செவ்வாய், மார்ச் 22, 2011

ஜெகதாபட்டிணம் மீனவர் ஒருவர்

கடலில் சந்திக்கும் தாக்குதல்கள்

'இப்பல்லாம் வந்து போட் நம்பரக் குறிச்சிட்டு போறாங்க. இப்பதான் 2 வாரமா பிரச்சனை இல்லை. ஏன் குறிக்கிறான்னு தெரியலை. நம்ம கரையிலேயே, இங்க வந்துர்ரானுங்க. நம்ம நேவி எப்பவும் வருவது கிடையாது.'

'நாங்க ஒரு 30 வருஷமா தொழில் செய்றோம். அடிச்சு என்னென்னவோ பண்ணியிருக்கானுங்க. நாங்க நம்ம கரையில மீன் பிடிச்சுக்கிட்டிருந்தோம். 10 தடவை மாட்டியிருப்போம். தொழில விட முடியாது. கடல் இல்லைன்னா சாப்பாட்டுக்கு வழியில்லை.'

'50,000 பொருள் எல்லாம் அறுத்து விட்டுருவானுங்க. கண்ணாடி எல்லாம் உடைச்சுவானுங்க.  ஆளுங்களை எல்லாம் அடி. நம்ம கரை அந்த கரை நமக்கு எப்படித் தெரியுது. கடல்ல வந்த அந்தக் கரை, நம்ம கரை என்று தெரியாதுல்ல. இலங்கைக் கடலா, தமிழ்க்கடலா என்று நமக்குத் தெரியாது.'

'தாக்கினதுக்கெல்லாம் பதிவே கிடையாது. அடி வாங்கிட்டு பேசாம இருக்க வேண்டியதுதான்.'

கருத்துகள் இல்லை: