சனி, மே 07, 2011

காங்கிரசைத் தோற்கடிப்போம் முன்னணி

கண்ணனிடமிருந்து மின்னஞ்சல்

வேலூரில் காங்கிரசு எதிர்ப்பு பரப்புரையை நடத்தி முடித்த "காங்கிரசு எதிர்ப்பு முன்னணி" யின் மீளாய்வு கூட்டம் கடந்த 22/4/2011 அன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. அதில் வேலூர் பரப்புரையின் நிறை/குறைகள் விவாதிக்கப்பட்டன.

மேலும் '2014 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் தமிழர்களுக்கான அரசியல் தேவையும், அரசியல் மாற்றமும்' பேசப்பட்டன.

'மே 13 தேர்தல் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் காங்கிரசு பெரும் தோல்வியை தழுவும் தருணத்தில் நாம் எப்படி வினையாற்றப் போகிறோம்' என்ற விடயங்கள் பேசப்பட்டன.

இறுதியாக '63 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்த இயக்கங்களை ஒன்று திரட்டி சென்னையில் "காங்கிரசின் தோல்வி, தமிழர்களின் வெற்றி" என்ற ஒற்றை முழக்கத்தை முன் வைத்து சென்னையில் பெரிய விழா ஒன்றினை நடத்த' முடிவுசெய்யப்பட்டது.

'அதே போல காங்கிரசு தோல்வி பெறும் தொகுதிகளிலும் மீண்டும் மக்களை சந்தித்து நன்றியினையும் தெரிவித்துக்கொள்ளும் முறைகளையும் வாய்ப்பு இருந்தால் தெருமுனைகூட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் ' எனப் பேசப்பட்டன.

மேற்குறிப்பிட்ட கருத்தினை ஒத்த அமைப்புகள் அல்லது தனி நபர்கள் கீழே குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி
9940963131/9003154128

கருத்துகள் இல்லை: