புதன், ஜூன் 28, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 12

காந்தியின் உண்ணாநோன்புகள் மிகப் பேர் பெற்றவை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம், சாக்கு. பெரும்பாலும் அவை தனிப்பட்ட காரணங்கள், பல முறை பொது நலனுக்காக.

உண்ணாநோன்பு காந்தியின் "சர்வரோகநிவாரணி"
1. மலச்சிக்கல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
2. ரத்தசோகை இருந்தால் உண்ணாமலிருங்கள்.
3. காய்ச்சல் வந்தால் உண்ணாமலிருங்கள்.
4. செரிமானம் சரியில்லையென்றால் உண்ணாமலிருங்கள்.
5. தலைவலி வந்தால் உண்ணாமலிருங்கள்.
6. மூட்டுவலி இருந்தால் உண்ணாநோன்பு மேற்கொள்ளுங்கள்.
7. சோகமாக இருந்தால் சாப்பிடாதீர்கள்.
8. படபடப்பாக இருக்கும்போது விரதமிருங்கள்.
9. பெருமகிழ்ச்சி வந்தால் உணவைத் தள்ளிப் போடுங்கள்.
10. உடல் பருத்தால் உணவு உண்ணாதீர்கள்.

இப்படி, ஏதாவது சாக்குச் சொல்லி உணவைக் குறையுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். உணவுக்குத் தேவையான அளவு உழைத்த பிறகே சாப்பிடுங்கள். மருத்துவருக்கும், மருந்துகளுக்கும் கொடுக்கும் பணத்தை முற்றிலும் மிச்சப்படுத்தி விடலாம்.

இந்தியாவில் பொது வாழ்க்கையில் நுழைந்த பிறகு காந்தி மேற்கொண்ட உண்ணாநோன்புகள் பரவலாக அவதானிக்கப்பட்டன.
1. அத்தகைய முதல் நோன்பு, அகமதாபாது ஆலைத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் வலுவிழந்து போகக் கூடாது என்று தொழிலாளிகளை வலியுறுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது. அது எதிராளிகளும், காந்தியின் நண்பர்களுமான ஆலை முதலாளிகளின் மீதும் சங்கடத்தை ஏற்படுத்தி வேலை நிறுத்தத்தை நல்ல முறையில் முடிவுக்குக் கொண்டு வந்தது.
2. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக 1924ல் மேற்கொள்ளப்பட 21 நாள் உண்ணாநோன்பு எதிர்பார்த்த பலன்களை ஈட்டாமல் போனது.
3. அரிஜனங்களுக்கு தனி வேட்பாளர் முறைக்குப் பதிலாக மாற்று இட ஒதுக்கீட்டு முறை வேண்டி 1935ல் அவர் மேற்கொண்ட நோன்பு ஆறு நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் இந்தியாவில் தீண்டாமை என்று கொடுமைக்கு இருந்த பெருமை அழிந்தது. கோயில்கள் ஆண்டவனின் சந்நிதிகளாயின. தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் அதற்கு அவமானப்பட வேண்டும் என்ற சமூக நிலை உருவாகியது.
4. கடைசியாக இந்து - முஸ்லீம் கலவரங்களுக்கு எதிராக கொல்கத்தாவிலும், புதுதில்லியிலும் 1947, 48ல் அவரது விரதங்கள் இந்தியத் துணைக்கண்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றின.

கருத்துகள் இல்லை: