செவ்வாய், மார்ச் 22, 2011

ஜெகதாபட்டிணம் மீனவர் தலைவர் + கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள்

ஒலிக்கோப்பு

மார்ச் 6ம் தேதி ஜெகதாபட்டிணம் மீனவர்கள் தலைவரை அவரது வீட்டில் சந்தித்தோம். வீட்டின் முன்பு பல் துலக்கிக் கொண்டிருந்த அவர் பேசியதன் பதிவுகள்.

ரோசாவசந்த் முதலில் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். தொடர்ந்து மீனவர் தலைவர் பேசுகிறார்.

'கச்சத் தீவை தாரை வார்த்ததிலிருந்தே இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் அவங்களோட கைகோர்த்து நிக்கிறாங்க. பிரபாகரன் இறந்த பிறகு ரொம்ப மோசமாயிருக்கு. அவர் இருக்கும் போது இந்த மாதிரி நடப்பது இல்லை.'

'எல்லை தாண்டி அந்த மீனவர்களும் வராங்க, நம்ம மீனவர்களும் போறாங்க, இல்லைன்னு சொல்லலை. ரொம்ப மோசமாக முறையில சித்தரவதை பண்றாங்க.'

'ஆரம்பத்தில போயிருக்கேன். எங்க படகில என்னையே வந்து ஐஸ் எல்லாம் ஆணுறுப்புற வைத்து சித்திரவதை படுத்தினான்'

ஒரு கட்டத்தில் இரு சக்கர வண்டியில் கடலோரக் கடற்படையைச் சேர்ந்த இரண்டு பேர் வந்து ஆங்கிலத்தில் 'any problem' என்று கேட்கிறார்கள்.

தொடர்ந்து ஆங்கிலத்தில், நாங்கள் அவர்களிடம் பேசியது பதிவாகியிருக்கிறது.

'அது நமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்டது. அது நமது தவறு. யாரும் எல்லை தாண்டக் கூடாது என்று ஒரு முடிவு செய்திருக்கிறோம்'.

'இலங்கை நேவி இந்திய எல்லைக்குள் வருவதற்கு எங்களுக்கு ஆதாரம் கிடைப்பதில்லை. 24 மணி நேரமும் கண்காணிப்பது சாத்தியமில்லை. எங்களுக்குத் தகவல் வந்தால் அதை மேலிடத்துக்கு அனுப்புவோம்.'

'தகவல்கள் எங்களுக்குச் சரிவர வந்து சேருவதில்லை. தமிழ் தெரிந்தவர்கள் இந்த பகுதியில் இல்லை. இது ஒரு பிரச்சனைதான். ரோந்து போகும் போது 3 பேர் போகிறோம். எங்களுக்கு தமிழ் தெரியாது என்பது தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு தடைதான்'

கருத்துகள் இல்லை: