி.
கடந்து இரண்டு நாட்களாக மீண்டும் கலவரம். இரண்டு இளைஞர்கள், துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்.
டெக்கான் குரோனிக்கிளில் ஓமர் அப்துல்லாவின் பேட்டியில் இதைப் பற்றியும் காஷ்மீர் போராட்டம் குறித்த மற்ற செய்திகளைப் பற்றியும் பேசியிருந்தார்.
- 'காஷ்மீர் பிரிவினைவாதிகள் பாகிஸ்தானின் மேலாண்மையில்தான் செயல்படுகிறார்கள்.'
- 'இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி வந்து விடக் கூடாது என்று ஒரு கூட்டமே செயல்படுகிறது'
- 'காஷ்மீரில் கலகத்தைத் தூண்டுவதற்கு, பிரிவினை வாதிகளும், எதிர்க்கட்சிகளும் தவிர இன்னும் சில கைகளும் செயல்படுகின்றன'
இன்றைய நாளிதழில் மேலும் துப்பாக்கி சூடு, மேலும் உயிரிழப்பு என்று செய்தி.
சனி, ஜூன் 26, 2010
"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8
- ஓணாண்டி கவிஞரின் கருணாதுதி - மாநாட்டின் நோக்கம்
- வெற்றி வெற்றி செம்மொழி மாநாடு வெற்றி
- செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!
- செம்மொழி மாநாட்டை சாக்காக வைத்து உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும்
- துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு- வைகோ.
- இனியவை 40 - இன்னா 400 !
- செம்மொழி மாநாட்டில் நா(புரண்ட சூத்திர)தாரி வாலி
"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7
தொலைபேசி எதிர்வினைகள்
1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"
"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"
"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.
செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.
பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"
"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"
2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"
1.
"சிவகுமார், எப்படி இருக்கீங்க!"
"நான் நல்லா இருக்கேன், நீங்க!"
"ஒங்க பிளாக்ஸ்பாட் பார்த்தேன், நல்லா எழுதியிருக்கீங்க!"
"எதப்பத்தி சொல்றீங்க?"
"அதான், தமிழ் மாநாடு புறக்கணிப்பு பத்தி எழுதியிருக்கீங்களே. நான் கூட இன்னைக்குக் கிளம்பி மாநாட்டுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன். அப்பதான் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்னு பார்த்தேன். சரியா எழுதியிருக்கீங்க.
செல்லமுத்து குப்புசாமி கூட புறக்கணிப்பை ஆதரிச்சிருக்காரே! அவருடைய விடுதலைப் புலிகள் பற்றிய புத்தகம் படித்திருக்கிறேன்.
பெரிய ஆளுங்க எல்லாம் வாராங்களா, அல்லது இவனுங்களே கூடிக் கூத்தடிச்சிக்கிறானுங்களா?"
"சிவத்தம்பி என்று ஒரு பெரியவரின் பெயர் கேள்விப்பட்டேன். ஹார்ட் என்ற தமிழ் ஆய்வாளர் பேசியதும் செய்தித்தாளில் படித்தேன். மற்றபடி விபரங்களை கண்டு கொள்ளவில்லைதான். வ செ குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள் இணையத் தமிழ்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்"
2. "லக்கிலுக்கின் இடுகையில், 'நாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும், சிறிதளவாவது துடித்தோம்' என்று எழுதியிருந்ததைப் படித்தேன். அதுதான் உங்களுக்குத் தொலைபேசத் தூண்டியது. நான் கூட வலைப்பதிவு வைத்திருக்கிறேன். முன்பு ஒரு தடவை என் இடுகையில் நீங்கள் பின்னூட்டம் கூட போட்டீர்கள்"
வெள்ளி, ஜூன் 25, 2010
"உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6
வலைப்பதிவர்களின் சமீபத்திய இடுகைகள்
- செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!
- தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்...
- ஜெயலலிதா வைத்தார் ஆப்பு
- தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா? -கண்மணி
- வெளுத்துப் போன சிவத்தம்பி
- செம்மொழி மாநாடும் கலைஞரின் தமிழ்ப்பணியும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)