வியாழன், ஏப்ரல் 20, 2006

மோடி என்ற மோடி மஸ்தான் - 2

நரேந்திர மோடி பாணி தீவிர அரசியலில் ஒரு பயங்கரம் என்ன என்றால் அவர்கள் தமது கொள்கைகளிலும், பின்பற்றும் வழிகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் கொண்டிருப்பார்கள். முற்போக்கு தாராள அரசியல்வாதிகளுக்கும் பொதுவாக சாதாரண மனிதர்களுக்கும் இருக்கும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சுய சந்தேகங்கள் இவர்களுக்கு வருவதே இல்லை. இளம் வயதிலியே, தமது தேர்ந்தெடுத்த வழியில் இறங்கி விடும் இவர்களுக்கு பிறரின் கருத்துகளிலும் நியாயம் இருக்கக் கூடும் என்ற எண்ணமே வந்து விடாது.

பொதுவாக மதத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத அமைப்புகள் இப்படி மாறி விடுகின்றன. அது எந்த மதமாக் இருந்தாலும் சரி. எம்மதமும் சம்மதம் என்று சொல்லும் இந்து மதமாயிருந்தாலும், மனித நேயமே கடவுளுக்கு செய்யும் தொண்டு என்று போதிக்கும் கிறித்துவ மதமாயிருந்தாலும், வாழ்க்கையையே தவமாய் நடத்தும் இசுலாமாயிருந்தாலும், மதத்தீவிரவாதம் என்று வந்து விட்டால் அது மனித நலன்களுக்கு எதிராக மாறி விடுகிறது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Ippadi oru paathivaithan ethirpathen ....

saathi oliya ,Madha sandaigal oliya neer soluvathuthan 100/100 unmai

Swamy red bull