சனி, மே 14, 2011

10. அதிகாரக் குவிப்பு (இலங்கை போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை)

==============
இலங்கையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் இயக்குத்துக்கும் நடுவே நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்த ஐநா சபை நிபுணர்கள் குழு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு (முதல் 12 பக்கங்கள் மட்டும்) ஆங்கில மூலம்
==============
அரசமைப்புச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் மற்றும் முறையீட்டு நீதிமன்றங்களின் தலைவர் மற்றும் நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை வரையறுக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை நியமிப்பதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படிப்பட்ட தேர்வுகளைப் பயன்படுத்திக் கொண்ட தற்போதைய அரசின் மீது குடும்ப அரசியல் நடத்துவதான குற்றச்சாட்டுகளை உள்ளன (10)

36. நெருக்கடி நிலை ஆட்சியின் கீழ் நீண்ட காலங்கள் இருப்பது, அரசியல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நெருக்கடி நிலைமை விதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை இன்னும் அதிகமாக்கியதோடு நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஒரு பக்க சார்பை அதிகப்படுத்தி சுதந்திரமான கட்டுப்பாடுகளையும் சமநிலைப்படுத்தலையும் பலவீனப்படுத்தியது.

நெருக்கடி நிலை ஆட்சி முறை 1983லிருந்து 2001 வரை 1989ல் ஒரு சிறு இடைவெளியுடன் இருந்தது, திரும்பவும் 2005லிருந்து இப்போது வரை நடைமுறையில் இருக்கிறது.

தற்போது அமலில் இருக்கும் (11) 1979 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான நெருக்கடி நிலை கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்கு அசாதரணமான அதிகாரத்தைக் கொடுத்து அதிகார முறைகேடுகள் மற்றும் உரிமை மீறல்களை தட்டிக் கேட்கும் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பெரிதும் மட்டுப்படுத்துகின்றன. மற்ற சட்டங்களும் அரசின் கடமையான பல்வேறு உரிமை மீறல்களை விசாரிப்பதை பலவீனப்படுத்தின.

குறிப்பாக பிணைச் சட்டம் எண் 20, 1982 (ஆகஸ்டு 1977க்கும் டிசம்பர் 16, 1988க்கும் இடையே அமலில் இருந்தது)ன் படி, எந்த ஒரு அமைச்சர் , சிவில் அல்லது ராணுவ அதிகாரிகள், அல்லது அவர்களின் கட்டளையின் கீழ் பணியாற்றும் யார் மீதும், சட்டப்படியோ அல்லது சட்ட விரோதமாகவோ சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு நல்ல எண்ணத்தில் எடுக்கும் செயல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுப்பதை தடை செய்யப்படுகிறது. இத்தகைய சட்டப் பாதுகாப்பை வழங்குவதன் இந்தப் பிணை சட்டம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது.

37. இந்த சட்டங்கள் காணாமல் போதல், சட்ட விரோத கொலைகள், சித்திரவதை போன்ற மனித உரிமை மீறல்கள் நடப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கின. அந்தக் கொடுமைகளுக்கு எதிராக முறையான சட்ட மற்றும் அரசியல் சட்ட பாதுகாப்புகள் இருந்தும் அவை பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் போயின, (12). பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சுரண்டல்கள் போன்ற பாலினம் தொடர்பான வன்முறைகளும் அவற்றுக்கு எதிரான சட்ட பாதுகாப்பு இருந்தும் பரவலாக நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து நிகழ்ந்த  'தன்னிச்சையற்று ஆள் காணாமல் போவது மற்றும் மற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றிய குடியரசுத் தலைவர் ஆணையங்களின் விசாரணைகள் பல,  முக்கியமான உண்மை அறியும் பணியைப் புரிந்தன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமோ, மீறல்களின் அமைப்பு ரீதியான இயல்பையோ அவற்றால் வெளிக் கொண்டு வர முடியவில்லை. இந்த அளவில், விசாரணை ஆணையங்கள், சட்ட விரோதச் செயல்களை கட்டுப்படுத்தவோ, உண்மையை நிலைநாட்டவோ, நியாயத்தை நிலைநாட்டவோ போதுமான கருவிகளாக இருக்கவில்லை.

