திங்கள், மே 09, 2011

5. தகவல் சேகரிப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை

===============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
===============

16. இந்தக் குழுவின் பணித் திட்டம் இரண்டு கட்டங்களாக அமைத்துக் கொள்ளப்பட்டது. முதல் கட்டத்தில் தனது பொறுப்புடன் தொடர்புடைய பொருத்தமான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் உடைய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து இலங்கையின் ஆயுதப் போர் குறித்த பலவகையான தகவல்களை இந்தக் குழு திரட்டியது.

இந்தத் தகவல்களில் சில எழுத்து வடிவில் வந்தன - பொதுவாகக் கிடைக்கும் ஆவணங்கள் - அரசு ஆவணங்கள், ஐக்கிய நாடுகள் சபை அல்லது அரசு சாரா நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் ரகசியமாக குழுவுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள். மற்ற தகவல்கள், குழு மற்றும் அதன் செயலகம் நடத்திய பல சந்திப்புகள் மூலம் திரட்டப்பட்டன.

இந்தக் குழு ஐக்கியநாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் அலுவலர்கள் மற்றும் அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் கடைசிக்கட்ட போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட தனிநபர்களையும் சந்தித்தது. பணியின் இரண்டாவது கட்டத்தில் இந்தக்குழு அறிக்கையைத் தயாரித்தது. இந்த அறிக்கை பதிப்பிப்பதற்கு பொருத்தமான வகையில் எழுதப்பட்டுள்ளது.

17. பொதுமக்களை தொடர்பு கொள்வதைப் பொறுத்த வரை, இந்தக் குழு ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து எழுத்து மூலமான தாக்கீதுகளைக் கேட்டு ஒரு பொது அழைப்பு விடுத்தது. அக்டோபர் 21, 2010ல் குழுவின் தலைமை அலுவலர், இலங்கையின் நிரந்தர தூதுவருக்கு அறிவிக்கையின் நகலை இணைத்து, அது ஐக்கியநாடுகள் சபையின் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்ற குறிப்போடு இந்த முடிவை எழுத்து மூலம் அறிவுறுத்தினார்.

ஆங்கில அறிவிக்கை அக்டோபர் 27, 2010 அன்று வெளியிடப்பட்டது, தொடர்ந்து சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளும் வெளியிடப்பட்டன. டிசம்பர் 15, 2010 என்று அறிவிக்கப்பட்ட கடைசி நாள் பின்னர் டிசம்பர் 31, 2010 வரை நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 31, 2010 வரை இந்தக் குழு 2300 அனுப்புனர்களிடமிருந்து சுமார் 4000 அறிக்கைகளைப் பெற்றது.

18. பெருவாரியான அறிக்கைகளில் குறிப்பிட்ட வகையான விதிமுறை குற்றச்சாட்டுகள் அல்லது இறுதிக் கட்டத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தின் விதிமுறை குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிய தனிநபர் புகார்கள் அடங்கியிருந்தன.

நிகழ்வுகளின் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட ஆவணத் தகவல்களும் வரப்பெற்றன. 

பொதுத் தகவல்கள் மற்றும் நிலவரத்தின் குறிப்பிட்ட நிலைமை பற்றிய பாரபட்சமில்லாத ஆய்வு அறிக்கைகளும் சிறிய அளவில் பெறப்பட்டன.  பொதுவில் கிடைக்கும் மூலங்களிலிருந்து அனுப்பப்பட்ட ஊடக அறிக்கைகள், இணைய இணைப்புகள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவையும் தாக்கீதுகளின் ஒரு குறிப்பிட்ட அளவாக இருந்தன.

கடைசியாக, உண்மையான  தகவல்கள் அல்லது ஆராய்ச்சி இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்ட பரிந்துரைகள் செய்யும்படியும் குழுவிற்கு அறிவுறுத்தும் வேண்டுகோள்களும் பெருவாரியாக வரப்பெற்றன.

19. தாக்கீதுகளை தனித்தனியாக சரிபார்க்க முடியாததால், குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மை அளவீடுகளை பராமரிக்க, அவற்றை குழு நேரடி மூலமாக பயன்படுத்தவில்லை (அத்தியாயம் III A வைப் பார்க்கவும்). சில தாக்கீதுகள், மற்ற வழிகளில் கிடைத்த தகவல்களை சரிபார்க்க உதவின.

குழுவின் நடைமுறை பொறுப்புக்கான காலகட்டத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அடங்கிய பெரும் அளவிலான தாக்கீதுகள், கடைசிக் கட்ட போர் தொடர்புடையதாக மட்டுமில்லாமல் பரவலாக கடந்தகாலத்தை விவாதிப்பதன் அவசரத் தேவையை வலியுறுத்தின.

D. இலங்கை அரசுடன் உறவாடல்.
20. இந்தக் குழு உருவாக்கப்பட்டதிலிருந்தே,  பொறுப்பை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கவும், அரசின் கருத்துக்களை தெரிந்து கொள்ளவும், எப்படி பொறுப்பு நிர்ணயித்தல் செய்லடுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட விரும்பியது. இந்தக் குழு நடைமுறையில் அரசாங்கத்திற்கு ஒரு உதவி அமைப்பாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையை பொதுச்செயலாளர் குழுவிடமும் அரசாங்கத்திடமும் தெரிவித்தார்.

குறிப்பாக எல்எல்ஆர்சியுடன் சேர்ந்து பணியாற்றுவது பலனுடையதாக இருக்கும் என்று குழு தொடர்ந்து கருதியது. ஏனென்றால் அரசாங்கம், அதை உள்நாட்டில் உருவான பொறுப்பு நிர்ணய வழிமுறை என்று அறிவித்திருந்தது. அதே நேரத்தில் மற்ற உள்நாட்டு அமைப்புகளும் பொறுப்பு நிர்ணயத்தைப் பொறுத்த வரை முக்கிய பங்கு வகிக்கின்றன் என்று கருதிய குழு அரசாங்கத்தின் மூலமாக அவற்றுடன் சேர்ந்து பணியாற்ற விழைந்தது.  இலங்கை அரசுடனும் எல்எல்ஆர்சியுடனும் தொடர்பு கொள்ள குழு எடுத்துக் கொண்ட முயற்சிகளை பிற்சேர்க்கை 2ல் காணலாம்.
 

கருத்துகள் இல்லை: