வியாழன், மார்ச் 10, 2011

மீனவர் ராஜா முகமது

பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்து படுக்கையாக இருக்கும் மீனவர் ராஜா முகமது பற்றி ரோசா வசந்தின் இடுகையிலிருந்து

"ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜா முகமது என்பவர், பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் சிக்கி, பாதிக்கப்பட்டு, தீவிர தீக்காயங்களுடன் படுக்கையில் இன்னமும் போராடி வருவது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பது போன்ற மற்ற செய்திகளில் இவர் மறக்கப்பட்டு விட்டார்.

அரசு தரப்பில் அவருக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக செலவு செய்து, மேலும் செலவு செய்து, அவரை கவனிக்கும் வசதியில்லாமல் வேறு ஒரு இடத்தில் அவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

மீனவர்கள் கொல்லப்பட்டால் கிடைக்கும் நஷ்ட ஈடும், கவனமும் காயம் பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்ட ராஜாமுகமதை அவரது வீட்டில், அண்மையில் மீனவர் நிலை குறித்து அறியும் நோக்கத்துடன் பயணம் சென்ற நாங்கள், தோழர் ராமநாதன் உதவியுடன் சந்தித்தோம். அவரது நிலை மனதை உருக்கக் கூடியதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக (கேசட் காலியானதால்) வீடியோ எடுக்க இயலவில்லை. புகைப்படம் எடுத்ததுடன், அவரது பேச்சை அலைபேசியில் பதிவு செய்தோம்."

வீட்டின் உள்ளறையில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறார் ராஜா முகமது.  உள்ளே வரவேற்று அறைக்குள் அனுப்பும் போது 'ராத்திரி முழுக்க வலியில் தூங்கவேயில்லை' என்று சொல்கிறார் அவரது மனைவி.

அறைக்குள் கட்டிலுக்கு அருகில் நின்று பேசிய உரையாடலின் பதிவு

கருத்துகள் இல்லை: