செவ்வாய், மே 10, 2011

6. இலங்கை அரசின் ஒத்துழையாமை (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
21. அந்தக் குறிப்புரை தெளிவுபடுத்துவது போல, செப்டம்பர் 2010ன் ஆரம்பத்திலிருந்து பணியை முடிக்கும் வரை, குழு இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்தது. இந்தக் குழு பொதுச்செயலாளருக்கு அறிவுரை அளிக்கும் பொறுப்பை மட்டுமே கொண்டிருப்பதாகவும், எந்த விதமான விசாரணையிலும் ஈடுபடவில்லை என்றும் குழுவினரும் ஐக்கிய நாடுகள் அலுவலர்களும் அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெளிவு படுத்தினார்கள்.

பல மாதங்கள் குழுவுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்த பிறகு, அரசு குழுவை இலங்கைக்கு வருமாறு அழைத்தது. ஆனால் நடைமுறையில் பயணத்தின் வழிமுறைகளை குழுவுடன் விவாதிக்க மறுத்ததன் மூலம் அந்த அழைப்பை  திரும்பப் பெற்றுக் கொண்டது. டிசம்பர் 2010ல் ஒரு கடிதம் மூலம் 'குழு எல்எல்ஆர்சிக்கு மனு கொடுப்பதை மட்டும் செய்ய முடியும்' என்று அரசாங்கம் வலியுறுத்திய பிறகும் குழு இலங்கைக்குப் பயணம் செய்யும் விருப்பத்தை மறுபடியும் உறுதி செய்தது.

ஜனவரி 2011ன் தொடக்கத்தில் அரசாங்கம் இந்த அணுகுமுறையை நிராகரித்த பிறகு பயணத்தைப் பற்றி தொடர்பு கொள்ளவே இல்லை. மாறாக, குழுவின் கேள்விகளுக்கு எழுத்து வடிவில் பதில் அளித்தது, அவை ஜனவரி இறுதியில் அனுப்பி வைக்கப்பட்டன, எல்எல்ஆர்சி மற்றும் பிற உள்நாட்டு அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு சிறு குழுவை அரசாங்கம் நியூயார்க்குக்கு அனுப்பி வைத்தது, அதில் எல்எல்ஆர்சியின் எந்த உறுப்பினரும் இல்லை. 

22. குழு இலங்கைக்குப் பயணம் செய்து பொறுப்பு நிர்ணய பிரச்சனையில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் எல்எல்ஆர்சியை சந்திக்க இலங்கை அரசு அனுமதி மறுத்ததைக் குறித்து இந்தக் குழு தன் வருத்தத்தை பதிவு செய்கிறது. இலங்கைக்குப் போவது பணிக்குத் தேவையான ஒன்றாக இல்லா விட்டாலும், (அதிகார நிலைப்பாடுகளை பிற வழிகளில் குழு தெரிந்து கொண்டாலும்) எல்எல்ஆர்சி மற்றும் அரசு அலுவலர்களை சந்தித்து அவர்களின் புரிதல்களை நேரடியாக தெரிந்து கொள்ளவும், குழுவின் நிபுணத்துவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அது ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.

எழுத்து மூலமான பதில்களை வரவேற்று, நேருக்கு நேர் இலங்கை அதிகாரிகளைச் சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாலும், இந்தக் குழு எதிர்பார்த்த உறவாடலாக அது இல்லை.

E. குழுவின் பதிவுகளின் ரகசியத் தன்மை.
23. சில எழுத்து மற்றும் வாய்மொழி தகவல்களை, பிற்பாடு பயன்படுத்துவதில் முழுமையான ரகசிய காப்பீட்டு நிபந்தனையின் கீழ் குழு வரப்பெற்றது. முறையான சட்ட ஆலோசனையின் கீழ், சட்ட விவகாரங்களுக்கான அலுவலகம் (OLA) பொதுச்செயலாளரின் வெளியீடான "தகவல் சென்சிடிவிடி, வகைப்பாடு, கையாளுதல் (ST/SGB/2007/6)" ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை குழுவின் பதிவுகளுக்கு பயன்படுத்தலாம் என்று சொன்னது. 

அந்த வெளியீடு ஒரு ஆவணத்தை கண்டிப்பாக ரகசியமானது என்று வகைபிரிக்க வழிசெய்கிறது. 20 ஆண்டுகளுக்கு அதை அணுகுவதில் கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதற்குப் பிறகு ரகசிய நீக்கல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வைத்திருப்பது அல்லது வெளியிடுவதன் சாதகங்களை எடை போடவும் வழி செய்கிறது. கூடவே ஓஎல்ஏ, குழுவின் பணிக்கு தேவைக்கேற்ப பிற்பாடு பயன்படுத்தும் முழுமையான ரகசியத்துக்கான உறுதிமொழியை குழு வழங்கலாம் என்று உறுதி செய்தது. அதன் விளைவாக கிட்டத்தட்ட குழுவின் எல்லா பதிவுகளும், "கண்டிப்பாக ரகசியமானவை" என்று வகைபிரிக்கப்பட்டு, சிலவற்றில் எதிர்கால பயன்பாடு குறித்த கூடுதல் பாதுகாப்புகளும் தரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: