செவ்வாய், மே 10, 2011

பிளஸ் -2 ஃபெயில் (புனைவு)


பிளஸ்-2 தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர் அன்புச் செல்வத்திடம் தினக் கண்ணாடி நிருபர் பேட்டி கண்ட விபரங்கள்

பத்திரிகையாளர் :
நீங்க பிளஸ்-2வில் ஃபெயிலானது பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

அன்புச் செல்வம்:
அதைக் கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நீங்க பிளஸ்-2வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தீர்கள்?

பத்திரிகையாளர் :
நான் படிச்ச சமயத்தில் பிளஸ்-2 கிடையாது, பியூசி படித்தேன்.

அன்புச் செல்வம் :
பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடச் செய்யாத உங்களுக்கு என்னிடம் கேள்வி கேட்க வெட்கமாக இல்லையா?

பத்திரிகையாளர் :
இல்லை...., நல்லா படிப்பீங்க, மார்க் எடுப்பீங்கன்னு உங்க அப்பா அம்மா நம்பிக்கை வச்சிருந்தாங்க....

அன்புச் செல்வம் :
நான் 4ம் வகுப்பு படிக்கும் போது கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கிய போது எனது ஆசிரியர் என்னைக் கட்டித் தழுவி கண்ணீர் உகுத்ததை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்.

7ம் வகுப்பில் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வாங்கி வந்த போது என்னை வருங்காலத்தின் விடிவெள்ளி என்று எல்லோரும் போற்றியதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.

அதை எல்லாம் விடுங்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றேனே அதைப் பற்றி ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்?

பத்திரிகையாளர்:
இல்லை...., டிவி பார்ப்பதைக் குறைத்து கொஞ்சம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தால் பாசாகியிருப்பீங்க என்று சொல்றாங்களாமே?

அன்புச் செல்வம்:
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, நான் பார்க்கிறேன். அவன் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கிடையாது, திரையரங்குக்குப் போய்தான் படம் பார்க்க வேண்டும். பொறாமையில் பேசுபவர்களை உலகம் நன்கு அறியும்.

பத்திரிகையாளர் :
சரி, இப்போ என்னதான் செய்யப் போறீங்க? திரும்பவும் எழுதி பாஸாகும் உத்தேசம் உண்டா? உங்க கூட ஃபெயிலானவங்க எல்லாம் மறு தேர்வு எழுதப் போறதா சொல்றாங்களே!

அன்புச் செல்வம்:
அதைப் பற்றிச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் முடிவு எடுக்கப்படும். இப்போது எங்கள் வீட்டுக்கு கம்பி வழி இணைப்புக்குப் பதிலாக நேராக வீட்டுக்கு (DTH)சேவை வாங்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன்.

அன்புச் செல்வத்துடன் சுற்றும் அவரது ரசிகரான 8ம் வகுப்புப் படிக்கும், இளையகண்ணன் கருத்து சொல்கையில்

அன்புச் செல்வத்தைப் பிடிக்காதவங்கதான் கடுப்பில் அவரைக் கொற சொல்றாங்க. அவனுங்க எல்லாம் பக்கத்து வீட்டுக் கார பழனிச்சாமிக்கு வால் பிடிப்பவனுங்க!

அன்புச் செல்வம் அண்ணனைப் போல சைட் அடிப்பதில் எக்ஸ்பர்ட் யாரும் உண்டா?

ஒரு முறை தெருமுனையில் குட்டைச் சுவரில் நாங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு பெண் கடந்து போக, அவர் அடித்த கமென்டில் அந்தப் பெண் ஓடியே போய் விட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த வழியாகப் போவதையே அந்தப் பெண் விட்டு விட்டாள்.

அவரது கிண்டல் அடிக்கும் திறமைக்கு நான் எப்போதுமே ரசிகன்.

அவரைக் குறை சொல்லணும் என்றாலும் எங்களைப் போன்ற ரசிகர்கள்தான் சொல்லணும். அவங்க அப்பா அம்மாவுக்கும் ஆசிரியர்களுக்கு என்ன தகுதி இருக்கு!

அவங்க வீட்டில் டிவி புரோகிராம் எல்லாம் ஒழுங்க வர வைப்பது யாரு? கேபிளை ஒழித்து, DTH கொண்டு வர முயற்சிப்பது யாரு? அதை எல்லாம்  யோசிக்காம, பிளஸ்-2 எக்சாம் பத்தி மட்டுமே பேசிக்கிட்டு இருக்காங்க

ஒரு நாள் அவர் சினிமாவில் பெரிய டைரக்டரா வரும் போது பங்களாவில் சொகுசாக வாழப்போவது அவங்க அப்பா அம்மாதானே! அப்போ அவர் படித்த ஆசிரியர்கள் என்று பத்திரிகைகளில் படம் வெளியாகும் போது வேண்டாம் என்று சொல்லி விடுவார்களா!

3 கருத்துகள்:

Navanee சொன்னது…

ithai naan vanmayaga kandikiren.by 100/100 all pass tutorial college.

Yoga.s.FR சொன்னது…

இணைப்பு தானே முக்கியம்?பிளஸ்-டூ பாஸ் பண்ணலைன்னா குடியா?முழுகிடும்?பிளஸ்-டூ வரை வந்ததை பெருமையாக எண்ணாமல்????????????????

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஐ... சூப்பரப்பு...