ஞாயிறு, மே 08, 2011

எரிந்து போகும் இராவணன் மனை!

சூழும் வெஞ் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில்
ஊழி வெங் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்தன-எரிந்தன, நெடு நிலை ஏழும்.

1. 2006 ஏப்ரலில் இலங்கையில் இறுதிப் போர் ஆரம்பமாகிறது. என்ன நடக்குமோ? (27-4-06)
மீண்டும் ஈழப் போர்

2. 'ஈழத்தமிழரின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இணையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் திரு, பெல்ஜியத்திலிருந்த வந்திருப்பதை முன்னிட்டு சென்னை வலைப்பதிவர்கள் சந்திக்கலாம்' (19-12-06)
ஈழத்து மனிதர்களுக்காக ஒரு கூட்டம்

3. நண்பர் திருவின் முயற்சியில் இணையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தின் விண்ணப்பத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில மூலத்துடன் PDF கோப்பாக இணைத்துள்ளேன். (24-12-06)
ஏதாவது செய்ய மனமிருந்தால்.....

4. தமிழ்ச் செல்வனின் மறைவு (2-11-07)
:-(((

5.  ஆயிரம் ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்து, பல லட்சம் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நசுக்கி வெறியாட்டம் ஆடும் சிங்கள ராணுவமும், இந்தியப் பத்திரிகைகளும், இந்திய அரசியல் தலைவர்களும் நாசமாகப் போகட்டும். (18-5-09)
கொக்கரிக்கும் எல்லோரும் நாசமாகப் போகட்டும் 

6. செய்தித் தளங்களில் எல்லாம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியுடன் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள். ரீடிஃப் டாட் காமில் போட்டிருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு சாதாரண குடும்பத் தலைவர், அப்பாவி இளைஞர் என்றுதான் முகங்களைக் காட்டியது. தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என்று வில்லன் சித்திரிப்புக்கு உட்பட்டு விட முடியாத படங்கள். உண்மையில் வயிறு கலங்கியது. இப்படி ஒரு கொக்கரிப்பா!  (19-5-09)

யார் பயங்கரவாதி!

7. ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்? (21-5-09)

வாய்ச் சொல் வீரர்கள்

8. முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! (28-1-10)
கையறு நிலையில் தமிழகம்!

9. 72 வயது மூதாட்டியான திருமதி பார்வதியை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிய இந்திய அரசின் நடத்தை குறித்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். (18-4-10)

ஒரு இந்தியக் குடிமகனின் எதிர்ப்பு நிலை

10. கிழட்டு மனிதன் நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். உடலளவில் அவனுக்கு கண் பார்வை இல்லாமல் இருந்தாலும், அதை விட மனதையும், அறிவையும் தடுமாற்றும் அளவுக்கு பிள்ளை பாசம் அவன் கண்களை மறைத்திருந்தது. (20-4-10)
நாட்டுக்குத் தலைவனுக்கு குடும்பப் பாசம் கண்ணை மறைத்திருந்தது

11. "எல்லாம் பேசுவோம் ஈழத்தில் எல்லாம் அழிவதற்கு உடந்தையாக இருந்த தமிழின துரோகி நடத்தும் தமிழ் மாநாட்டுக்கு தேவையான உதவி அனைத்தையும் செய்து நாமும் வாய் சொல் வீரர் என மனசுக்குள் சொல்வோம்."

அ. தமிழினத் துரோகி நடத்தும் தமிழ் மாநாடு (30-5-10)
ஆ. தமிழகம் இழைத்த துரோகம் (31-5-10)
இ. தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு (1-6-10)
ஈ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1 (10-6-10)
உ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 2 (17-6-10)
ஊ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 3 (14-6-10)
எ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 4  (23-6-10)
ஏ. தமிழ்ப் புழுக்கள் (23-6-10)
ஐ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 5 (23-6-10)
ஒ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 6 (25-6-10)
ஓ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 7 (26-6-10)
ஔ. "உலகத்" தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 8 (26-6-10)

12. வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் திட்டத்திலிருந்திலிருந்து இலங்கையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டாலும், பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கு இலங்கை அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஐரோப்பியர் மனிதர்கள், இந்தியர்கள் இருதயமற்றவர்கள் (6-7-10)

13. இலங்கைக்கு போனீங்க காலை வெட்டிப்புடுவன் என்ற இடுகைக்கு சில திருத்தங்கள்:
இலங்கை அரசுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் - 2 (8-7-10)

14. தமிழ்நாட்டு மக்களின் (நம்) மீது முத்துக் குமாருக்கு இருந்த நம்பிக்கை கண்கலங்க வைக்கிறது. தன் உடலை துருப்புச் சீட்டாக்குமாறு திட்டம் சொல்லி உடல் நீத்த முத்துக்குமாரின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்து விட்டோம்?!

அவரது மரண அறிக்கையை நகல் எடுத்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் கூட நிறைவேறவில்லை. பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து உலகெங்கும் இந்த நியாயத்துக்கான குரலைக் கொண்டு சேர்ப்போம்.

விதியே விதியே என்செய நினைத்திட்டாய் (14-7-10)
அ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 1 உழைக்கும் தமிழ் மக்களுக்கு (15-7-10)
ஆ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 2 சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
இ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு (16-7-10)
ஈ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 4 வெளிமாநிலத்தவருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 5 காவல் துறையினருக்கு (16-7-10)
உ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 6 தமிழீழ மக்களுக்கு (16-7-10)
ஊ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 7 சர்வதேச சமூகத்துக்கு (16-7-10)
எ. முத்துக்குமாரின் இறுதி வேண்டுகோள் - 8 பதினான்கு அம்ச கோரிக்கைகள் (16-7-10)

15. போர்க் குற்றங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர்கள் ஆட்சியிலும், ஃபொனெஸ்கோ எதிர்க்கட்சியிலும் இருப்பதால், அவை தொடர்பான விசாரணைகளும் மேல் நடவடிக்கைகளும் சாத்தியமில்லை

ஈழப் போர்க் குற்றவாளிகள்! (02-12-10)

கருத்துகள் இல்லை: