செவ்வாய், மே 02, 2006

ஆயிரம் ஆண்டுகளின் தன்னிகரில்லாத் தலைவன் - 5

காந்தியின சத்திய சோதனை போன்ற எண்ண நேர்மை நிறைந்த தன் வாழ்க்கைக் கதை ஒன்றைக் காண்பது மிக அரிது. தான் ஒவ்வொரு வயதிலும் செய்த செய்ய மறந்தவற்றை எந்த விதமான மறைப்புகளும் இன்றி உலகத்துக்கு முன் வெளிப்படுத்திய துணிச்சல் அந்த நூலெங்கும் விரவிக் கிடக்கிறது.

எதையாவது மறைத்திருந்தாலோ, திரித்திருந்தாலோ நமக்கு எப்படி தெரியும் என்ற வாதம் மனதில் தோன்றலாம். சத்திய சோதனையைப் படித்த யாருக்கும் அப்படி ஒரு எண்ணம் தோன்றாது என்பது உறுதி.

தான் கூறிய பொய்கள், திருட்டு தனது பலகீனங்கள், அவற்றைப் புரிந்து கொள்ள தான் நடத்திய சோதனைகள் என்று படிப்பவர் மனதைத் தொட்டு விடும் இந்தப் புத்தகம் மிக மலிவு விலையில் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு 30 ரூபாய்தான்.

கருத்துகள் இல்லை: