திங்கள், ஏப்ரல் 17, 2006

அரசியலும் கல்வியும்

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும்?

"நம்ம நாட்டில் அரசியல் அயோக்கியர்களின் புகலிடமாகி விட்டது. படித்தவர்கள் அரசியலுக்கு
வந்தால்தான் உருப்படும்."

இப்படிப் பேசி விட்டு ஓட்டுப் போடாமலேயே காலத்தைக் கழித்து விடுகிறோம்.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மக்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் வழி நடத்திய இயக்கங்களில்
எல்லாம் படித்தவர்கள் மட்டும்தான் இருந்தார்களா என்ன?

காந்தியின் கல்வித் தகுதிதான் அவரைப் பெரிய தலைவராக்கியதா? காமாரசருக்கு என்ன தகுதி
இருந்தது? நெல்சன் மாண்டேலா படித்துக் கிழித்து விட்டதாலா தம் மக்களின் அடிமைத் தளைகளை
உடைக்க முடிந்தது? கொடுங்கோல் ஆட்சி புரிந்த பலர் மெத்தப் படித்த மேதைகள்தாம்.

கருத்துகள் இல்லை: