வியாழன், ஜூன் 22, 2006

தாலிடோமைடு

1950-60களில் தாலிடோமைடு என்ற மருந்து கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி தலைச் சுற்றல் போன்றவற்றை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டு விற்கப்பட்டது. கிட்டத்தட்ட 50 நாடுகளில் விற்கப்பட்ட இந்த மருந்து தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

பின்னர் 1961ல் கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் இந்த மருந்தை உட்கொண்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊனங்களோடு பிறக்கின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மருந்து தடை செய்யப் படுவதற்கு முன் ஏறக்குறைய 15,000 கர்ப்பங்கள் காயப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றில் 12,000 குழந்தைகள் ஊனங்களோடு பிறந்து, 8000 குழந்தைகள் மட்டுமே ஒரு வயதைத் தாண்ட முடிந்தது. தப்பித்த குழந்தைகள் வாழ் நாள் முழுவதும் ஊனத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஊனங்கள் உயிரணு மூலம் கடத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Thalidomide என்ற விகிபீடியா கட்டுரையில் இது பற்றிய முழு விபரங்களைப் பார்க்கலாம். பக்கத்தின் கீழே தாலிடோமைடு குழந்தைகள் எனப்படும் மனிதர்களில் புகழ் பெற்றவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.seacoastonline.com/news/05252006/health/104544.htm

என்ற சுட்டியில் இப்போது கருத்தடை மாத்திரைகளையும், பிற முறைகளையும் பயன்படுத்தி மாதவிடாயைத் தவிர்க்கும் பெண்களைப் பற்றிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையாக நிகழும் மாற்றங்களை செயற்கையாக அடக்கும் இத்தகைய வேதிப் பொருட்களின் நீண்ட கால விளைவுகளைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக லாபம் என்பதையே குறியாகக் கொண்டு செயல்படும் மருந்து நிறுவனங்கள் தங்கள் தொழில் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: