புதன், மார்ச் 23, 2011

அய்யம்பட்டிணம் நாட்டுப் படகு மீனவர்கள்

நாட்டுப் படகு மீனவர்களுக்கும் பாதிப்பு உண்டு

ஜெகதாபட்டிணத்தை அடுத்த அய்யம்பட்டிணத்தில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர் குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

முதலில் இரண்டு இளைஞர்கள் இலங்கை கடற்படையினர் தம்மைத் தாக்கிய அனுபவங்களைப் பற்றி பேசினார்கள்.

  • தினமும் நடக்கின்றன
  • பொருட்களை பறித்து போய் விடுவார்கள் 
தொடர்ந்து மீனவர் சங்கத் தலைவர் பேசினார்
  • கடலுக்குப் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, 7 மைலுக்கு மேல் போக முடியவில்லை. 
  • எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் தொழிலே செய்ய முடியாது. 
  • சின்ன குளம் மாதிரிதான் இந்த கடல். 14, 15 மைல் தூரத்திலேயே அவங்க நேவி வருகிறார்கள்.
  • தொழில் பார்க்க ஆர்வம் இல்லாம போய் விட்டது.
  • பரவலை தொழில்தான் முக்கியம், பெரிய மீன் பிடிப்பது - வஞ்சிரம், சாளை பிடிப்பது
  • அந்தத் தொழிலுக்குப் போக முடியாமல் வலைகளை குவித்து வைத்து விட்டோம். 
  • தாக்குதல், உயிரிழப்பு இல்லை. அடிபிடி சண்டை போன மாசம் வரை நடந்தது

கருத்துகள் இல்லை: