வெள்ளி, ஏப்ரல் 21, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 1

"இந்தியா போன்ற ஏழைகள் நிறைந்த நாட்டில் இனிப்புப் பண்டங்களையும் சுவைக்காக மட்டுமான பொருட்களையும் உண்பது திருடுவதற்குச் சமமாகும்". - காந்தி

நான் சம்பாதித்த காசு, எனக்குப் பிடித்த இனிப்பு, இதை சாப்பிட்டால் என்ன ஆகி விடும்? சம்பாதித்ததையெல்லாம் தானம் செய்து விட வேண்டுமா என்ன? இதெல்லாம் நடக்க கூடிய ஒன்றா? அந்தப் பைத்தியக் கார கிழவர் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்க ஆரம்பித்தால் எல்லோரும் கிராமங்களில் போய் மாட்டு வண்டியில் போய்க் கொண்டியிருக்க வேண்டியதுதான். நடக்கிற விஷயத்தைப் பார்ப்போம்.

காந்தியின் கனவுகள், பொருளாதாரக் கொள்கைகளை அவருடன் சேர்த்தே எரித்து சாம்பலை கடலில் கரைத்து விட்ட நமக்கு இன்று காந்தியின் பெயரைத் தாக்குவது, அவரது எண்ணங்களை எள்ளி நகையாடுவது, அவரின் தலைமையை குறை கூறுவது எல்லாமே ஒரு மதிப்புச் சின்னமாகி விட்டன.

முப்பது கோடி மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட அந்த அரை நிர்வாண பக்கிரியின் கொள்கைகள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் செல்லுபடியாகுமா?

உலகெங்கும் உள்ள மக்களுக்கு, தூய குடிநீர், சுகாதாரமான உணவு, தரமான கல்வி சாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பது இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சாத்தியமாகுமா?

"ஏழைகள் ஏழைகளாக இருப்பது அவர்களின் தலை எழுத்து" என்று ஒதுக்கித் தள்ளும் இந்து மதம், "சாமர்த்தியமிருந்தால் முன்னேறி வரட்டுமே" என்று சவால் விடும் மேற்கத்திய நாகரீகம், "எம்முடைய வழியே சரியான வழி, உலகின் எல்லா நாடுகளும் எம் வழிக்கு வந்து விடுங்கள்" என்று அறை கூவும் அமெரிக்க ஆணவம், "கொலை செய்து சொர்க்கம்" என்று மூளைச் சலவைச் செய்யப்பட்ட இளம் தீவிரவாதிகள் என்று மனித குலம் சந்திக்கும் சவாலுக்கெல்லாம் விடையாக காந்தி என்ன செய்திருப்பார்?

1 கருத்து:

Unknown சொன்னது…

Dear Friend,
This is the first time i am going through your site. I liked your heading very much.எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ ஒதுக்கப்படாமல் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக வாழும் உலகத்தை உருவாக்குவோம். இல்லாமை இல்லாத நிலையை உருவாக்குவோம்.

Same thinking what I have in my mind.

This post is really meaningful. Due to lack of time, i am writing this comment in english. I shall read the remaining posts also and tell my comments.
Thank you Sivakumar.