38. அரசு அமைப்புகளை வலுவாக்கவும், அவற்றின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் 2001ல் 17வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் முடிந்தன. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்கு சட்ட பூர்வமான கட்டுப்பாடுகளை அளிப்பதைக் நோக்கமாகக் கொண்ட அந்தத் திருத்தம், காவல்துறை, தேர்தல், மனித உரிமை, லஞ்சம், நிதி, மற்றும் பொதுத்துறை ஆணையங்களுக்கான நியமனங்களை மேற்பார்வை செய்ய ஒரு சுதந்திரமான அரசியல் சட்ட குழுமத்தை உருவாக்கியது. இந்தக் குழுமம் உயர் நீதித்துறை அலுலர்கள், பணியாளர் ஆணையம், அரசு வழக்கறிஞர்கள் போன்ற உயர் பதவி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது.

(10) தற்போதைய அரசாங்கத்தில் குடியரசுத் தலைவரின் மூன்று சகோதரர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார்கள். ஒரு சகோதரர் கோத்தபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சராக போரின் இறுதி ஆண்டுகள் முழுவதிலும் பணியாற்றி, இப்போதும் அந்தப் பதவியை கையில் வைத்திருக்கிறார்.. இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ச, குடியரசுத் தலைவரின் மூத்த ஆலோசகர் பதவியை வைத்துக் கொண்டு பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவரின் வடக்கு மாநில மறுகுடியிருப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான செயல்குழுவின் தலைவராக இருக்கிறார். மூன்றாவது சகோதரர் சமல் ராஜபக்ச, மக்களவையின் சபாநாயகராக பணிபுரிகிறார். இன்னும் பல உறவினர்கள் அரசின் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்

(11) கெசட் எண் No. 1405/14 (EMPPR 2005, கெசட் எண் 1651/24, மே 2, 2010ல் திருத்தப்பட்டது)ல் வெளியிடப்பட்ட 2005ன் அவசர நிலை (பல்வேறுபட்ட அனுமதிகளும் அதிகாரங்களும்) ஒழுங்குபடுத்தல் எண். 1 ஐப் பார்க்கவும், பொது பாதுகாப்பு ஆணையின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட கெசட் எண் No. 1474/5 (EPPTSTAR 2006, திருத்தப்பட்ட வடிவில்)ல் வெளியான 2006ன் அவசர நிலை
(பயங்கரவாதம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களை தடுப்பதும் தடை செய்வதும்) ஒழுங்குபடுத்தல் எண் 7 ஐப் பார்க்கவும்.

(12) சட்ட விரோதமான, உடனடி, காரணமற்ற கொலைகள் பற்றிய சிறப்பு அறிக்கை ஃபிலிப் அல்ஸ்டன் - இலங்கை தூதகம் (E/CN.4/2006/53/Add.5); கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போனவர்கள் குறித்த செயல் குழுவின் அறிக்கை (E.CN.4/2000/64/Add.1); சித்திரவதைக்கு எதிரான ஆணையத்தின் முடிவுகளும் பரிந்துரைகளும்:
இலங்கை (CAT/C/LKA/CO/2). குறிப்பிட்ட குற்றச் சட்டம் இல்லாத ஆள் காணாமல் போவதைத் தவிர மற்ற குற்றங்களுக்கு குற்றச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவு பொருப்பு நிர்ணயத்துக்கான வழிகளை குறிப்பிட்டுள்ளன. 

 (தொடரும்)

2 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருப்பின் பார்க்கவும் ...

அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி

மா சிவகுமார் சொன்னது…

நன்றி வேடந்தாங்கல் கருன்.

அன்புடன், மா சிவகுமார்